Saturday, August 31, 2013

விவாகரத்து tamil story of divorce

இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ?
படிச்சுப் பாருங்க கண்டிப்பா சிரிப்பிங்க
அல்லது சிந்திப்பீங்க.

கோர்ட்டில் அந்த
விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எட
கொள்ளப் பட்டது.

பிரதிவாதியான
மனைவி தன் கணவர் தன் மேல்
அபாண்டமாகப் பழி போட்டு இந்த
விவாகரத்தைக் கேட்டிருப்பதாக
வாதாடியதைத்
தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல்
குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.
“அடிப்படையில் உங்களுக்குள் என்ன
பிரச்சினை?”

“அடுப்படியில பிரச்சினை எதுவும்
இல்லைங்க”

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”

“எங்க கடையில
தகராறு எதுவுமில்லையே,
நல்லாத்தானே ஓடுது?”

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன
சங்கடம் என்று அறிய கோர்ட்
விரும்புகிறது”

“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க
யாருமில்லைங்க.
இருந்தாத்தானே சங்கடம்”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

“அவரு கருப்புதாங்க. நானும்
கறுப்புதான… அதனால
வேறுபாடு ஏதும் இல்லைங்க”

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை,
மாசம் ஒண்ணாம்
தேதி வாடகையை வாங்கிட்டு அவரு ப
போயிடறாரு”

இதற்கு மேல் அவரால் தாங்க
முடியவில்லை.

“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்”

என்று அலறி விட்டு இருமினார்.

“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம்
ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க
நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க…
உங்களுக்கென்ன ரத்தக்
கொதிப்பா வந்திரிச்சு?

இது அபாண்டம்தானே?”

Friday, August 30, 2013

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும்
கடினமான வயது.
1) உங்கள் காதலிக்கு திருமணம்
ஆகி இருக்கும்.
2) அப்போது தான் வேலை தேட
ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவ
ர்களின் பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க உறுப்படப்போது?"
என்பது
போன்றே இருக்கும்.
3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள்
கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத்
தயங்குவார்கள்.உ
ங்களுக்கு வயதாகி விட்டது போல்
எண்ணுவார்கள்.
4) கார்ட்டூனை ரசிப்பது போல்
செய்திகளையும்
ரசிப்பீர்கள்.
5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய
அனைத்தையும் உங்களால் சாப்பிட
முடியாது.
6) தினமும் shave செய்யாவிட்டால்,
வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.
7) ஞாயிற்று கிழமைகளில்
விளையாடும் கிரிக்கெட் மேட்ச்
க்கு உங்களை கூப்பிட உங்கள்
தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.
8. உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ ,
சுப நிகழ்ச்சிகளுக்க
ு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம்
எப்போது திருமணம் என்பார்கள்?மாமா
க்களோ உன் career பத்தி என்ன
முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?
9) இந்த உலகை வெல்வதற்கான
அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம்
நிறைந்திருக்கும்.ஆனால்
சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும்
குறைவாக இருக்கும்.
10) இந்த உலகைப்
பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக்
கற்பிக்கப் பட்டதோ, அது அத்தனையும்
ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு த
ும்.
11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில்
தேர்ச்சி பெற்ற பின்னர் கூட ,
வேலை கிடைத்திருக்காது.
12) சிபாரிசு என்றவுடன்
வேலை கிடைக்கும்.இங்க
ு எல்லாமே அரசியல் தான்
என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.
13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.
காதலை விட நட்புச்
சிறந்தது என்று உணர்வீர்கள் .
14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக
கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக்
கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள்
வைத்திருக்கும் அதீத
நம்பிக்கை மட்டுமே உங்கள்
மனசாட்சியை வழி நடத்தும்.
15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான்
எதிர்க்கொள்ளப் போகிறோம்
என்று சற்றும் எதிர்பார்க்காத
ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக்
கொண்டிருப்பீர்கள்.
# எந்த அளவுக்கு துல்லியமாய்
எழுதி இருக்கிறேன் என்றுத்
தெரியாது. இதைப் படிக்கையில் நீங்கள்
மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்
ளுங்கள்.

Thursday, August 29, 2013

Power star Return தமிழ்நாட்டில் பவர் போயாச்சி, பவர்ஸ்டார் ரிட்டன் வந்தாச்சி


தமிழ்நாட்டில் பவர் போயாச்சி, பவர்ஸ்டார் ரிட்டன் வந்தாச்சி.


