Saturday, August 3, 2013

எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் சோயா பீன்ஸ்

தமிழால் இணைவோம்:
எயிட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் சோயா பீன்ஸ்

சோயா பீன்ஸ் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

உயிர் கொல்லி நோயான எய்ட்ஸை கட்டுப்படுத்த பலவிதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சோயா பீன்சும் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் தன்மை உடையது என நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சோயா பீன்ஸ் உள்ளிட்ட தாவரங்களில் ஆராய்ச்சி செய்தனர்.

அதில் சோயாபீன்சில் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் ‘எச்.ஐ.வி.’ கிருமிகளை தடுக்கும் ஜெனிஸ்டின் என்ற மூலப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜெனிஸ்டின் செல்களில் எச்.ஐ.வி. கிருமிகள் ஊடுருவி பரவாமல் தடுக்கும் சக்தி படைத்தது. இதன் மூலம் எய்ட்ஸ் நோயை சோயா பீன்ஸ் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Visit our Page -► தமிழால் இணைவோம்

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள்....

தமிழால் இணைவோம்:
தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள்....

இந்த வாக்கியம் நம்மில் பலருக்கும் தெரியும், ஆராம்பத்தில் எதிரிகளால் இப்படி தவறாக மதிப்பிடப்பட்ட பலர் பின்னாட்களில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள்.

வியட்நாம், 1911 ஆம் ஆண்டின் ஒரு நள்ளிரவு. நிகே அன் பிராந்தியத்தின் சின்னஞ்சிறு விவசாய கிராமமான கிம்லியன் தூங்கிக்கொண்டிருந்தது. இந்தோ சீன பகுதியை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த நேரம் அது.

பிரெஞ்சு போலீஸ் லாரி ஒன்று புழுதியை கிள்ளப்பிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. அந்த வீட்டின் உரிமையாளரான ஆசிரியரையும் அவரின் மொத்த குடும்பத்தையும் லாரிக்குள் அள்ளி வீசியது. பிரெஞ்சு அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்பது அந்த ஆசிரயர் மீதான குற்றச்சாட்டு. கடைசியாக அந்த ஆசிரியரின் ஒரு மகன் மட்டும் லாரிக்கு வெளியில் நின்று கொண்டிருந்தான். உயராமாக மிகவும் மெலிந்து காணப்பட்ட பரிதாபத்திற்குரிய தோற்றம் கொண்ட சிறுவன் அவன்.

" தானே சாவப்போற புழுவை நாம ஏண்டா அடிச்சு கொல்லனும், இவனை ஏத்த உள்ள வேற இடம் இல்லை" என்று ஏளனம் செய்து விட்டு போலீசார் லாரியில் ஏறிக்கொண்டு ஊரை விட்டு வெளியேறி இருளில் மறைந்தனர். அந்த சிறுவன் அத்தோடு அவன் குடும்பத்தை மீண்டும் காணவில்லை.

கப்பல் ஒன்றில் உதவியாளனாக சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறினான். தன தாய் நாட்டின் நலனை குறித்தும் தன்னை போலவே பலர் தொலைத்துவிட்ட குடும்பங்களை குறித்தும் சிந்திக்கலானான்.

அன்று தவறுதலாக மதிப்பிடபட்ட அந்த சிறுவன் தான் பின்னாளில் பிரெஞ்சு படைகளையும் பின்பு ஜப்பானிய படைகளையும் எதிர்கொண்டு வியட்நாமில் மன்னர் குடும்பத்தை துரத்தியடித்துவிட்டு மக்கள் ஆட்சியை நிறுவிய ஹோ சி மின்.

இத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை அவனின் போராட்டம். இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த காலம் அது. துரத்தி அடிக்கப்பட்ட மன்னன் பிரெஞ்சு, பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறையிட இங்கிலாந்து அரச குடும்பம் இந்த விவகாரத்தை புதிய வல்லரசான அமெரிக்காவிடம் கையளித்தது.

