Thursday, July 25, 2013

தேவர்மகன் சிவாஜி... சிவாஜிதான்

பி.சி.ஸ்ரீராமை ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதுவும் இந்த விகடன் மேடையில் அவர் பதில் சொல்லும் விதத்தை பார்க்கும் பொழுது அவர் மேல் இருக்கும் மரியாதை இன்னும் கூடுது...

சிவாஜி பற்றி கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்திருக்கும் பதிலை படிக்கும் பொழுது, இதுக்கு முன்னாடி பதில் சொல்லிக்கிட்டு இருந்த அலட்டல் அய்யாசாமி ஞாபகத்து வந்துட்டு போனாரு.
********************

 ''ரொம்ப ஆச்சர்யமா 'தேவர்மகன்’ல நடிச்சதுக்காக சிவாஜிக்கு தேசிய விருது கொடுத்தாங்க. அந்தப் படப்பிடிப்பில் சிவாஜியுடனான உங்கள் அனுபவம்..?''

life stage - வாழ்க்கையின் வெற்றிப்படிகள்

வாழ்க்கையை மேம்படுத்த வெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் !!!

வாழ்க்கையை மேம்படுத்த வெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் !!!

01. அதிகம் செய்வது சிறந்தது என்ற கருத்தை மாற்றிக் கொண்டு, குறைவாக செய்வதில் நிறைய பலன் உண்டு என்று நினைத்து நடவுங்கள், வாழ்வில் மகிழ்ச்சி ஆரம்பித்துவிடும்.

02. தினமும் மூன்று என்று திட்டமிட்டு காரியங்களை செய்து வந்தால் அதிசயிக்கக் கூடிய வெற்றியை எட்டித் தொட்டிருக்கக் காண்பீர்கள். முடித்தாக வேண்டிய பணிகளில் முதல் மூன்றை தேர்வு செய்து முடியுங்கள் என்பது இதன் கருத்து.

03. தேவையில்லாத விடயங்களை அங்குலம் அங்குலமாக யோசித்து, யோசித்து அலட்டிக் கொள்வதால் காலமும் நேரமும் விரயமாகிறதே அல்லாமல் வேறெதுவும் நடப்பதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

04. அச்சத்தினால் ஒத்திப் போடும் பழக்கமே உங்கள் பகைவனாகும். அதை நிர்மூலம் செய்வதில்தான் வெற்றி தங்கியுள்ளது.

05. வாழ்க்கையில் சின்னச் சின்ன விடயங்கள் கூட பெரிய பெரிய சந்தோசத்தை அள்ளித்தரக் கூடியவை. அன்றாட வாழ்வில் சின்னச்சின்ன விடயங்களை முடிப்பதன் மூலம் பெரிய சந்தோசத்தை அனுபவிக்க முடியும்.

06. நமது மனோ நிலையில் பொதிந்துள்ள ஆற்றல்தான் முடிவைத் தீர்மானிக்கப் போகிறது. ஆக்கபூர்வமான எதிர்பார்ப்பை தெரிவு செய்யுங்கள் ! வெற்றியை எதிர் பாருங்கள். ஆனால் வெற்றி நாளை வருமென்று மனதிற்கு தகவல் கொடுக்காதீர்கள். வெற்றி இதோ இதைப்படிக்க வந்திருக்கிறீர்களே இக்கணம்தான் வெற்றி.

07. உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்களின் உள்ளேயுள்ள திசைகாட்டியின் வழியே நடவுங்கள். அதுதான் உள்ளிருப்பதை வெளிக்காட்டி வெற்றிகொள்ளும் வழிமுறையாகும்.

08. இடர்களை எதிர் கொள்ளத் துணிந்தவன் மட்டுமே உண்மையில் சுதந்திர மனிதனாகும். இடர்களை எதிர் கொள்ள தயங்குவோர் விலங்கு ப10ட்டிய அடிமைகள்.

09. ரிஸ்க் எடுப்பது அவசியம், அதை குழந்தைகளின் சிறிய நடைபோல சிறிது சிறிதாக பிரித்து எடுத்தால் பாரம் தெரியாமலே இலக்கை அடைந்துவிடலாம்.

10. எல்லாவித மகிழ்வுகளையும் இழந்து தலைமைப் பதவியை அடைந்த ஒருவர் தனது வெற்றி கூட தவறான பாதையில் சென்றுவிட்டதைக் கண்டு கொண்டார்.