தமிழகத்தில் சில மாதங்களாக இல்லாமல் இருந்த பவர் கட் பிரச்சினை தற்போது மீண்டும் வந்துள்ளது, கடந்த சில நாட்களாக மின் வெட்டு மீண்டும் மக்களை மிரட்டுகிறது. இதை சமன் செய்யும் விதமாக புழல், பாளையங்கோட்டை என்று தமிழ்நாட்டு ஜெயில்களை விசிட் அடித்த பவர் ஸ்டார் சீனிவாசன் டில்லி தொழில் அதிபர் அளித்த மோசடி புகாரால் திஹார் ஜெயில் ரொட்டி தின்று கொண்டு இருந்தவர் நேற்று விடுதலையாகி தமிழகம் திரும்பினார்.

இன்று பேட்டியளித்த பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியபோது

“சிறை எனக்கு ஆசிரமம் போல தெரிந்தது. அங்கு பணிபுரியும் தமிழக போலீசார் என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தற்போது அவர்கள் எல்லாம் என் ரசிகர்கள்.

நான் சிறை சென்ற காலத்தில் தமிழ்சினிமா உலகல் என்னை மிஸ் பண்ணி இருக்கும். என்னுடைய சொந்தத் தயாரிப்பான ஆனந்த தொல்லை படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்றும் கூறினார்.

# 11பேர் கொண்ட குழுவும் உங்களோடு இருந்தார்களா பவர்?

Wednesday, August 28, 2013

பெண்களின் அந்த மூன்று நாட்கள் பெண்கள் சமைத்த சாப்பாடு ladies special

தமிழ் - Tamil:
ஒசோவிடம் #துறவி ஒருவர் சொன்னார்.. "நான் #பெண்கள் சமைத்த சாப்பாட்டை சாப்பிடுவதில்லை. அதில் #தீட்டு இருக்கிறது.." என்று..
#ஓசோ #விளக்கம் கேட்டதற்கு அதில் பெண்களின் அந்த மூன்று நாட்கள், புனிதம், கெட்ட அலைகள் வைப்பிரேஷன்(Vibration -அதிர்வுகள்) என்று பெரிய லெக்சரே (Lecture --விரிவுரை) கொடுத்தார் அந்த துறவி.

ஓசோ இரண்டு தட்டில் சாப்பாட்டை வரழைத்து சொன்னார் துறவியிடம்...

"ஒரு தட்டில் இருக்கும் சாப்பாடு பெண் ஒருத்தி சமைத்தது.. இன்னொரு தட்டில் இருக்கும் சாப்பாடு ஆச்சாரமாண ஒரு பிராமண #ஆண் தயாரித்தது.. இரண்டில் பெண் சமைத்த சாப்பாட்டை நீங்கள் கூறும் கெட்ட அலை வைப்பிரேஷன் அல்லது புனிதம் பார்த்து கண்டுபிடியுங்கள்"

துறவி அப்போதே துண்டைக் காணோம்.. துணியைக் காணோம் என்று ஓட்டம் பிடித்தார் ஓசோவிடமிருந்து....

---------------------------------------
தொடர்புபட்ட செய்தி: ஒரு குறிப்பிட்ட சாதியினர் சமைக்கும் சாப்பாட்டை சாப்பிட மாட்டோம் – ராஜபாளையம் அருகே கே.கம்மாபட்டி #மாணவிகள் ஓராண்டாக தொடர் போராட்டம்...

திருமாவளவனுக்கு பயப்படுகிறதா ஊடகங்கள்?

சற்றுமுன் செய்திகள்:
திருமாவளவனுக்கு பயப்படுகிறதா ஊடகங்கள்? கவிதா அளித்த புகார் குறித்து விரிவான செய்திகள் போட மறுக்கும் ஊடகங்கள். இது தொடர்பாக மீடியாக்கள் சில வரி செய்திகளாக மட்டும் கூறிவிட்டு சென்று விட்டன.

ஊடகங்களுக்கு ஒரு நிகழ்வு கிடைத்தால் அதை பெரிய சென்சேஷனல் நியூஸ் ஆக்கி அதில் டி ஆர் பி ரேட்டிங் ஏற்றி விற்காமல் விடமாட்டார்கள், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளன் மீது கவிதா என்ற பெண்மணி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்ற கடுமையான புகாரை வைத்த போதும் இது ஒரு பெரிய சென்சேஷனல் செய்தியாக இருந்த போதும்
இது தொடர்பாக மீடியாக்கள் சில வரி செய்திகளாக மட்டும் கூறிவிட்டு சென்று விட்டன.

