Tuesday, July 30, 2013

சொன்னா புரியாது – திரைவிமர்சனம்

தயாரிப்பு – 360 டிகிரி பிலிம் கார்ப்பரேஷன்  
வெளியீடு – ஸ்ரீ தேனாண்டாள் பிக்சர்ஸ் – என். ராமசாமி
கதை, திரைக்கதை, இயக்கம் – கிருஷ்ணன் ஜெயராஜ்
இசை – யத்தீஷ் மகாதேவ்
வசனம் – சரவணன் சந்துரு
ஒளிப்பதிவு – சரவணன்
படத்தொகுப்பு – டி.எஸ். சுரேஷ்
நடனம் – அஜய்ராஜ், ராஜா
பாடல்கள் – நா.முத்துக்குமார், மதன் கார்க்கி
கலை – ராமலிங்கம்
மக்கள் தொடர்பு – கிளாமர் சத்யா
இன்றைய டிரன்டுக்கு காமெடி படங்கள்தான் நல்லா ஓடுதுன்னு புரிஞ்சி இந்த படத்தைக் கொடுத்திருக்காங்க.
பெரியவங்களால கல்யாணம் நிச்சயிக்கப்படற ஜோடி, அவங்களாவே கல்யாணம் வேண்டாம்னு முடிவு பண்ணி பிரிஞ்சி போறாங்க…அப்புறம் என்ன நடக்குது…இதுதான் படத்தோட ஒரு வரிக் கதை. ஆனால், இதை நகைச்சுவை முலாம் பூசி ரசிக்க வச்சிருக்காங்க…
சிவா, டப்பிங் படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்கிற ஒரு டப்பிங் கலைஞர். கல்யாணமே வேணாம்னு நினைக்கிறவருக்கு, அம்மாவோட தொல்லை தாங்காம  முடியாம கல்யாணத்துக்கு சம்மதிக்கிறாரு. இவருக்கும், ஆன்மீகத்துல அதிக ஈடுபாடுள்ள வசுந்தராவுக்கும் கல்யாணம் நிச்சயமாகுது. ஆனால், எப்படியாவது கல்யாணத்தை நிறுத்த முடிவு பண்றாரு சிவா. ஆனால், எதிர்பாராம வசுந்தரா அந்த அளவுக்கு ஆன்மீகத்துல பழமா இருக்கிறவரு இல்லை, பார்ல பீர் குடிச்சி வாந்தி எடுக்கிற பார்ட்டிதான்னு தெரிய வருது.
அப்புறமா இரண்டு பேருமே ஆளுக்கு ஒரு பிரச்சனையை வீட்டுல சொல்லி கல்யாணத்தை நிறுத்திடறாங்க. ஆண்மைக்கும், பெண்மைக்குமே சவால் விடற பிரச்சனையை சொல்றது ரொம்ப ஓவர்தான். போகப் போக, வசுந்தராவுக்கு தமிழ் சினிமா வழக்கப்படி ஹீரோவான சிவா மேல காதல் வருது. ஆனால், அவர் வசுந்தரா காதலை ஏத்துக்கவே மாட்டறாரு..அப்புறம் என்னங்கறதுதான் படத்தோட கிளைமாக்ஸ்.
இடைவேளை வரைக்கு, சிவா அன்ட் கோ டீமால படம் கலகலப்பா நகரு. அவரு, பிளேடு சங்கர், அந்த குண்டான ஸ்டுடியோ ஓர் படத்தை போறது தெரியாம கொண்டு போறாங்க…இடைவேளைக்கு அப்புறமா கதையை எப்படி நகர்த்தறதுன்னு தெரியாம, இயக்குனர் கொஞ்சம் குழம்பிட்டாரு போல. டிவி நிகழ்ச்சி, அப்படி இப்படின்னு கொஞ்சம் தள்ளாடுது.
சிவா, தமிழ் சினிமாவுல இதுவரைக்கும் யாரும் பண்ணாத ஒரு கேரக்டரை பண்ணியிருக்காருன்னு சொல்லாம். அதாவது, டப்பிங் படங்களுக்கு குரல் கொடுக்கிறது. அதுவும் சும்மா இல்லை, டிஸ்கவரி சேனல்ல குரங்கு லவ் பண்றதுக்குலாம் கூட குரல் கொடுக்கிறாரு. வழக்கம் போலவே டயலாக் மட்டும் கரெக்டா டெலிவரி பண்ணி சிரிக்க வச்சிடறாரு…அது மட்டும் போதும்னு நினைக்காதீங்க சிவா, இன்னும் டிரை பண்ணுங்க…
ஆன்மீகப் பழமா வசுந்தரா அறிமுகமாகும் போதே, என்னடா இது இந்த காலத்துல இப்படி ஒரு கேரக்டரான்னு நாம ஆச்சரியப்படறத, அப்புறமா அதல பாதாளத்துல தள்ளி விடறாரு டைரக்டர். பார்ட்டி, பப், பீர் இப்படின்னு இந்த காலத்து அல்ட்ரா மாடர்ன் கேர்ளலா போகப் போக மாறிடறாங்க வசுந்தரா. என்ன இருந்தாலும் கிராமத்து பாவாடை, தாவணில அழகா இருக்காங்க…அதுலயே பார்த்து பார்த்து பழகிட்டமோ…
சிவா நண்பர்களா பிளேடு சங்கர், ஒரு குண்டு பார்ட்டி (சாரி, பேரு என்னன்னு தெரியலை)…நல்லாவே சிரிக்க வைக்கிறாங்க…காமெடி ஹீரோக்களும் அவங்களுக்கு சப்போர்ட்டா சிலரை சேர்த்துக்கறாங்க…நல்லதுதான…நமக்கு சிரிப்பு வந்தால் சரி….
சிவாவை, ‘மேட்டர்’ பத்தி பேசியே கலாய்க்கற சிவாஜி, பாதையாத்திரை போயிடுவன்னு சொல்லி பயமுறுத்தற அம்மா மீரா கிருஷ்ணன், ‘டேப்’ வச்சிக்கிட்டு அலப்பரை பண்ற வத்சலா பாட்டி, இவங்க கேரக்டர்ஸ்ம் ரொம்ப இன்ட்ரஸ்டிங்…
யத்தீஷ் மகாதேவ் இசையில ‘காலியான சாலையில்…’, ‘உன்   தோளில் சாய்ந்து…’ ரசிக்க வச்சிருக்கு…
மல்டி பிளக்ஸ்ல மட்டும் ஓடாம, மத்த ஊர்லயும் ஓடினால் சரிதான்…என்ன சொல்றோம்னு புரியுதா….?
“சொன்னா புரியாது” விமர்சனத்தை புரியற மாதிரிதான எழுதியிருக்கோம்….

No comments:

Post a Comment

Labels

Popular Posts