Friday, January 3, 2014

120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம் North Korea president Jang Song Thaek different face

120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம் North Korea president Jang Song Thaek different face

சியோல், ஜன.4-

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் சாங் தேக் (67), அந்நாட்டு அரசில் அதிபருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் அதிகாரம் மிக்கவராக செயல்பட்டார்.

இந்த நிலையில் இவர் ராணுவ புரட்சி மூலம் அதிபர் கிம் ஜாங் யுன்னிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டினார். இதை அறிந்த அதிபர் அவரையும், அவரது உதவியாளர்கள் 5 பேரையும் கைது செய்தார்.

அவர்கள் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அதில் ஜாங் மற்றும் அவரது உதவியாளர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜாங் சாங் தேக் மற்றும் உதவியாளர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் துரோகி, வெறுக்கத்தக்க அழுக்கான நபர், நாயை விட கேவலமானவர் என்று கொரிய செய்தி நிறுவனங்கள் வர்ணித்திருந்தன. முன்னதாக அவர் தூக்கிலிடப்பட்டதாக தகவல்கள் தெரிவித்த நிலையில், அவரது தண்டனை நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து சீனாவை சேர்ந்த செய்தி நிறுவனம் மிகவும் அதிர்ச்சிகரமான தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.

சீன ஊடகத்தின் தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

120 நாய்களை மூன்று நாட்களுக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு வைத்திருந்ததாகவும், அதன் பின் ஜாங் சாங் தேக் மற்றும் அவரது உதவியாளர்களின் ஆடைகளை களைந்து அந்நாய்களிடம் விடப்பட்டதாகவும், அந்த 120 நாய்களும் 6 பேரையும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடித்து குதறி கொன்றதை வட கொரிய அதிபர் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் அமர்ந்து நேரடியாக பார்த்து ரசித்ததாகவும் கூறியுள்ளது.

நினைத்து பார்கக முடியாத அளவிற்கு கோரமான முறையில் ஜாங் சாங் தேக் மற்றும் ஐந்து உதவியாளர்களுக்கும் நிறைவேற்றப்பட்ட தண்டனை அந்நாட்டு அதிபரின் மிக கோரமான முகத்தை காட்டுவதாக அச்செய்தி நிறுவனம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.
...
 

Monday, December 30, 2013

hindu organization complaint on seemann for defamation hindu lord கடவுள்களை அவமதித்ததாக சீமான் மீது இந்து அமைப்பினர் புகார்

hindu organization complaint on seemann for defamation hindu lord கடவுள்களை அவமதித்ததாக டி.ஜி.பி. அலுவலகத்தில் டைரக்டர் சீமான் மீது இந்து அமைப்பினர் புகார் hindu organization complaint on seemann for defamation hindu lord

சென்னை, டிச.30–

சினிமா டைரக்டரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் பேசிய பேச்சுக்கள் அடங்கிய தொகுப்பு யூ டியூப்பில் வெளியாகி இருக்கிறது.

அதில் இந்து கடவுள்களான சிவன், விநாயகர் ஆகியோரை பற்றி அவதூறாக சீமான் பேசி இருப்பதாக கூறி இந்து அமைப்பினர் இன்று டி.ஜி.பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:–

சீமான் பேச்சில் இந்துக்கள் கல்லை கடவுளாக வழிபட்டு பின்னர் அந்த கல்தான் நம்மை படைத்ததாக கூறுகின்றனர். இந்து கடவுள் எதைத்தான் படைத்தார்.

அவருக்கு படைக்கப்படுகின்ற கொழுக்கட்டையையாவது படைத்தாரா என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே இந்திய தண்டனை சட்டம் 153ஏ, 295ஏ மற்றும் 298 ஆகிய பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

...

Sunday, December 29, 2013

விலைவாசியை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: நரேந்திர மோடி குற்றச்சாட்டு Modi says federal government has not taken any action to reduce the prices

Img விலைவாசியை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: நரேந்திர மோடி குற்றச்சாட்டு Modi says federal government has not taken any action to reduce the prices

ராஞ்சி, டிச.30-

4 மாநில சட்டசபை தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகளின் கூட்டத்தை சமீபத்தில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூட்டினார். அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், காங்கிரஸ் முதல்-மந்திரிகள் தங்கள் மாநிலங்களில் ஊழலை தடுக்கும் வகையில் லோக் அயுக்தாக்களை அமைக்க உத்தரவிட்டார். ஆதர்ஷ் ஊழல் தொடர்பான நீதி விசாரணை அறிக்கையை மராட்டிய மாநில அரசு நிராகரித்ததை குறை கூறினார்.

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று கலந்துகொண்டு பேசினார். ராகுல் காந்தியின் குரல் அசரீரியாக வந்து கொண்டிருப்பதாக அவர் சாடினார். ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக தாக்கினார்.

அப்போது நரேந்திர மோடி கூறியதாவது:-

பழங்காலத்தில் தங்களைச் சுற்றிலும் நடப்பதை மக்கள் கண்டுகொள்ளாமல், இருந்தபோது அசரீரி குரல் கேட்டது. இப்போதும் அப்படி அசரீரி ஒலிக்கிறது. முதல்-மந்திரிகள் இதைச் செய்யுங்கள். முதல்-மந்திரிகள் அதைச் செய்யுங்கள் என்று அசரீரி வருகிறது. ஆனால் ஊழலில் தொடர்பு உடையவர்கள் இதைச் சொல்கிறார்கள். அசரீரி குரலை ஒலிக்கிறவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் எப்படி வளர்ந்தது என்பதை சொல்லட்டும்.

மத்தியில் பதவியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, நாட்டுக்கு சுமையாகி விட்டது. மக்களுடனான தொடர்பை அது இழந்து விட்டதால், நாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி, அதன் அரசுகள், தலைவர்கள் மக்களின் குரல்களுக்கு செவி சாய்ப்பது கிடையாது. இன்று மக்கள் விரும்புவது வளர்ச்சியைத்தானே தவிர பிரிவினையை அல்ல. அவர்கள் நாடுவது வாய்ப்புகளைத்தான். வகுப்புவாத விஷத்தை அல்ல.

3 வருடங்களுக்கு முன்பு விலைவாசி உயர்வை தடுப்பது பற்றி பிரதமர் ஒரு கூட்டத்தை கூட்டினார். விலைவாசி உயர்வை தடுப்பது தொடர்பான சிபாரிசுகளை செய்யும் ஒரு குழுவுக்கு என்னை தலைவராக நியமித்தார். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி முதல்-மந்திரிகள் 2 பேர் அதில் இடம் பெற்றிருந்தனர். நாங்கள் நடவடிக்கை எடுக்கத்தக்க விதத்தில் 62 அம்சங்களை தெரிவித்திருந்தோம். 20 சிபாரிசுகளை செய்திருந்தோம். நாங்கள் நல்லதொரு பணியாற்றியதாக பிரதமர் பாராட்டு தெரிவித்தார். ஆனால் இரண்டரை ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசு முடங்கிப்போய்விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கும் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், ஒரு இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக மோடிக்கு எதிராக மத்திய அரசு விசாரணை கமிஷன் அமைப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வந்த உடனேயே மோடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே மாநில அரசு ஒரு விசாரணை கமிஷன் அமைத்தால், மத்திய அரசு விசாரணை கமிஷன் அமைப்பதில்லை. இதுதான் பாரம்பரியமாக பின்பற்றப்படுகிற நடைமுறை. அது இப்போது மீறப்பட்டுள்ளது என கூறினார்.
...

Labels

Popular Posts