11. வெற்றி என்பது ஒரு தொடர் நடவடிக்கை, அது ஓர் உணர்வு. நான் யார் என்னவாக இருக்கிறேன், எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன், என்பதுபற்றி நமக்குள்ளே ஜொலிக்கும் இதமான உணர்வுதான் வெற்றி !

12. அன்றாட வாழ்க்கையில் மூழ்கிப் போவதால் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறோம். ஒரு கட்டத்தில் இலட்சியத்தையே மறந்துவிடுகிறோம். ஆகவேதான் நேரத்தை நழுவ விட்டுவிடக் கூடாது.

13. இதுவரை நீங்கள் பெற்றிருப்பதற்காக செலுத்தும் நன்றிகள் அந்த நன்மைகளை தொடர்ந்து பெருகச் செய்யும்.

14. பணப்பற்றாக்குறை இருக்கிறது என்ற எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுங்கள். என்வாழ்வில் ஏராளமாக பணம் சேர்கிறது என்ற எண்ணத்தை மனதிற்கு வழங்கி அமைதி காணுங்கள், பின்னர் அவதானியுங்கள் வளங்கள் பெருகியிருக்கக் காண்பீர்கள்.

15. தாங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேலை, பரவசமானதாகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் அமையப் பெற்றவர்கள் மிகவும் சந்தோசமானவர்கள்.

16. நாம் வலுவாக நினைக்கும் ஒன்று நமக்குக் கிடைக்கிறது.

17. பிரச்சனையில் கவனம் செலுத்துகிறோமா அல்லது தீர்வில் கவனம் செலுத்துகிறோமா என்பதை யோசித்து நடக்க வேண்டும்.

18. ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு 25 விதமான வழி முறைகள் உள்ளன. எனவேதான் உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பல்வேறு விதமான வழிகளை தேடுவதில் நாட்டம் காணுங்கள்.

19. வேகமாக ஓடுவோர் ஒரு கட்டத்தில் களைத்து நின்றுவிட வேண்டி வரும். சாவகாசம், நிதானம் என்பதே களைப்பின்றி பயணிக்க ஏற்ற மருந்தாகும்.

20. இந்த வாரமாவது உங்கள் வேக வியாதியை கொஞ்சம் ஒத்தி வையுங்கள், சாவகாசமாக, நிதானமாக செயற்படுவதில் உள்ள பரவசத்தை அனுபவியுங்கள்.

21. வெற்றியை புகழ்ந்து பாராட்டும் கலையை கற்றுக் கொள்ள வேண்டும். நாம் செய்ய வேண்டியதும், செய்ய முடிகிறதுமான காரியம் இதுவாகும்.

22. நாம் ஒழுங்காக செய்ததைவிட ஒழுங்குபட செய்யாத காரியத்தில்தான் கூடுதல் கவனம் செலுத்தி கவலைப்பட்டு வருகிறோம்.

23. குறைகளை பார்ப்பதை விடுத்து, உங்கள் வெற்றிகளையும், மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள்.

24. வெற்றிகரமாக வாழ விரும்பினால் - செம்மையான செயற்பாடு .. - என்பதற்கு விடைகொடுக்க வேண்டி வரும்.

25. செம்மையோ செம்மை என்ற மனோபாவம் நம்மிடமிருந்து விடுபடுவதற்கான பயிற்சியை மேற் கொள்வோம். திருத்தம், செம்மை என்பதை விடுத்து நன்றாக சிறப்பாக செயற்படுவதில் நாட்டம் கொள்வோம்.
 

-----------------------------------------

பக்கவாதம் நோயை குணப்படுத்த முடியுமா ?