அமெரிக்கா தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற திமிருடன் வரைபடத்தில் தென் வியட்நாம் என்ற புதிய நாட்டை உருவாக்கியது. அதற்கு தலைவனாக அந்த மன்னனை அமர்த்தியது துணைக்கு தன் பெரும் இராணுவத்தை அனுப்பியது. குழந்தையாக தவழ்ந்து கொண்டிருந்த வியட்நாம் பயந்துவிடவில்லை. ஹோ சி மின் தலைமையில் மக்கள் அணி திரண்டனர். அமெரிக்கா ஆக்கிரிமிப்பில் இருந்த தென் வியாட்நாமில் மக்கள் கெரில்லா போராளிகளாக மாறினர்.

பகலில் வயலில் வேலை செய்யும் விவசாயி இரவில் ஆயுதம் ஏந்தினான், பகலில் பிள்ளைக்கு பால் கொடுத்த தாய் இரவில் வெடிகுண்டுகளோடு அமேரிக்க இராணுவத்தோடு போரிட்டால். உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது வியட்நாம் போர்.

[போரின் போது வியட்நாமில் சுமார் 8 மில்லியன் டன் வெடிகுண்டுகளை வீசியது அமெரிக்கா இது ஒட்டு மொத்தமாக இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டுகளை விட மூன்று மடங்கு அதிகமாகம்.

அன்றைய வியட்நாமின் மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 300 டன் வெடி குண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டுள்ளது ]

அன்று ஏளனமாக எண்ணப்பட்ட அந்த சிறுவன் தான் யாராலும் தோற்கடிக்க முடியாது என்று மார்தட்டிக்கொண்ட (இன்றும் மார்தட்டிக்கொண்டிருக்கிற) அமெரிகக படைகளை மண்ணை கவ்வ செய்தவன். பெரும் சேதங்களுடன் அமெரிக்கா போரில் தோற்று வெளியேறியது. வியட்நாம் ஒரே நாடாக உலக வரைபடத்தில் இன்று கம்பீரமாய் காட்சியளிக்கிறது.

தெற்கு வியட்நாமின் தலைநகராக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட "சைகான்" அந்த சிறுவனின் பெயரை எடுத்துக்கொண்டது வரைபடத்தில் "ஹோ சி மின்" நகரம் ஆனது.

- Stalin Dass

Friday, August 2, 2013

தாமஸ் ஆலவா எடிசனின் நிம்மதி

தாமஸ் ஆல்வா எடிசன் பல கண்டுபிடிப்புகள
ை நிகழ்த்தியிருக்கிறார் என்பதும்,
மின்விளக்கு கண்டுபிடிக்கும் பணியில் பல
முறை தோழ்வியடைந்திருக்கிறார்
என்பது நமக்கு தெரிந்த விடயம்

அதில்
ஒரு குறிப்பு.

எடிசன் ஒருமுறை தனது ஆராய்சிகூடத்தில்
மின்விளக்கு கண்டுபிடிப்பதில்
தோழ்வியடைந்து மிகவும் வருத்தத்துடன்
வீட்டுக்கு வந்தார். அங்கேயும்
தனது ஆராய்சியை தொடர்ந்தார் மேலும்
தோழ்வியே கிடைத்தது...

மிகவும்
மனமுடைந்து அமர்ந்துவிட்டார் எடிசன். எடிசன்
படும் வேதனையைப்
பார்த்து அவரது மனைவி கூறினார்
இதையெல்லாம்
மறந்து உங்களுக்கு நிம்மதி தரக்கூடிய
இடத்துக்கு சென்று வரலாமே என்று.

நல்ல
யோசனை என்று கூறிய எடிசன்
உடனே தனது ஆராய்சிகூடத்திற
்கு சென்று தனது பணியை தொடர்ந்தார்!

ஆச்சிரியம் கலந்த
கோபத்தோடு மனைவி கேட்டார்
உங்களை நிம்மதி தரக்கூடிய இடத்திற்குத்தான
ே போகச்சொன்னேன் மீண்டும்
இங்கே வந்திருக்கிறீர்கள்... எடிசன் கூறினார்

இதை கண்டுபிடிப்பதில் தான் என்
நிம்மதி அடங்கியிருக்கிறது!!!

தொடர்ந்து முயற்சித்த அவர் வெற்றி கண்டார்
என்பது வரலாறு!

