Saturday, August 10, 2013

காதல் வந்தால் சொல்லிவிடு !

காதல் என்றாலும்
வாழட்டும்....
காதலித்தேன் நீ
காதலிக்கவில்லை
காதலித்தாய் நீ
காதலிருக்கவில்லை....!
துன்பப்பட்டாய் நீ
துவண்டேன் நான்...!
துவண்டதும் நீ
துடித்துவிட்டாய்
கண்ணே..!
துடித்த இதயத்தை நீ
தூய்மையாக்கினாய்
தூய்மையான நீ
காதலை
ஏற்கவில்லையே...?
காலம் கடந்த ஞானம்
காதலை கற்குழிக்குள்
தள்ளி
விடும் - காதல் வந்தால்
உடனே சொல்லிவிடு...
!
காதலர்
வாழாவிட்டாலும்
காதல் என்றாலும்
வாழட்டும்....!

Thursday, August 8, 2013

காதலின் அன்பு தொல்லை

கள்ளி நீபாலைவனத்தில்முளைத்த கள்ளியாய்என் மனதில் முளைத்தகள்ளி நீ .பருவத்தின் வாசலில்எனக்கு நீ ராணி தான் .உன் உதடும் என் உதடும்பற்றியவேளை ,உலகமே எமக்கில்லை .வளர் பிறை போல்எம்காதல் மலரபிடித்தது சனிஉன்னப்பனுக்கு .தன்னையும்உன்னையும்பிரிக்கவந்த சுவர்நான் என்றான் .இனிப்பானபேச்சினால்தந்திரமாய்உனை மாற்றி ,மாணவர் விசாவில்பறக்கவைத்தான் .உன் தொடுகைச்சூடும் ,உன் முத்தத்தின்இனிப்பும் ,இனியவையாகவேஎன்மனதில் இருக்கும் .உன் பிரிவுவாட்டினாலும்உன் நினைவுடன்நான் இருப்பேன்கள்ளி ..............

Wednesday, August 7, 2013

பழைய சோறும் பச்ச மிளகாயும்

உழைத்து களைத்தபின் பழைய சோறு, வெங்காயமும், பச்ச மிளகாய் திங்கம் ருசி வேறு எதிலும் கிடைக்காது. 

பழைய சோறு உண்பதால் உழவனுக்கு சுடு சோறு உண்ணும் அளவு வசதி இல்லை என்று நாம் எண்ணிவிட கூடாது.

விவசாய வேலை பார்க்கும் பொது சூரியனின் கதிர்கள் உழவனின் மேல் விழுவதால் அதிகமான நீர் வேர்வையாக வெளியேறும், நீர் சத்து குறையும் அதை ஈடு செய்யவே தண்ணீர் ஊற்றிய பழைய சோறை உழவன் உண்டான்.

எந்த காலத்தில் எந்த மாதிரி உணவுப் பண்டங்கள் உண்ணவேண்டும் என்றும் தமிழன் ஆதியிலேயே அறிந்து வைத்திருந்தான். நவீனம் என்ற பெயரில் இன்று அனைத்தையும் தொலைத்து விட்டு நிற்கிறோம்.

படம் : உழவனின் பசியை போக்க வரிசையில் காத்திருக்கும் தூக்கு சட்டிகள்.

வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்

தமிழ் - Tamil:
நமக்கு முறையாக சேரவேண்டிய நிலத்தை தான் நாம் போராடாமல் #இந்திய மாயையில் சிக்கி இழந்து விட்டோம். இலசவசமாக கிடைக்கும் மழை நீரைக் கூடவா சேமிக்க ஒரு திட்டமில்லை. #தமிழர் நாட்டை அணு உலைகளால் நிரப்பி, நிலங்களையும் வளங்களையும் இழந்து , #காற்று , மண் , #நீர் மாசடைவதை தடுக்கவும் முடியாமல், இந்திய அரசை எதிர்த்து பேசவும் முடியாமல் வேடிக்கை பார்க்கும் ஒரு கங்காணி அரசு #தமிழக அரசு. மழைநீரை சேமிக்க இந்நேரம் ஒரு பெரும் திட்டம் தீட்டி இருக்க வேண்டாமா ? அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டு விட்டு செல்லப் போகிறோம் ?
--------------------------------------------------------------------
#தமிழக அரசின் முறையான திட்டமிடாததால் கொள்ளிடத்தில் நேற்று ஒரே நாளில் #சென்னை நகரின் ஆறு மாத குடிநீர் தேவைக்கான தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. நீரை தக்க வைப்பதற்கான திட்டங்களில், #பொதுப்பணித்துறை ஈடுபட்டிருந்தால், கடலில் வீணாக கலப்பது தடுக்கப்பட்டிருக்கும்.கடந்த ஓராண்டுக்கு மேல் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தபோது தூர் வார வேண்டும் என்ற #ஞானம் அரசுக்கு இல்லை .

கடலில் கலக்கும் ஆற்று உபரி நீரை அரசு சேமிக்க எதுவும் செய்வதில்லை. இனி வரும் காலங்களில் காவிரியில் தடுப்பணைகள் அமைப்பது, புதிய கதவணைகள் அமைப்பது,சிறு #அணைகள் கட்ட,கரையை உயர்த்தி தொடர்ந்து பராமரிக்க,#கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்த நடவடிக்கை தேவை...

ஒவ்வொரு #பருவ மழையின் போதும், #காவிரியில் இருந்து, கடலில் வீணாக கலக்கும் நூற்றுக்கணக்கான, டி.எம்.சி., மழை நீரை, முறையாக, சேமிப்பதற்கு, கடந்த ஆண்டு, #காவிரி தொழில் நுட்ப குழுவின் தலைவர், #சுப்பிரமணியன் தலைமையில், தனிக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, காவிரியில், தடுப்பணைகள் அமைப்பது, புதிய கதவணைகள் அமைப்பது என, பல்வேறு விதமான பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியது. மேலும், காவிரி கரைகளில், எவ்வளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன, அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பது குறித்தும், பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. பரிந்துரைகள் வழங்கி, ஆறு மாதத்துக்கு மேல் ஆகிறது. அந்த பரிந்துரைகள் வந்த போதே, திட்டம் தீட்டி இருந்தால், தற்போது தென்மேற்கு பருவமழையின் போது, வீணாகும் #மழைநீர், சேமிக்கப்பட்டிருக்கும். எனவே, இனிமேலாவது, இப்பிரச்னையில் அரசு, "தூங்காமல்' உடனடி நடவடிக்கை எடுத்தால், குடிநீருக்கு மட்டுமின்றி, பாசனத்துக்கும் பிரச்னை ஏற்படாமல் போகும்.

எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் ? நேரடி ரிப்போர்ட்

எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் ?- நேரடி ரிப்போர்ட்

************************

முதல்வருக்குக் கீழே வரிசையாய்ப் படிக்கட்டில்
உட்கார்ந்திருந்த ஆர்.எம்.வீ. உட்பட அமைச்சர்கள்
அனைவரும் எழுந்தனர்.

படிக்கட்டுகளைத்
தாண்டி, பிரதமர் ராஜீவ் கூட்டத்துக்குள்
இருந்து வந்தார். மலர் வளையம்
வைத்து வணங்கிவிட்டு, முதல்வரைப்
பார்த்தபடியே சற்று நேரம் நின்றார்.

பிரதமர்
புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்,
கடற்படை வீரர்கள் மலர் வளையத்தோடு..
ஒரு தட்டு நிறையப் பூக்களுடனும் முன்வர,
ஜனாதிபதி வெங்கட்ராமன் தன்
துணைவியாருடன் வந்தார்.

அவரைத்
தொடர்ந்து கவர்னர்... இப்படி ஒரே வி.ஐ.பி-க்கள்
மயமாய் இருந்தது.

தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த
சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத்
தழுவிக் கொண்டு அழுதார்.