ஒரு காலத்தில் குணப்படுத்த முடியாத
நோயாக இருந்த பக்கவாதம் நோயை தற்போது
நவீன மருத்துவத்தினால் குணப்படுத்த
முடியும். வராமல் தடுக்க முடியும்.
இதன் முக்கிய காரணம். அதிக
கொழுப்பு உணவு, அதிக எடை, இரத்தக்
கொதிப்பு, சர்க்கரை நோய், இரத்த
அணுக்களின் பாதிப்பு போன்றவை.
ஸ்ட்ரோக் (வாதநோய்) என்றால் மாரடைப்பா?
ஸ்ட்ரோக் என்பது மூளையில் இரத்த ஓட்ட
பாதிப்பை குறிப்பது.
ஸ்ட்ரோக் – ஐ குணப்படுத்த முடியாதா?
முடியும். ஸ்ட்ரோக் வந்தவுடன் தீவிர
சிகிச்சையளித்தால் நல்ல பலனளிக்கும்
வயதானவர்களுக்குத்தான் ஸ்டோக் வருமா?
எல்லா வயதினருக்கும் வரலாம்.
முதியோருக்கு அதிகமாக ஏற்படும்.
ஸ்டேராக் -ஐ தடுக்க முடியுமா?
பொரும்பாலான ஸ்ட்ரோக் ஐ தடுக்க முடியும்.
நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் தினமும் 50
மி.கிஆஸ்பிரின் மற்றும் நபஅபஐச
மாத்திரைகளை சாப்பிட்டால்
ஸ்ட்ரோக்கை தடுக்கலாம்.
ஸ்ட்ரோக் வந்தால் முற்றிலும் குணமாகாதா?
தொடர்ந்து சிகிக்சையளித்தால் பெரும் பாலும்
குணமாகும். சிலருக்கு சில வாரங்கள்
ஆகலாம். இன்னும் சிலருக்கு மேலும் அதிக
நாட்கள் ஆகலாம்.
முதியவர்களின் உடல் பாதிப்பிற்கான முக்கிய
நோய்கள் என்னென்ன?
ஸ்ட்ரோக், மாரடைப்பு, புற்று நோய்
போன்றவை.
ஸ்ட்ரோக் எப்படி ஏற்படுகிறது?
மூளையில் இரத்தக் குழாய்களின் பாதிப்பால்
ஏற்படுகிறது.
ஸ்ட்ரோக் எத்தனை வகை உள்ளன?
இரத்தக் குழாய் அடைப்பால், மூளையில்
இரத்த ஓட்ட குறைவு ஏற்படுதல் ஒருவகை.
மூளையின் இரத்தக் குழாய் வெடித்து இரத்த
கசிவு ஏற்பட்டு அதனால்
மூளை பாதிப்பு ஏற்படுதல் மற்றொரு வகை.
ஸ்ட்ரோக் வருமுன் அறிகுறிகள் என்னென்ன?
முகத்தில் மரமரப்பு, கை கால்களில் பலவீனம்,
உடலின் ஒரு பாதியில் உணர்வு குறைதல்,
திடீர் குழப்பம், பேச இயலாமை, பிறர்
பேசுவதை புரிய இயலாமை, நடக்க
இயலாமை, தலைச் சுற்றல்,
நடை தடுமாறுதல், கையிலிருந்து பொருள்கள்
நழுவி விடுதல், பார்வை மங்குதல், பொருள்
இரட்டை யாகத் தெரிதல், மயக்கம், குமட்டல்,
வாந்தி போன்ற அறிகுறிகள் உண்டாகலாம்.
மினி ஸ்ட்ரோக் என்றால் என்ன?
சிலருக்கு தற்காலிகமாக (24
மணி நேரத்திற்கு குறைவாக) கைகால்,
பலவீனம், ஊசி குத்துதல், போன்றஉணர்வு,
நடைத் தடுமாறல், தலைச்சுற்றல், மயக்கம்,
பொருட்கள் இரட்டையாக தெரிதல்
போன்றஅறிகுறிகள் காணப்படும். ஆனால்
சரியான சிகிச்சை அளித்தால் ஒரே நாளில்
முற்றிலுமாக குணமாகிவிடும்.
யார் யாருக்கு ஸ்ட்ரோக் ஏற்படுகிற
வாய்ப்புகள் அதிகம்?
அதிக இரத்த அழுத்தம், இதய நோய்,
சர்க்கரை நோய், அதிக கொழுப்பு,
மதுவிற்கு அடிமை யானவர்கள்,
புகை பிடித்தல், போதைப் பொருட்
களை உபயோகிப்பவர்கள் போன்றோருக்கும்
பெண்களில் பிரசவத்திற்குப் பின்பும்
மெனோபஸ் சமயத்திலும் ஸ்ட்ரோக்
உண்டாகின்ற வாய்ப்புகள் அதிகம்.
ஸ்ட்ரோக்கை தடுப்பது எப்படி?
கொழுப்பு குறைவான உணவு, அளவான
எடையை பராமரித்தல், நாள்தோறும்
உடற்பயிற்சி மற்றும் யோகப் பயிற்சி, இரத்த
அழுத்தம், கொழுப்பு.,
சர்க்கரை போன்றவைகளைக்
கட்டுப்படுத்துதல், புகை பிடிக்காமை,
நாள்தோறும் சிறிதளவு ஆஸ்பிரின்