இன்றைய மாணவர்களுக்கு இந்த விடயம்
மிகவும் ஊக்கமளிக்கும்
என்றே நினைக்கிறேன்.

சரஸ்வதி மூலிகை - வல்லாரை

இதுவரை தெரிந்திராத ‘சரஸ்வதி மூலிகை’
அதாவது வல்லாரையின் மருத்துவக் குணங்கள்

மூலிகைகள் என்ற இயற்கைக்
கொடையை ஏராளமாகப் பெற்றிருக்கிறோம்.

நம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும்
தாவரங்கள், அசாதாரண மருத்துவ குணங்களைக்
கொண்டவை. அந்த வரிசையில் வரும்
வல்லாரை வழங்கும் நன்மைகள் அனேகம்.

அவை பற்றி…

* வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப்
பொடித்து, பாலில் கலந்து தினமும்
இரவு படுக்கைக்குச் செல்லும்முன்
அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள்
அழிந்துபோகும்.

* வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து,
அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு,
மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ,
மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச்
சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும்.
ஆனால் வல்லாரைச் சட்னியில்
புளியை அறவே தவிர்க்க வேண்டும்.
உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

* வல்லாரை இலையுடன் சம
அளவு கீழா நெல்லி இலை சேர்த்து அரைத்து கா
வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர்
எரிச்சல் தீரும்.

* குழந்தைகளுக்குத் தினமும் 10
வல்லாரை இலைகளை பச்சையாக
மென்று சாப்பிடக் கொடுத்தால்
மூளை நரம்புகள் வலுப்பெறும்.
தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள்
குறையும்.

* ஞாபக சக்தியைத் தூண்டும்
வல்லாரையை ‘சரஸ்வதி மூலிகை’ என்றும்
அழைக்கின்றனர்.

* வல்லாரை, ரத்த சோகையைப்
போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின்
எண்ணிக்கையை அதிகரிக்கும்.

* வல்லாரைப் பொடியைக் கொண்டு பல்
துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப்
போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும்.

* இளைப்பு, இருமல்,
தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போ
காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த
மருந்தாகும்.

* வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர்
வடிதல் போன்றவற்றைப் போக்கி கண்
நரம்புகளுக்கு நன்மை அளிக்கும்.

* நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக்
கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்
சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண்,
குடல்புண்ணை ஆற்றுகிறது.

* யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர
்கள் வல்லாரை இலையை அரைத்துக் கட்டினால்
நோயின் தாக்கம் குறையும். அதுபோல
விரை வீக்கம், வாயு வீக்கம், கட்டிகளின்
மீது பூசி வந்தால் குணம் கிட்டும்.

*
வல்லாரை இலையை முறைப்படி எண்ணையாக்க
தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல்
சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும

Thursday, August 1, 2013

விஜய் மல்லையா போட்டோவை இப்படி போடறதுக்கு இருக்கா இந்த வங்கிகளுக்கு?

விஜய்
மல்லையா போட்டோவை இப்படி போடறதுக்கு
இருக்கா இந்த வங்கிகளுக்கு?

கனிமொழியின் திருமணத்திற்கு இந்தியன்
வங்கியிலிருந்து அவரது மாமியார், கணவன்,
மாமனார் ஆகியோருக்கு எந்த வித
உத்திரவாதமும் இல்லாமல் கடனாக (clear over
draft) 37 லட்சம் 1989 ஆம் ஆண்டில்
கொடுத்து அதை வசூல் செய்ய முடியாமல்
அப்படியே மூடியது....

ஸ்டாலினின்
மனைவி துர்காவின் பெயரில் இந்தியன்
ஓவர்சீஸ் வங்கியிலிருந்து வாங்கிய பல லட்சம்
ரூபாய் கடனை திரும்ப செலுத்தாத
தொகையை வசூலிக்க முடியாமல் போனதால்
அவர்களது புகைப்படங்களை போடும்
துணிச்சல் இந்த வங்கிகளுக்கு உள்ளதா?

பாவம் ஏழை மாணவர்கள் கடனை செலுத்த
முடியவில்லை என்றால்
இப்படி அவமானப்படுத்தலாமா?