கிழிந்த நோட்டு - True Story

கிழிந்த நோட்டு...


புதிய நூறு ருபாய் நோட்டு தான்......ஆனால், பாக்கெட்டில் போடும்போதோ, எடுக்கும்போதோ எப்படியோ கிழிந்துவிட்டிருந்தது ..'மாசக் கடைசி, செலவுக்கு நெருக்கடியாக இருக்கிறது...எப்படியாவது இதை மாற்றியாக வேண்டுமே...' என்று சிந்தித்த எனக்கு சட்டென நினைவுக்கு வந்தது இட்லிக் கடை பாட்டிதான்...

'பாட்டிக்கு சற்று மங்கலாகத்தான் கண் தெரியும். கொடுத்த பணத்தை அப்படியே வாங்கிப் போட்டுக் கொள்ளும் அவரை ஏமாற்றுவது சுலபம்'. என்று நினைத்தேன்.

கிழிந்த இடத்தை செலபான் டேப் போட்டு ஒட்டி எடுத்துக் கொண்டு, பாட்டியின் கடைக்குப் போனேன்..நான்கு இட்லி, இரண்டு தோசை சாப்பிட்டேன். 
அந்த நூறு ருபாய் நோட்டை எடுக்கப் போனபோது, இன்னொருவன் கொடுத்த ஐம்பது ருபாய் நோட்டை என்னிடம் நீட்டினாள் பாட்டி.

"தம்பி, இந்த நோட்டு நல்லா இருக்கான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுப்பா....கண்ணு சரியா தெரியாததால, நிறைய பேர் கிழிஞ்ச நோட்டையும் , செல்லாத பணத்தையும் கொடுத்து ஏமாத்திடறாங்க...வயித்துக்கு சாப்பிடுற விஷயத்துல ஏமாத்தறவங்க உருப்படுவாங்களா, சொல்லு?..பார்க்கறதுக்கு நல்லவன் மாதிரி தெரியறே....அதான் உன்னை நம்பி பார்க்கச் சொல்றேன்!!"

எனக்கு செருப்பால் அடி வாங்கின மாதிரி இருந்தது..

"நல்ல நோட்டுதான் பாட்டி...." என்றவன், நான் சாப்பிடதற்குப் பணம் கொடுத்துவிட்டு வந்தேன் வேறு நல்ல நோட்டை!!..

Tuesday, August 27, 2013

"மனிதநேயம் கொண்ட காவல் அதிகாரி திரு. சபரிராஜ்"

தமிழால் இணைவோம்:
"மனிதநேயம் கொண்ட காவல் அதிகாரி திரு. சபரிராஜ்"
***********************

நேர்மையான காவல் அதிகாரியை பற்றி நிறைய படித்திருக்கிறோம் அறிந்திருக்கிறோம் , ஆனால் ஈரநெஞ்சம் கொண்ட காவல் அதிகாரியை பற்றி அறிந்திருப்போமா ? அப்படிப்பட்ட ஈரநெஞ்சம் கொண்ட காவல் அதிகாரிதான். திரு,சபரிராஜ், இவர் கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர், SSI யாக பணியாற்றுகிறார். 48 வயதான இவர் தனது 28 வருட காவல் பணியில் நேர்மையான அதிகாரியாக மட்டும் இல்லாமல் மனிதநேயம் கொண்ட மனிதராகவும் பணியாற்றிவருகிறார். குற்றங்கள் தடுப்பதும் , குற்றம் புரிந்த குற்றவாளிகளை திறன் பட கண்டுபிடிப்பதும், நன்னடத்தைக்காக நன்னடத்தை விருதும் பல காவலர்களுக்கு மதிப்பை கூட்டும் . அப்படிப்பட்ட காவலர்களில் திரு. சபரிராஜ் அவரும் ஒருவர். இவருக்கு மனிதநேயம் கொண்ட மாமனிதர் என்ற இயற்கையால் அளிக்கபப்ட்ட நற்சான்றும் ஒன்று இருக்கிறது .

ஒரு சந்திப்பில் அவரை பற்றி அவர் கூறும்போது .