சாப்பிடுதல் போன்றவைகளின் மூலம் தடுக்க
முடியும்.
ஸ்ட்ரோக்கிற்கு ஆபரேஷன் பலனளிக்குமா?
சிலருக்கு கழுத்திலுள்ள கரோடிட் தமனியில்
அடைப்பிருந்தால் அதை அறுவை சிகிச்சையில்
சரிசெய்ய முடியும். மூளையின் இரத்தக்
குழாயை கிளிப் மூலம் அடைத்து விட்டடால்
பாதிப்படைந்த இரத்தக் குழாய்
வெடிப்பதை தவிர்க்க முடியும்.
ஸ்ட்ரோக்கினால் மூளை வீக்கம்
ஏற்பட்டோருக்கு, அறுவை சிகிச்சை மூலம்
மூளையின் அழுத்தத்தைக் குறைக்கலாம்.
ஸ்ட்ரோக் வந்தவர்கள் எப்படி நடந்து கொள்ள
வேண்டும்.?
பலமிழந்த கைகால்களுக்கு தொடர்ந்து பயிற்சி,
பேச்சுப் பயிற்சி, நடைப்பயிற்சி முதலியன..
தொடர்ந்து பிறநோய்களுக்கு முறையான
சிகிச்சைகள், ஸ்ட்ரோக்
தடுப்பு சிகிச்சை முறைகள்
போன்றவை அவசியம்.
ஸ்ட்ரோக்கில் பாதிப்பு எப்படி?
நமது மூளையின் விசித்திரம் என்னவென்றால்
இடப்புறத்தை வலது மூளையும் ,
வலப்புறத்தை இடது மூளையும்
நிர்வகிக்கின்றன.
மூளைக்குச் செல்லும் இரத்த ஒட்டம்
குறைந்துவிட்டால் அல்லது அந்த இரத்தக்
குழாயிலிருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டால்
அல்லது அடிபட்டால் அப்பக்க
மூளை பாதிப்படைந்து விடும்.
இடது பக்க மூளை பாதிக்கப்படாமல் உடம்பின்
வலப்பக்கத்தில் செயலாற்றல் பாதிப்படையும்.
மேலும் வலது கை மற்றும் வலது கால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு பேசும் திறனும்
பாதிக்கப்படும். ஏனெனில்
பொரும்பாலோருக்கு மூளையின்
இடதுபாகத்தில்தான் பேச்சுத் திறன் நரம்புகள்
உள்ளன.
பக்கவாதத்திற்கு காரணங்களும்
பரிசோதனைகளும்
இரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து,
சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு நோய்,
புகைப்பழக்கம், பால்வினை நோய், (சிபிலிஸ்)
இரத்தக் குழாயின் நோய்கள், இரத்த
அணுக்களின் நோய்களால் அளவிற்கதிமாக
இரத்த உறையும் தன்மை, தலையில் காயம்,
மூளைக்கட்டி போன்றவை.
மேலும்
கருத்தடை மாத்திரை சாப்பிடு வோருக்கு ஸ்ட்ரோக்
பாதிப்பு ஏற்படலாம்.
ஸ்ட்ரோக் என்பது இதயத்தில்
மாரடைப்பு பாதிப்பை போன்ற மூளைப்
பாதிப்பு ஆகும்.
பக்கவாதத்திற்கு காரணமான இரத்தக்
கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக கொழுப்பு,
இரத்த அணுக்களின் நோய்
போன்றவற்றிற்கு ஏற்ப இரத்தம்., சிறுநீர்,
இ.சி.ஜி, ஸ்கேன் பரிசோதனையும் அவசியம்.
பக்கவாத சிகிச்சை முறைகள்
* மூளையின் வீக்கத்தைக் குறைக்க
புருசமைடு மற்றும் மேனிட்டால் மருந்துகள்.
* மூளையில் இரத்த உறைவை குறைக்க
ஆஸ்பிரின் மற்றும் ஆண்டி கோயகுலண்ட்
மருந்துகள்.
* மூளையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க
ட்ரென்டால் மற்றும் பைரசிடாம் மருந்துகள்.
* படுக்கின்ற
நிலையை அடிக்கடி மாற்றி வைத்தால்
படுக்கைப் புண்ணைத் தவிர்க்கலாம்.
* சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு நோய்
போன்ற காரணிகளுக்கு தேவையான
மருந்துகள்.
* சிறுநீர் கழிக்க முடியாதவர்களுக்கு கத்தீடர்
மூலம், சிறுநீரை வெளியேற்றுதல்.
* வலுவிழந்த கை,கால்
தசைகளுக்கு பிஸியோதிரபி பயிற்சிகள் நல்ல
பலனளிக்கும்.
*மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு பாதிப்
படைந்தால் சிகிச்சையை அதற்கேற்ப
மாற்றி அமைக்க வேண்டும்.
வலிப்பு நோயின் வெளிப்பாடு
நமது மூளையின்
நரம்பு செயல்களிருந்து வெளிப்படுகிற
மின்சார சக்தியால் தான் நம்முடன்
ஒவ்வொரு பாகமும் அசைவடைகிறது. ஆனால்
அதுவே அசாதாரமான அளவில் வெளிப்பட்டால்
அளவுக்கு மீறிய கட்டுப்பாடில்லாத
அசைவுகள் உட லெங்கும் ஏற்படும். அதனால்
வலிப்பு உண்டாகிறது.
இதற்கு குறிப்பிட்ட காரணம்
என்னவென்று பெரும்பாலோருக்கு சொல்ல
முடிவதில்லை. அதை காரணமில்லாத
வலிப்பு என்பர்.
சிலருக்கு மூளையில் கட்டியோ,
அல்லது அடிபட்டாலோ அதனால்
வலிப்பு ஏற்படும்.சிலருக்கு கை, கால்கள்,
இழுக்காமல் சுய நினைவு மட்டும்
மாறிவிடும்.சிலருக்கு திடீரென கோபம்,
ஆவேசம் அல்லது பயம்,
அழுகை அல்லது கலகல சிரிப்பு போன்ற
அறிகுறிகள் ஒரு சில மணித்துணிகளுக்குத்
தோன்றி, பின்னர் மறைந்து விடும்.
சிலருக்கு டிவியைப் பார்த்தால்
வலிப்பு ஏற்படும். சிலருக்கு உடலுறவின்
போது வலிப்பு ஏற்படும்.
பொதுவாக, இதற்கு இ.இ.ஜி மற்றும்
சிடி.ஸ்கேன்
பரிசோதனைகளை செய்து என்னவகை வலிப்பு என்பதை அறியலாம்.ஏதாவது காரணத்தின்
அடிப்படையில் வந்தால் அதை சரி செய்தால்
குணமாகும்.காரணமே இல்லாமல் ஏற்படுகின்ற
வலிப்பிற்கு முறையாக சிகிச்சை அளித்தால்
குணமாகும்.இங்கு முக்கியமாக
இரண்டு விஷயங்கள்.
வலிப்பு வருகின்றவர்கள் எந்த
வாகனங்களையும் ஓட்டக் கூடாது.
முற்றிலும் குணமாகிய பின்னர் ஓட்டலாம்.
அடிக்கடி வலிப்பு ஏற்படுவோர்,
தனிமையி ருக்கும் போது நெருப்பின் அருகில்
வேலை செய்யக் கூடாது.
வலிப்பின் போது சாவிக் கொத்தையோ,
இரும்புக் கம்பியையோ கொடுத்தால்
சரியாகும் என்ற
நம்பிக்கை நம்மிடையே உண்டு. எதையும்
கொடுக்கா விட்டாலும் தாமாக நின்றுவிடும்.
அச்சமயத்தில் வாந்தி எடுத்தால்
தலையை ஒருபுறமாக சாய்த்து வைத்து,
வாந்தி எடுத்த பொருட்கள்
மூச்சுப்பாதையை அடைக்காமல் பார்த்துக்
கொள்ளுதல் அவசியம். கை, கால்கள்
இழுக்கும்போது எதிலாவது வேகமாக
மோதினால் எலும்பு உடைந்துவிடும்.
அதனால் எதிலும்படாமல் பார்த்துக்
கொள்வது நல்லது.
மூளைக்கட்டி
மூளையில்
கட்டி ஏற்படும்போது பல்வேறு விளைவுகள்
உண்டாகும். மூளைக்குள் அழுத்தம்
அதிகரித்து தலைவலி ஏற்படும்.இத்தலைவலி தலைமுழுவதும்
இருக்கும். அதிகாலையில் வலி அதிகமாக
இருக்கும். இருமுதல், மூச்சை அடக்குதல்,
தலை அசைத்தல் போன்றவற்றின்
போது தலைவலி அதிகமாகும். இத்துடன்
தூக்கமின்மையும்
உண்டாகும்.தொடர்ந்து வருகிற தலைவலி,
நீண்ட நேரம் நீடிக்கின்ற தலைவலி,
நாளுக்கு நாள் அதிகமாகிற தலைவலி,
மருந்துகளுக்குக் கட்டுப்படாத தலைவலி,
ஒருவருக்கு இருந்தால் அத்தலைவலி, மூளைக்
கட்டியால் இருக்கலாம் என
யூகிக்கலாம்.மூளையின் அழுத்தம் மேலும்
அதிகரிக்கும் போது
* இடைவிடாத வாந்தி
* கண்பார்வை படிப்படியாக மங்குதல்
*நினைவுக்குறைவு அதைத்
தொடர்ந்து கோமா எனப்படும் சுயநினைவற்ற
நிலை உண்டாகும்.மூளையின் முன்புறம்
(Fronal Lobe) பாதிக்கப்பட்டால்
* உணர்ச்சிகளில் மாற்றம்
* தயக்கமின்மை