பெரிய பண
முதலைகளை இப்படி அவமானப்படுத்த
முடியுமா என்ன? தேவைப்பட்டால் அந்த பண
முதலைகளை புதிய
வங்கி கிளை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தி
அழைக்கலாம்...

அது தானே ஜனநாயகம்!

தன்னையறிந்தால்

தன்னையறிந்தால் .
 
அது ஒரு ஏக்க காலம். நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் விவசாயம் நலிவடைந்து மழைக்காக மக்கள் ஏங்கிய காலம். அன்று ஏதோ அதிசயத்து கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யப்போவதாக பாவலா காட்டிகொண்டிருந்த நேரம். மழை வருமா வராதா என்று வானத்தை அன்னாந்து  ஜாதகம் பார்த்து கொண்டிருந்தபோது எனது மகன் சிந்திக்கவேண்டிய ஒரு கேள்வியை கேட்டான்.
 
‘அப்பா சுதந்திரம் என்றால் என்ன? உரிமை என்றால் என்ன
 
நான் அவனை ஒரு நித்ய பார்வை பார்த்துவிட்டு ‘இப்ப ஏன் இந்த கேள்விஎன்றேன்.

Wednesday, July 31, 2013

2015-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்

2015-ம்
ஆண்டு நடைபெறவுள்ள
உலகக்
கோப்பை கிரிக்கெட்
போட்டிக்கான
அட்டவணையை சர்வதேச
கிரிக்கெட் கவுன்சில்
(ஐசிசி) செவ்வாய்க்கிழமை
அறிவித்துள்ளது.

நடப்புச் சாம்பியனான
இந்தியா தனது முதல்
ஆட்டத்தில்
பாகிஸ்தானை பிப்ரவரி 15-
ல் எதிர்கொள்கிறது.

Tuesday, July 30, 2013

சொன்னா புரியாது – திரைவிமர்சனம்

தயாரிப்பு – 360 டிகிரி பிலிம் கார்ப்பரேஷன்  
வெளியீடு – ஸ்ரீ தேனாண்டாள் பிக்சர்ஸ் – என். ராமசாமி
கதை, திரைக்கதை, இயக்கம் – கிருஷ்ணன் ஜெயராஜ்
இசை – யத்தீஷ் மகாதேவ்
வசனம் – சரவணன் சந்துரு
ஒளிப்பதிவு – சரவணன்
படத்தொகுப்பு – டி.எஸ். சுரேஷ்
நடனம் – அஜய்ராஜ், ராஜா
பாடல்கள் – நா.முத்துக்குமார், மதன் கார்க்கி
கலை – ராமலிங்கம்
மக்கள் தொடர்பு – கிளாமர் சத்யா
இன்றைய டிரன்டுக்கு காமெடி படங்கள்தான் நல்லா ஓடுதுன்னு புரிஞ்சி இந்த படத்தைக் கொடுத்திருக்காங்க.

காய்கறி எப்படி பார்த்து வாங்குவது ?


விவசாயத்தில் ஊறி கடந்த நம் முன்னோருக்கு இது பசு மரத்து ஆணி போல் பதிந்திருக்கும் ...நமக்கு அப்படியா ? விவசாயம் - விவசாயி இவைகளை கேவலமாக பார்க்க தெரிந்தோருக்கு அரிசி-காய்கறி களை கேவலமாக பார்க்க தெரியாது தான் -- எப்படியும் வாங்கி தான் ஆக வேண்டும் .... இணையத்தில் இதை படித்த உடன் சற்று வியந்தேன் ... நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் ....

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய் ,தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

எல்லா ஆண்களும் தப்பானவங்க கிடையாது

ஒரு பொண்ணு 20வது மாடில இருந்து கீழ
விழுந்துருச்சு,

15வது மாடில ஒரு பையன்
அந்த பொண்ண பிடிச்சுட்டான்,

நான் உன்ன
காப்பாத்துரேன், நீ என்ன மேரேஜ் பண்ணிக்க,

சீ
நாயே விடு என்ன, விட்டான் திரும்ப கீழ
விழுந்துருச்சு,

10வது மாடில ஒருத்தன் அந்த
பொண்ண பிடிச்சுட்டான்,நான் உன்ன
காப்பாத்தணும்னா எனக்கு முத்தம் கோடு,