குழந்தைபோலத்
தேம்பியபடி, ''இன்னிக்கா, நேத்திக்கா...
நாப்பது வருஷமா அண்ணன்
தம்பியா இருந்தோமே...

'எதுன்னாலும் நீ
என்னை வந்து பார்... ஏன் நீ வர
மாட்டேங்கறே?’ன்னாரே... இனி நான் யார்கிட்ட
போவேன்?''

என்று சிவாஜி குமுறிக்கொண்டு இருந்தபோது,
ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ்
மண்டபத்துக்குள் நுழைந்தார்.

அடுத்த சில
நிமிடங்களில் கருப்பையா மூப்பனார்,
பழனியாண்டி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள்
வந்து சேர்ந்தனர்.

ஓர் அ.தி.மு.க பிரமுகர் ஆர்.எம்.வீ-யிடம் வந்து,
''ரஷ்யாவில் லெனினின் உடலை ரசாயனத்
திரவத்தில் வைத்திருக்கிற மாதிரி, தலைவர்
உடலையும் வைக்கணும்.

சென்னையிலேயே ஒருவர், தான் அப்படிச்
செய்து தருவதாகப் பல
முறை கல்வி அமைச்சருக்கு பெட்டிஷன்
கொடுத்து இருக்கிறார்...'' என்றார்.

சற்று யோசனையுடன் இருந்த ஆர்.எம்.வீ.,
''அதெல்லாம் வேண்டாம்... தலைவர்
அதை விரும்ப மாட்டார்.

அண்ணாவைப்போல,
சந்தனப் பெட்டிக்குள் வைத்தே அடக்கம்
செய்யலாம்!'' என்றார்.

அந்தப் பிரமுகர்
விடாப்பிடியாக, ''சந்தனப் பெட்டி நாட்பட
நாட்படக் கரைஞ்சு போகும். நாம் கண்ணாடிப்
பெட்டியில் ரசாயனத் திரவத்துக்குள்
தலைவரைவெச்சு, அதை சந்தனப் பெட்டிக்குள்
வைத்துவிட்டால், உடல் அப்படியே இருக்கும்!''
என்றார்.

சற்று யோசித்த ஆர்.எம்.வீ., ''எக்ஸ்பெரிமென்
டலா எதையும் செய்ய முடியாது.
முறையல்ல... அதெல்லாம் வேண்டாம்!''

என்று மறுத்தார். பின்னர் நெடுஞ்செழியன்,
ஆர்.எம்.வீ., பண்ருட்டி ராமச்சந்திரன் அடங்கிய
குழு ஒன்று, முதல்வர் அடக்கம் செய்யப்பட
இருந்த இடத்தைப் பார்வையிடக் கிளம்பியது.

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்,
ஜெயலலிதாவிடம் சென்று, ''காலையில
இருந்து நின்னுட்டே இருக்கீங்க... கொஞ்ச நேரம்
ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்...'' என்றார்.

ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே
இல்லை.

நின்ற இடத்திலேயே அசையாமல்
இருந்தார்.
முதல்வரின் நெருங்கிய
உறவினர்களை அழைத்தார் டி.ஜி.பி. ரவீந்திரன்!

''இறுதிச் சடங்குகள் குடும்ப வழக்கப்படிதானே.
..?'' என்றார். அவர்கள், ''ஆம்'' என்றதும், ''நீங்க
இப்போ தோட்டத்துக்குப் புறப்படுங்க...

நாளை மதியம் இரண்டு மணிக்கே அடக்கம்
செய்யும் இடத்துக்கு வந்துடுங்க. நீங்க
மறுபடியும் நாளைக்கு இங்க
வந்து ஊர்வலத்தில் மாட்டிக்க வேண்டாம்!''

என்று, அவர்களை ராமாவரம் அனுப்பிவைத்தார்.
திரும்பிய திசையெல்லாம் ஆண்களும்
பெண்களுமாக, முண்டியடித்துக்
கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர்
கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித்
தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6
மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது,
வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள்
மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம்
பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர்.