* எதையும் தாமாக செய்ய இயலாமை
* சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுதல்
*பலர் முன்னிலையில் நாணமின்றி செயல்
படுதல்
* ஞாபக மறதி
*வாசனையின்மை போன்ற அறிகுறிகள்
தோன்றும்.மூளையின் நடுப்பகுதி (Pariental
Lobe) பாதிக்கப்பட்டால்
* கணக்கிடுதல் தவறுதல்
* திட்டமிட்டு செயல்பட இயலாமை
* பேச்சு தடுமாற்றம் மூளையின் முக்கிய
பகுதியான பிரமிடல் பகுதி பாதிக்கப் பட்டால்
* கை, கால்கள் செயலிழத்தல்
ஏற்பட்டு பக்கவாதம் உண்டாகும்.மூளையின்
பின்பகுதி (ஞஸ்ரீஸ்ரீண்ல்ண்ற்ஹப் கர்க்ஷங்)
பாதிக்கப்பட்டால்
* முக்கியமாக கண்பார்வை பாதிக்கப்படும்
* கண்முன் இல்லாத பொருட்களைப்
பார்ப்பது போன்ற உணர்வு
* நன்றாக அறிமுகமானவர்களைக் கூட
அடையாளம் காண
முடியாமை போன்றவை உண்டாகும்.மூளையின்
அடிப்பகுதி (Occipital Lobe) பாதிக்கப் பட்டால்
* பேச்சுத்திறன், கேட்கும் திறன், ஞாபக
சக்தி போன்ற குறைகள்
* இல்லாத சத்தங்கள், வாசனைகள், உருவங்கள்
இருப்பது போன்றபிரமை
* சில நேரங்களில் சித்த பிரமை பிடித்தாற்
போன்ற
செயல்பாடு போன்றவை உண்டாகும்.சிறுமூளை (Cerebellum )
பாதிக்கப்பட்டால்
* நடக்கும்போது தள்ளாடுதல்
* பேச்சுக் குழறுதல்
* குறிப்பிட்ட பொருளை எடுக்க இயலாமை
* எழுத முடியாமை
* நடுக்கம்போன்றவை உண்டாகும்.
மூளையின் மேற்புறம் (Cortex)
கட்டி ஏற்பட்டால்
உடல் ஒரு பகுதியில், அல்லது ஒரு கையில்
அல்லது ஒரு கால் அல்லது ஒரு புறத்தில்
மட்டும் வலிப்பு ஏற்படும். சிறு வயதில்
வலிப்பு நோய் இல்லாதவருக்கு பின்னாளில்
வலிப்பு உண்டானால் அதுவும் உடல்
ஒரு பகுதியில் மட்டும்
வலிப்பு ஏற்படுமானால் அவருக்கு மூளைக்
கட்டியாக இருக்கின்ற வாய்ப்புகள் அதிகம்.
மூளைக்கட்டியை அறிவது எப்படி?
நவீன விஞ்ஞான முன்னேற்றத்தின் மூலம்
மூளைக்கட்டியை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்.
C.T. ஸ்கேன், MRI ஸ்கேன் மூலம்
மூளைக்கட்டியை மிகச்சிறிய அளவில்
இருக்கும்போதே கண்டு பிடித்து விடலாம்.
மூளைக்கட்டிக்கு சிகிச்சை முறைகள்
அறுவை சிகிச்சை மூலம்
மூளைக்கட்டியை அகற்றலாம்.
சிலருக்கு கதிர்வீச்சு ரேடியோதெரபி (Radiotheraphy)
முறையிலும் கட்டியை கரைக்கலாம்.
சிலருக்கு கிருமிகளால் உண்டாகும்
கட்டிகளை மருந்துகளின் மூலமாக
குணப்படுத்தலாம்.
அம்னீசியா
ஞாபக சக்தி, மனித இனத்திற்குக் கிடைத்த
அபூர்வ சக்தி. மூன்றுவகை ஞாபகங்கள்
உடனடி ஞாபகம் – அவ்வப்போது நடக்கிற
விஷயங்களை நினைவு கொள்ளுதல்
சமீப கால ஞாபகம் – ஓரிரு வாரத்திற்குள்
நடந்தவைகளை நினைவு கொள்ளுதல்
நீண்டகால ஞாபகம் – இது நிலையான ஞாபகம்,
சிறுவயதில் நடந்தவைகளை நினைவில்
கொள்ளுதல்.
ஞாபகசக்தியை செய்கின்ற
பகுதி மூளையி லுள்ள உறிப்போகேம்பஸ்
பகுதியாகும்.
அவ்வப்போது ஏற்படுகிற மறதியை தற்காலிக
அம்னீசியா என்றும், கடந்த
காலத்தை முழுவதுமாக மறந்துவிட்டால்
அதை குளோபல் அம்னீசியா என்றும் கூறுவர்.
வயதாகிவிடுவதால், உண்டாகிற மூளையின்
மாற்றங்கள், மூளையின் இரத்தக்குழாய்
பாதிப்புகள், மூளையில் அடிபடுதல்
தொடர்ந்த குடிப்பழக்கம்
போன்றவை அம்னீசியாவின் முக்கிய
காரணங்கள்.