"ஆமாங்க.. ரயில்வே காவலராக இருப்பதனால் இரயில் விபத்து, மற்றும் தற்கொலை என பல அடையாளம் தெரியாத சடலங்கள் அடக்கம் பண்ணவேண்டி இருக்கும், அப்போது அந்த சடலங்களை அரசு மயானத்தில் புதைக்க வேண்டும், புதைத்த இடம் அடையாளம் தெரிந்து கொள்வதற்காக மட்டும் மயானத்திற்கு போனால் போதும். ஆனால் நான், இறந்தவர்கள் நல்ல நிலையில் குடும்பத்துடன் வாழ்ந்திருப்பார்கள், அவர்கள் அனாதையாக போக கூடாது என்ற எண்ணத்தில் என்னுடைய சொந்த உறவினராக எண்ணி இறந்தவர்களின் சடலங்களை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு என்னுடைய சொந்த செலவில் சடங்குகள் செய்து அடக்கம் செய்து வருகிறேன். இதுவரை சுமார் 300 க்கும் மேற்ப்பட்ட சடலங்களை என்னுடைய சொந்தங்களாக எண்ணி அடக்கம் செய்து இருக்கிறேன். மேலும் வயதானவர்கள் ஊர் செல்ல டிக்கெட் எடுக்க முடியவில்லை என்றால் அவர்களது அவசியம் அறிந்து டிக்கெட் எடுத்து ஊருக்கு அனுப்பி வைப்பேன். வீட்டில் கோவித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ரயிலில் வருபவர்களையும் , இரயிலில் தற்கொலை செய்துக்கொள்ள வந்த பத்திற்கும் மேற்ப்பட்டவர்களையும் காப்பாற்றி அவர்களுக்கு நல்ல புத்திமதிகளை சொல்லி பாதுகாப்புடன் விட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறேன்" என்றார்.

மேலும் இவர் சொல்லும் போது கடந்த சிலநாட்களுக்கு முன் 75 வயதான ஒரு மூதாட்டி இரவு 11 மணியளவில் தண்டவாளம் கடக்க முடியாமல் எதிர்புறம் இரயில் வருவதும் கூட தெரியாமல் தண்டவாளத்திலேயே நடந்து கொண்டிருப்பதை அறிந்து . சபரிராஜ் அவர்கள் விரைந்து காப்பாற்றி அவரை அவரது அறைக்கு அழைத்து சென்று விபரம் கேட்க அந்த மூதாட்டி தனது பெயர் அருக்காணி என்றும் தனது முகவரி நினைவு இல்லை என்றும் ஊர் திருப்பூரில் வஞ்சிப்பாளையம் , வளைய பாளையம், பாலையங்காடு எனவும் உளறிக்கொண்டு இருந்தாராம், இதை வைத்துக்கொண்டு பாட்டியின் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் பாட்டி சொன்ன ஊர்களில் எல்லாம் பாட்டியை பற்றி விசாரித்து இருக்கிறார். பலரிடம் புகைப்படத்தை காட்டி பாட்டியை தெரியுமா என்று கேட்க்க யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்று சொல்லவும் , விடாமுயற்சி கொண்டு அடுத்தநாள் பகலிலும் தேட ஆரம்பித்து இருக்கிறார். உணவு கூட உண்ணாமல் பாட்டியின் உறவினர்களை தொடர்ந்து தேடியிருக்கிறார். சுமார் 100 கிலோ மீட்டர் அலைந்தும் பயனளிக்கவில்லை, இறுதிக்கட்ட முடிவாக பாட்டியை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பாட்டி சொன்ன ஊருக்கெல்லாம் மீண்டும் அழைத்து சென்று இருக்கிறார் இறுதியில் அன்று மாலை குருசாமி என்பவரை சந்தித்து ஆட்டோவில் இருக்கும் பாட்டியை காட்டி இவரை தெரியுமா என கேட்க அந்த முதியவர் உற்று கவனித்து கொஞ்சம் யோசித்துவிட்டு "அட இது நம்ம அருக்காணி போல இருக்கே" என்றாராம். சபரிராஜ் அவர்கள் இந்த வார்த்தையால் பெரும் இன்ப மகிழ்ச்சியடைந்து அந்த குருசாமி தாத்தாவை கட்டி பிடித்து ஐயா இந்த பாட்டியை உங்களுக்கு தெரியுமா இவர் யார் எங்கு இருக்கிறார் என கேட்டு நடந்த நிகழ்வையும் கூறி இருக்கிறார் . அந்த குருசாமி தாத்தா இந்த அருக்காணியை நான் பார்த்து 40 வருடங்கள் ஆகிறது , இவளுக்கு சரஸ்வதி என்னும் பெண் இருக்கிறாள். நீண்ட வருடமானதால் அடையாளம் நியாபகம் குறைந்துவிட்டது , அருக்காணி பாலயன்காட்டில் அவளது மகள் சரஸ்வதியுடன் இருந்தார் என்பது மட்டும் அறிந்திருக்கிறேன் என்று கூறி, இருங்கள் சரஸ்வதி அவளுக்கு தகவல் கொடுத்து வரவழைக்கலாம் என சொல்லி சரஸ்வதி அவர்களை வரவழைத்து அருக்காணி பாட்டியோடு அனுப்பிவைத்தாராம். இந்த நிகழ்வு குறித்து சபரிராஜ் அவர்கள் கூறும்போது"எத்தனையோ தவறுகளை செய்தவர்களை, திருடர்களை நாங்கள் தேடி தேடி பிடித்திருக்கிறோம். ஆனால் அதை எல்லாம் விட இப்போது இந்த பாட்டியின் உறவினர்களை தேடி அவர்களை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த போது கிடைத்த மன திருப்தி போல் வாழ்வில் வெற்றி தந்தது எதுவும் இல்லை" என்று மன நிறைவோடு கூறினார்.