ஒரு காவல் துறை அதிகாரியிடம்,
''அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்...
என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க... என்
சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்!''
என்று இரு கைகளாலும்
மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார்
கிராமத்துப் பெரியவர் ஒருவர்.

இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள்
மதியம்வரை சாப்பாடு, தண்ணீர் எதுவும்
இல்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில்
காத்துக் கிடந்தனர்.

திருவல்லிக்கேணி பகுதியில்
இருந்து எழிலகம்வரை வரிசை இருந்தது.
வெளியூரில் இருந்து வந்திருந்த
பெண்மணி ஒருவர், ''நாங்க தவமிருந்து பெத்த
தலைப் புள்ளை போயிடுச்சே... எங்க குல
தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே...
ஐயா, ஐயா...'' என்று கதறினார்.

கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க
நின்ற ஓர் இளம்பெண்,
''இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா,
எங்களை அனாதையாத் தவிக்க விட்டுட்டுப்
போயிட்டாரு புரட்சித் தலைவரு...''
என்று விசும்பினார்!

கோவையில் இருந்து மருத்துவப் பல்கலைக்கழக
விழாவுக்கென்று பஸ் பிடித்து வந்திருந்த
ஒரு குழுவிடம் எழிலகம் அருகே பேச்சுக்
கொடுத்தோம். நா தழுதழுக்கச் சொன்னார்...
''அடிமட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க
அவரு... நாங்க இன்னும் நம்ப மாட்டோமுங்க...
பல தடவை ஆன மாதிரி இதுவும் வதந்தியாப்
போயிடணுமுங்க... இதே செய்தி எங்க ஊர்ல
இருந்து கேட்டிருந்தா, நம்ப மாட்டோமுங்க...

இது இப்பவும் வதந்தியாப் போவணுமுங்க...''

என்று குமுறிக் குமுறி அழுதார் அந்த
அ.தி.மு.க. தொண்டர்!

ராஜாஜி ஹாலில் முதல்வரின் உடல்
பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட
அதே சமயம், நாவலர் மற்றும் உயர் அதிகாரிகள்,
சமாதிக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க
மெரினா பீச் வந்தார்கள்.

முதலில் ஐ.ஜி. ஆபீஸ்
எதிரே போய்ப் பார்த்து, எந்த இடத்தில் எந்த
அமைப்பில் சமாதி அமைய வேண்டும்
என்பதை முடிவு செய்தார் நாவலர். ஆனால்,
உள்துறைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன்
மற்றும் ஜேப்பியார் போன்றோர், ''அண்ணாவின்
இதயக்கனி என்று பெயர் வாங்கியவர் தலைவர்.
அவரை அண்ணா சமாதிக்கு அருகில்தான்
புதைக்க வேண்டும்...'' என்று வாதிட்டார்கள்.

பின்னர் நாவலரும்
சம்மதித்து அண்ணா சமாதி அருகே வந்து இடம்
தேர்ந்தெடுத்தார்.

இடம் தேர்ந்தெடுத்த அரை மணி நேரத்தில்,
பொதுப் பணித் துறையின் பணியாளர்கள்
வெகுவேகமாகச் செயல்பட்டார்கள்.

ஆனால்,
வியாழன் மதியம் தொடங்கிய வேலை,
வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் முடிந்தது.
உள்துறைச் செயலாளரும், டி.ஜி.பி-யும்
அடிக்கடி வந்து மேற்பார்வையிட்ட
ு வேலையைத் துரிதப்படுத்தினர்.

முதல்வரின் உடல் மெரினா வரும்
முன்பே லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்...
ஆயிரக்கணக்கில் போலீஸ்...
டிரக்கில் இருந்து முதல்வரின் உடலைக்
கீழே இறக்கும் சமயம், சுற்றியிருந்த கும்பல்
நெருக்கியடித்துக் கொண்டு சமாதி அருகில்
வரத் துடித்தது.

சமாதியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள்
ஓடி வர, போலீஸாரில் ஒரு பிரிவினரான
குதிரைப் படை அவர்களை அடக்கப்படாதபாடு
பட்டது. முடியவில்லை.

எனவே, கண்ணீர்ப்
புகைக் குண்டு வீசப்பட்டது. ''அடப்
பாவிங்களா... தலைவரைப் பார்க்க வந்தவங்க
கண்ணைக் குருடாக்கப் பார்க்கறீங்களா...''
என்று குரலெழுப்பியவாறு மண்ணையும்
கற்களையும் எறிந்தனர். இந்தக் களேபரத்தில்
சிலர் சமாதி அருகே வந்து, ''வாத்யாரே...
தெய்வமே... அப்பா...'' என்றெல்லாம் கதறித்
துடித்தார்கள்.

வேறு வழி இல்லாமல் போலீஸார்
அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித்
தூரமாய் எறிய வேண்டி வந்தது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸ்
துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது.
ஆவேசமாக வந்த கூட்டம்...

''தலைவனை வெச்சிருக்கிற
இடத்துலே உயிரைவிட்டா, அதுவே போதும்...
சுடுங்க...!'' என்று அலற, போலீஸார்
துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி வந்தது.
சுமார் 3.40-க்கு முதல்வரின் உடல்
வந்து சேர்ந்தது. உடனே மத்திய அமைச்சர்
சிதம்பரமும் அருகில் சென்றார்.

உள்துறைச்
செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தன் சட்டையில்
இருந்து சென்ட் பாட்டிலை எடுத்து சந்தனப்
பேழையில் தெளித்தார்.

தொடர்ந்து முதல்வரின்
உடல் மீதும் மரியாதையுடன் தெளித்தார்.
''சி.எம்.மோட ஃபேவரிட் பிராண்ட்...''
என்று முணுமுணுத்தார்.

அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின்,
முதல்வரின் உடலில் இருந்து தேசியக்
கொடி அகற்றப்பட்டது. அவரின்
உடை கொஞ்சமும் கசங்காமல் காணப்பட்டது.

வலது கையில் ஒரு மோதிரமும் வாட்ச்சும்
இருந்தது. ஓர் அமைச்சர், ''எதையும் கழட்ட
வேண்டாம்னு சொல்லிடுங்க...'' என்றார்.
''கழட்ட வேண்டாம்'' என்று பலரும் கோரஸாகக்
கத்தினார்கள். அப்படியே உடல் பேழைக்குள்
வைக்கப்பட்டது.

தொடர்ந்து உள்துறைச் செயலாளர் ''எல்லோரும்
பார்த்தாகிவிட்டதா?''
என்று கேட்கும்போதே என்.டி.ஆர்., ''எம்.ஜி.ஆர்!''
என்று உணர்ச்சிகரமாகக் குரல்
கொடுத்தபடியே பேழையை மூட, ''வாழ்க!''
என்ற கோஷம் எதிரொலிக்க, கூடியிருந்த
அமைச்சர்கள் சிலர் கலங்கிப் போய் ''ஏன்
மூடினீங்க... திறங்க... தலைவர் முகத்தைக்
கடைசியா ஒரு தடவை பார்க்கணும்...''
என்று கதறினார்கள்.

குறிப்பாக ராஜாராமும்
ஆர்.எம்.வீ.யும், ''திறங்க...'' என்றார்கள் உரக்க!
ஆனால், டி.வி.வெங்கட்ராமன், ''வேணாம் சார்...
ஒரு முறை மூடிட்டா திரும்பத் திறக்கக்
கூடாது... அது சம்பிரதாயம்...'' என்றார்.
இப்போது வீரப்பனுடன் சௌந்தரராஜனும்
சேர்ந்து, ''ப்ளீஸ்...
கடைசியா ஒரு தடவை பார்த்து விடுகிறோம்...''
என்று கெஞ்சினார்கள். உடனே உள்துறைச்
செயலாளர் கையெடுத்துக் கும்பிட்டு,
''வேணாங்க... சம்பிரதாயப்படி மூடப்பட்ட
பெட்டியைத் திரும்பத் திறக்கக் கூடாது... நான்
நல்லதுக்குதான் சொல்றேன்...''
என்று சொன்னார். அத்துடன், ''உம்! சந்தனக்
கட்டையை எடுங்கப்பா...'' என்று குரல்
கொடுக்க, துண்டு துண்டாய் இருந்த சந்தனக்
கட்டைகள் ஆளுக்கொன்றாய் கொடுக்கப்பட்டன.