Wednesday, July 24, 2013

வாழ்க்கை என்பது வியாபாரம்

வாழ்க்கை என்பது வியாபாரம்
 
குசேலப்பட்டினம் நகரில் ஜாம்பவான் என்பவன், தனது தங்கை சுப்ரியாவுடன் வாழ்ந்து வந்தான். தங்கை என்றால் அவனுக்கு உயிர். அவள் எது கேட்டாலும், கடுமையாக உழைத்து சம்பாதித்து வாங்கிக் கொடுத்து விடுவான். ஒருநாள், அந்தப்பெண் தன் தோழிகளுடன் ஆற்றிற்கு நீராடச் சென்றாள்.
 

ஆண்களின் பருவகாலம்

ஆண்களின் பருவம்
# பாலன் , 1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட
ஆண் (Balan, 1-7 years).

# மீளி, 8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண்
(Meeli, 8 - 10 years).

# மறவோன் , 11 வயது முதல் 14
வயதிற்குட்பட்ட # ஆண் (Maravon, 11 to 14
years)

# திறவோன் , 15 வயது (Thiravon, 15 years)
# விடலை , 16 வயது (Vidalai, 16 years).

# காளை 17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட
ஆண் (Kalai, 17 to 30 years )
முதுமகன், 30 வயதுக்கு மேல் (Mudhumagan,
after 30 years)

# Tamil Literature Reference:
‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’
’’ 228
‘பாலன் யாண்டே ஏழ்என மொழிப.’
’’ 229
‘மீளி யாண்டே பத்துஇயை காறும்.’
’’ 230
‘மறவோன் யாண்டே பதினான் காகும்.’
’’ 231
‘திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்.’
’’ 232
‘பதினாறு எல்லை காளைக்கு யாண்டே.’
’’ 233
‘அத்திறம் இறந்த முப்பதின் காறும்
விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன்.’
’’ 234
‘நீடிய நாற்பத் தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப.’
’’ 235

சாப்பிட்ட பிறகு செய்ய கூ டாத 7 ஆபத்தான செய்கைகள்

சாப்பிட்ட பிறகு செய்ய கூ டாத 7 ஆபத்தான செய்கைகள்




1. சாப்பிட்ட மாத்திரத்தில் புகை பிடிப்பது பத்து சிகரட்டுகள் பிடிப்பதற்கு சமமாகும் வெகு விரைவில் புற்று நோய்க்கு வலி வகுக்கும்

2. சாப்பிடவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம் இதன் மூலம் வயிற்றில் காற்று பெருகிவிடும் எனவே பழங்களை 1-2 மணி நேரத்துக்கு பிறகோ அல்லது 1 மணிநேரத்துக்கு முதலோ சாப்பிடவும்.

