உண்மைய சொன்னேன்
1.அழகான பொண்ணு சிரிச்சிட்டு போன அடுத்த ரெண்டு செகன்ட்குள்ள பையன் கட்டுற மனக்கோட்டை இருக்கே! ராஜராஜசோழனால கூட கட்ட முடியாது!
2. Facebook பெண்கள் அழகாய் இருகிறார்களோ இல்லையோ அவர்கள் வைக்கும் profile picture அழகாக இருக்கிறது !!
3.மரண வலியை உணர்ந்தேன்..மாசக்கடைசியில
எவனாவது சரக்கடிச்சுட்டு சலம்பிகிட்டு திரியுறதை
பார்க்கும்போது..
4.மச்சி.. நமக்கு ஆயிரம் பிகர் மடியும் என அட்வைஸ் செய்யும் ஒருவனுக்கு கூட ஒரு பிகர் கூட மடிந்திருக்காது..
5.நாளை முதல் குடிக்க கூடாது என முடிவெடுத்து விட்டீர்கள் என்றால் , இன்றைக்கு வழக்கத்தை விட எக்ஸ்ட்ரா ஒரு குவாட்டர் அடிக்க ப்ளான் பண்ணி விட்டீர்கள் என்று அர்த்தம்
6."எக்ஸ்க்யூஸ் மீ" என்ற வார்த்தை "நகருடா சனியனே" என்ற டோன்லேயே பலப் பெண்களால் சொல்லப்படுகிறது
7.தேன் நிலவுக்கு போனதிலிருந்தே வாழ்க்கையின் அமாவாசை தொடங்கிவிடுகிறது
8.தான் எவ்வளவு துயரத்தில் இருத்த போதிலும் மதுப்பழக்கம் இல்லாத தன் நண்பனை பாருக்குக் கூப்பிடாதவனே உண்மையான நண்பன்..
9.பனை மரம் போல உயரமாக வளரவேண்டுமென்று விரும்பினால் பனங்கொட்டையாகப் பிறந்திருக்க வேண்டும்! காம்ப்ளான் குடித்துப் பயனில்லை
10.வாடையே வராத சிகரெட்டும் சரக்கும் இருந்திருந்தால் ஆண்கள் இன்னும் அதிக சந்தோஷமாய் இருந்திருப்பார்கள்.
@ களவாணி பய
Share |
Show commentsOpen link
No comments:
Post a Comment