கடமைக்கோ, கடனுக்கோ பல அதிகாரிகள் பணியாற்றிவருகிறார்கள், ஆனால் இப்படிப்பட்ட அறிய மனிதர்கள் பணிக்கு அப்பார்ப்பட்டு சேவையாக எண்ணி தங்களை சமூகத்திற்காக அர்ப்பணித்து பணியாற்றுபவர்கள் மிக குறைவு. அப்படிப்பட்ட அறியவர்களில் ஒருவர் திரு,சபரிராஜ் என்பது இந்த சமுதாயம் பெருமைபட வைக்கிறது.

~மகேந்திரன்

Visit our Page -► தமிழால் இணைவோம்

Monday, August 26, 2013

தாங்க முடியாத தலைவலியா ?

தமிழ்ச் சமுதாயம்  -  தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி:
தாங்க முடியாத தலைவலியா ?

தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சாதாரண விஷயம் தலைவலி. தலைவலி என்றாலே எல்லோரும் உடனே ஏதாவது மாத்திரைகளை வாங்கிப்போட்டுக் கொள்கிறோம்.

அதில் சில மருந்துகள் பயன்தரும். சிலவற்றால் பயன் ஏதும் இருக்காது. அதனால் பணம் செலவாவது தான் மிச்சமாக இருக்கும். ஆகவே இவ்வாறு பயன் தராமல் பணச்செலவு வைக்கும் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்வதை தவிர்த்து, வீட்டிலேயே பலன் தரக்கூடிய வீட்டு மருத்துவங்கள் பல இருக்கின்றன.

அவற்றைப் பயன்படுத்தினால், பணம் செலவாகாமல் இருப்பதோடு, தலைவலி விரைவில் குணமாகும். அப்படிப்பட்ட சில வீட்டு மருந்துகளைக் கீழே தருகிறோம். அதைப் படித்து பின்பற்றி, தலைவலியை இயற்கை முறை யில் குணமாக்குங்கள்.

கிராம்பும் உப்பும் கலந்த கலவை :

கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும். இதனால் கல்லுப்பானது தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை படைத்தது. ஆதலால், இக்கலவையிலுள்ள உப்பு, தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்கிறது. அதன் காரணமாக தலைவலியின் தீவிரம் குறைகிறது.

வெந்நீரில் கலந்த எலுமிச்சைச் சாறு :

ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம். பெரும்பாலான தலைவலிகள் வயிற்றில் வாயு உற்பத்தியாவதால் ஏற்படுகின்றன. அத்தகைய தலைவலிகளுக்கு இது சிறந்த பலனைத்தரும். இக்கலவை வயிற்றில் வாயு உற்பத்தியாவதையும் தடுத்து, தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.

யூகலிப்டஸ் தைலம் கொண்டு மசாஜ் :

தலைவலிக்கு மிகவும் சிறப்பான ஒரு மருத்துவம் யூகலிப்டஸ் தைலம் கொண்டு, மசாஜ் செய்தல் ஆகும். இதனைச் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணரமுடியும். யூகலிப்டஸ் தைலம் ஒரு சிறந்த வலி நிவாரணி ஆகும்.