3. சாப்பிடவுடன் தேயிலை அருந்த வேண்டாம் தேலையில் அதிகமான அமிலம் உள்ளடங்கியுள்ளதால் இந்த பதார்த்தம் உணவில் உள்ள புரதங்களை எடுத்து கொள்ளும் அதனால் உணவு சமிபாட்டுக்கான நேரம் அதிகமாக எடுத்து கொள்ளும்.

4. சாப்பிடவுடன் பெல்டினை தளர்த்தி விடாதீர்கள் இது குடலினை உருக்குலைய செய்வதுடன் குடலில் தடைகளையும் ஏற்படுத்தும்.

5. சாப்பிடவுடன் குளிக்க வேண்டாம் ஏனெனில் குளிப்பதனால் கை கால் உடல் முழுக்க இரத்த ஓட்டம் அதிகரிக்கும் இதனால் வயற்றுக்கு செரிமானத்துக்கு தேவையான இரத்த அளவு குறையும் அதனால் செரிமான அமைப்பு வலுவிழக்கும்.

6. சாப்பிடவுடன் நடப்பது உணவு செரிமானத்துக்கு சிறந்தது இதானால் 99 வயது வரை வழலாம் என்பார்கள் அது பொய் ஏனெனில் நடப்பதினால் நேரடியாக உடலில் இருந்து சத்துக்கள் உறிஞ்சபடாது மாற்றமாக உட்கொண்ட உணவில் இருந்தே ஊட்ட சத்துக்கள் உறிஞ்சபட்டு இது செரிமான ஓட்டத்துக்கு இயலாமையை தோற்றுவிக்கும்.

7. சாப்பிடவுடன் தூங்க வேண்டாம் -இதனால் உணவு ஒழுங்காக ஜீரணிக்க முடியாது. இது நமது குடலில் வாயு மற்றும் தொற்றுக்கு வழிவகுக்கும்.

நாய்குட்டி சிறுகதை - Dog Small Story


ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான்.

ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது.

பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.

வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள்.

ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை.

பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள்.

அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், 'இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் செத்துப் போனார். நான் என்ன அழுகிறேனா பார்' என்றார்.

உடனே அந்தப் பையன் "நீங்க என்ன, என்னை மாதிரி குட்டியில இருந்தா உங்க தாத்தாவை வளர்த்தீங்க?" என்றான் கோபத்தோடு.

டாக்டர் வாயே பேசவில்லை.

குழந்தைகள் என்றும் குழந்தைகளே!

பெண்களின் ரியாக்சன்

பெண்களின் ரியாக்சன்-

திருமணமான புதியதில்
==================

1. கணவர் கூப்பிடாத போதே…என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து
===================
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து
=================
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ…? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு

Tuesday, July 23, 2013

எனக்கு ஒரு சந்தேகம் ? Jurassic park

எனக்கு ஒரு சந்தேகம்

இந்த சிங்கம், புலி, யானை, கரடி எலி போன்ற மிருகங்கள் எல்லாம் கடவுளின் அவதாரமாகவோ வாகனமாகவோ இல்லை ஏதோ ஒரு வகையில் கடவுளோடு சம்பந்தப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் இந்த dinosaurs மட்டும் எந்த கதா பாத்திரத்திலேயும் வரவில்லை.
ஒரு வேலை அந்த உயிரினங்கள் அழிந்த பிறகு தான் இந்த சாமி கதைகள் எழுதப்பட்டனவா இல்லை அது ஏதும் ஒதுக்கப்பட்ட மிருக இனமா இல்லை Jurassic park திரைப்படம் தாமதமாக ரிலீஸ் ஆனது தான் காரணமாஇல்லை அந்த மிருகம் எங்கேயாவது குறிபிடப்பட்டுள்ளதா.....?????

 பதில் : 

மகரம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முதலை வாய், ஆட்டின் கொம்பு, பாம்பின் உடல், மீனின் வால், சிறுத்தையின் கால்களுடன் இருப்பதாக வேதங்கள் கூறுகின்றன. இது வருணனின் வாகனம். கங்கா தேவியின் வாகனமும் இது தான். ஸ்ரீமத் பாகவதத்தில் krkalasa என்று வருகிறது. இதற்க்கு பெரிய பல்லி என்று அர்த்தம்.  Garudimimus என்றொரு டினோசர் உள்ளது. இதற்க்கு அந்த பெயர் வந்ததின் காரணம் கருடன்

Labels

Popular Posts