சீ
பொறுக்கி ,அவனும் விட்டான் திரும்ப
விழுந்துருச்சு,

5வது மாடில ஒருத்தன் அந்த
பொண்ண பிடிச்சுட்டான்,

இந்த தடவ பயத்துல
அந்த பொண்ணு அவன்கிட்டஓகே நான்
உனக்கு முத்தமும் தரேன்,

உன்ன கல்யாணம்
பண்ணிக்கிறேன் என்ன கீழ விட்டுடாத,.......சீ
ரொம்ப கேவலமான
பொண்ணா இருப்பா போல,,

சாவுடினு
அவனும் கீழ விட்டுட்டான்#

எல்லா ஆணையும் தப்பா நெனச்சா சாவ
வேண்டியதுதான்.

-தமிழ்நாடு நண்பர்கள்
I love Tamilnadu

Monday, July 29, 2013

இந்து முஸ்லீம் ஒற்றுமை

இதை படிங்க முதல்ல...
நேற்று - மதியம் பஸ் பயணத்தின்போது..

சபரி மலையில் இருந்து வேலூர் திரும்பும்
ஒரு அய்யப்ப பக்தர் அருகில்
நின்று கொண்டிருந்த ஒரு முஸ்லிம்
பெரியவருக்கு இருக்க
இடமளித்து எழும்பி நின்றார்...

அந்த பெரியவர் நீங்க இருங்க தம்பி மலையில்
இருந்த இறங்கி களைப்பாக வந்திருப்பீங்க என
கூறி இருக்க மறுத்தார்...

நான் ரெயிலில் வரும்போதே நல்லா ரெஸ்ட்
எடுத்துட்டேன் நீங்க நோன்பு பிடிசிருப்பீங்க
காலைல இருந்தே எதுவும் சாப்பிடாம
களைப்பா இருப்பீங்க...

நீங்க உக்காருங்க
என்று சொல்லி உக்கார வைத்தார்...

மக்கள் தெளிவாகத் தான் இருக்காங்க.

இடையில்
புகுந்து ஆட்டையைக்
கொழப்புறது ஓட்டு வாங்கிகள் தான்.

Winding machine முறுக்கு செய்யும் இயந்திரம்

Sunday, July 28, 2013

வாழ்க்கையை யோசிங்கடா - தமிழ் பாடல் வரிகள்

தமிழால் இணைவோம்:
வாழ்க்கையை யோசிங்கடா
தலையெழுத்தை நல்லா வாசிங்கடா
யோசிச்சு பாருங்கடா
எல்லோரும் ஒன்னா சேருங்கடா
இருக்கிற வரைக்கும் அனுபவிக்க
இளமை ஏத்துக்கடா
வருகிற வரைக்கும் லாபமடா
வசதிய தேடுங்கடா Go

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

ஞாபகம் வந்ததடா
அந்த நான் ஞாபகம் வந்ததடா
நண்பனை விட ஒருத்தன்
லைஃபுக்கு தேவை இல்லையடா
நட்புக்கு கூட கற்புகள் உண்டு
நல்லா தெரிஞ்சிக்கடா
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா
வெற்றிகள் குமியுமடா
நம் வெற்றிகள் குமியுமடா

உழைக்கும் கையை நம்பி
நாளைக்கு உலகமே இருக்குதடா
உண்மைக்கு போராடி
குரல் கொடுத்த ஊரே வணங்குமடா
நான் உங்கள் தோழன்
நீ எந்தன் நண்பன்
பிரிவே இல்லையடா
நாளைய உலகம் இளைஞர்கள் கையில்
நம்பிக்கை வையுங்கடா
என் மேலே நம்பிக்கை வையுங்கடா

காதல் வந்துச்சுன்னா
முகத்துல கலர் பல தெரியுமடா
கண்ணாடி முன்னாடி நீ நின்னா
கவர்ச்சியும் தோணுமடா
காதலி இருந்தா கவலைகள் தீரும்
காதல் பண்ணுங்கடா
அந்த கல்யாணம் மட்டும்
லேட்டா யோசி நல்லா இருக்குமடா
வாழ்க்கை நல்லா இருக்குமடா

தாவுல விழுந்தாக்கா
மனசு நோவுல அழுகுமடா
தீவுல இருப்பதுப்போல்
திசையே தெரியாம போகுமடா
இன்னைக்கு சிரிப்பா நாளைக்கு முறைப்பா
இன்னமும் இருக்குதடா
அந்த ரோதனை நமக்கு
இப்போ எதுக்கு உஷாரா இருந்துக்கடா
ஃபிகர நம்பாம பொழச்சிக்கடா!