சூடான பால் அருந்துதல் :

சூடான பசும்பால் அருந்துதல் தலைவலியை நன்றாகக் குறைக்க உதவும். மேலும் தலைவலியின் போது, உண வில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுதலும், தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.

பட்டையை அரைத்துத் தடவுதல் :


தலைவலிக்கு மற்றுமொரு சிறப்பான மருத்துவமாகக் கருதப்படுவது, வீட்டில் மசாலாப் பொருட்களுள் ஒன்றான பட்டையை சிறிது தண்ணீர் விட்டு பட்டுப்போல அரைத்து பசைபோலாக்கி, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவ வேண்டும். இதனைத் தடவினால் தலைவலியானது கணப்பொழுதில் மறைந்து விடுவதை உணரலாம்.

மல்லியும் சர்க்கரையும் கலந்து குடித்தல் :

சிறிது மல்லியையும், சர்க்கரையையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து, அதனைக் குடித்தாலும் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒரு வேளை சளிபிடித்ததால் ஏற்பட்ட தலைவலியாக இருந் தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

சந்தனத்தை அரைத்துத் தடவுதல் :

சந்தனக் கட்டையை எடுத்துக்கொண்டு, அதனை சிறிது தண்ணீர் விட்டு பசை போல மென்மையாக அரைத்து எடுத்துக்கொண்டு, அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :

நெற்றியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும். தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது. ஆகவே, கோடைக்காலத்தில் தலைவலியால் அவஸ்தைப்பட்டால், இம்மருத்துவம் நல்ல பலனைத் தரும்.

சிறிது பூண்டு ஜுஸ் அருந்துதல் :

சிறிது பூண்டுப்பற்களை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து ஜுஸ் எடுத்து, இந்த ஜுஸை ஒரு டீஸ்பூனாவது அருந்த வேண்டும். இதனால் குடித்த பூண்டுச்சாறு தலைப்பகுதிக்குள் ஊடுருவிச் சென்று, வலி நிவாரணி போல செயல்பட்டு, தலைவலியை நன்றாகக் குறைக்கும்.

கால்களை வெந்நீரில் வைத்திருத்தல் :

ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு வைத்திருப்பது, தலைவலிக்கு மற்றொரு வீட்டு மருத்துவமாக செய்யப்பட்டு வருகிறது. இரவு படுக்கப்போகும் முன் பதினைந்து நிமிடங்களாவது, இதனைச் செய்ய வேண்டும்.

சைனஸினால் பாதிக்கப்பட்டு தலைவலியால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், நீண்டகாலமாக தலைவலியினால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், இம்முறையை குறைந்தபட்சம் மூன்று வாரங்களாவது செய்து வரவேண்டும். இதனால் நல்லதொரு முன்னேற்றத்தினை உணரக் கூடும்.

ஒரு துண்டு ஆப்பிள் சாப்பிடுதல் :

காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.

பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :

தலைவலிக்கு நல்ல நிவார ணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

இஞ்சி, சீரகம், தனியா கலந்த தேநீர் அருந்துதல் :

தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமாப அப்படியென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலையை அரைத்துத் தடவுதல் :

வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.

சீஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுதல் :

தலைவலியினால் அவதிப்படுகிறீர்கள் என்றால், சீஸ், சாக்லெட்டுகள், ஆட்டுக்கறி போன்றவற்றை முழுவதுமாகத் தவிர்த்து விட வேண்டும். இதற்குப் பதிலாக, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி12, புரதம், கால்சியம் ஆகியவை நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்த் துக்கொள்ள வேண்டும்.

அதிலும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வெந்தயக்கீரை போன்ற இலை வகைக் காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். தலைவலியிலிருந்து விடு படவேண்டுமென்று விரும்பினால், ஃபாஸ்ட் புட் மற்றும் மசாலா உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

நன்றாக தூங்குதல் :

பெரும்பாலான மக்கள் தலைவலியால் அவஸ்தைப்படுவதற்கு முக்கியமான காரணம் சரியான தூக்கம் இல்லாதது தான். எனவே தலைவலியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமானால், தூக்கத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

அதிலும் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரமாவது ஆழ்ந்த தூக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தலைவலி குறையும். மேலே குறிப்பிட்டுள்ளவை நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் தலைவலிக்கான கை மருத்துவங்கள்.

இவற்றை நீங்களும் பின்பற்றி, தலை வலியிலிருந்து நிவாரணம் பெறுங்கள்.

Labels

Popular Posts