சில்லறை வணிகர்கள் கவணத்திற்கு

இதை சற்று உற்று கவனியுங்கள்,

18-7-13 அன்று சில்லறைக் கடையில் வாங்கியது, இதில் வெங்காயம் மட்டும்தான் இருக்கிறதா? இரண்டு கல்லையும் காணலாம் இந்த 30 வேங்கதில் 3 கல், ஒன்று எடுத்து எறிந்துவிட்டோம், வெங்காயத்தில் கூட கல் கலப்படமா? அப்போ ஏன் மக்கள் பன்னாட்டு நிறுவன கடைகளுக்குச் செல்லமாட்டார்கள்.

பன்னாட்டு நிறுவன கடைகளில் இப்படி கலப்படம் இல்லையே.

பன்னாட்டுக்கடைகளுக்குச் சென்று பணம்படைதவர்கள் வாழ்கிறார்கள், சில்லறை வர்த்தக கடைகளுக்குச் சென்ற ஏழைகள் ஏமாறுகிறார்கள் .

சில்லறை வர்த்தக கடைகளில் விலை குறைவாக இருக்கிறது என்று என்கிறார்கள், கல்லை நீக்கிவிட்டால் பிறகு இருக்கும் வெங்காயத்தின் மதிப்பு பன்னாட்டு நிறுவன கடைகளில் இருக்கும் பொருள்களின் விளைவிட கூடுதலாகவே இருக்கும்.

வெள்ளையன் போன்ற வியாபாரிகளின் தலைவன் உள்நாட்டு வியாபாரிக்குச் சற்று எடுத்து சொல்லுங்களேன் பன்னாட்டு நிறுவனம் வாராமல் தடுக்க முயற்சிச் செய்யுங்கள்
சிறு வியாபாரிகளே உங்கள் வியாபாரத்தை நீங்களே கெடுத்துக்கொள்ளாதீர்கள்
இதை சற்று உற்று கவனியுங்கள், 18-7-13 அன்று சில்லறைக் கடையில் வாங்கியது, இதில் வெங்காயம் மட்டும்தான் இருக்கிறதா? இரண்டு கல்லையும் காணலாம் இந்த 30 வேங்கதில் 3 கல், ஒன்று எடுத்து எறிந்துவிட்டோம், வெங்காயத்தில் கூட கல் கலப்படமா? அப்போ ஏன் மக்கள் பன்னாட்டு நிறுவன கடைகளுக்குச் செல்லமாட்டார்கள்.

பன்னாட்டு நிறுவன கடைகளில் இப்படி கலப்படம் இல்லையே. பன்னாட்டுக்கடைகளுக்குச் சென்று பணம்படைதவர்கள் வாழ்கிறார்கள், சில்லறை வர்த்தக கடைகளுக்குச் சென்ற ஏழைகள் ஏமாறுகிறார்கள் .

சில்லறை வர்த்தக கடைகளில் விலை குறைவாக இருக்கிறது என்று என்கிறார்கள், கல்லை நீக்கிவிட்டால் பிறகு இருக்கும் வெங்காயத்தின் மதிப்பு பன்னாட்டு நிறுவன கடைகளில் இருக்கும் பொருள்களின் விளைவிட கூடுதலாகவே இருக்கும்.

வெள்ளையன் போன்ற வியாபாரிகளின் தலைவன் உள்நாட்டு வியாபாரிக்குச் சற்று எடுத்து சொல்லுங்களேன் பன்னாட்டு நிறுவனம் வாராமல் தடுக்க முயற்சிச் செய்யுங்கள் சிறு வியாபாரிகளே உங்கள் வியாபாரத்தை நீங்களே கெடுத்துக்கொள்ளாதீர்கள்

Labels

Popular Posts