பிறகு, ராணுவம் மற்றும் போலீஸ் மரியாதை...
குண்டுகள் முழங்க, பேழைக் குழியினுள்
இறக்கப்பட்டது. சௌந்தரராஜன் தன் மடியில்
வைத்து இருந்த புனித கங்கை நீர்ச்
செம்பை உடைத்துக் குழியில் தெளித்தார்.

மற்றவர்கள் அழுது கொண்டே சந்தனக்
கட்டைகளைப் போட்டார்கள்.

டி.ஜி.பி. ரவீந்திரன், ''உப்பு...'' என்று குரல்
கொடுத்தார். எல்லார் கைக்கும் உப்பு வந்தது.

கடைசியாகப் பளிங்குக் கல்
கொண்டு வரப்பட்டு, அந்த மாமனிதரின்
கல்லறை மூடப்பட்டது.

உள்துறைச் செயலாளர் தன் பாக்கெட்டில்
இருந்து சூடம் எடுத்து சௌந்தரராஜனிடம்
கொடுக்க, அவர் அதைக் கொளுத்தினார்.

ஒவ்வொருவராய் சூடத்தைக் கண்களில் ஒற்றிக்
கொண்டார்கள்

இளவயது ஆணின் செக்ஸ் உணர்வு

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும்வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான்.
ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட்கையுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள்.
ஆனால் நடு வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறான்.

Tuesday, August 6, 2013

காதலின் அன்பு தொல்லை 07-08-2013

சொல்லாமல்
கொள்ளாமல்
நினைத்ததை
செய்வேன்
செய்ததை திரும்பிப்
பார்ப்பதில்லை
சரியா தவறா என்று
எண்ணுவதில்லை
சரி என்றாலும்
சரி தான்
தவறு என்று
கணித்தாலும்
சரி தான்.
சிரிப்புடன் எடுத்துக்
கொள்வேன் எதையும்
பாராட்டை
எதிர்பார்ப்பதில்லை
கொஞ்சம் கூட
என் நோக்கில்
செல்கிறேன்
முழு விருப்பத்துடன்
எங்கு என்று
தெரியாமல்
நடக்கிறேன்
தெரிந்தால் பயணம்
நின்று விடும்
அஞ்சகிறேன்
அறியாமல் நெடுந்
தூரம் செல்ல
முயல்கிறேன்
முடிவில்லாத
இடத்தை அணுக
வேண்டும்
விரைவில் அடைவேன்
என்ற உறுதியுடன்
போகிறேன்
சொல்லாமல்
கொள்ளாமல்

Monday, August 5, 2013

திருநெல்வேலி

தென்றலுக்கு "தென்காசி"

குளிக்க "குற்றாலம்"

பாவம் போக்க "பாபநாசம்"

பார்த்து ரசிக்க "மாஞ்சோலை"

பறவைக்கு "கூந்தன்குளம்"

தண்ணிருக்கு "தாமிரபரணி"

சிமெண்டுக்கு "சங்கர்நகர்"

படிப்புக்கு "பாளையங்கோட்டை"

கோவிலுக்கு "நெல்லையப்பர்"

சர்ச்சுக்கு "கதீட்ரல்"

மசூதிக்கு "மேலப்பாளையம் "

அன்புக்கு "அல்வா"

வம்புக்கு "அருவா"

சொர்க்கமே என்றாலும்

அது திருநெல்வேலி போல வருமா???

மனதின் பக்குவம் - புத்தரின் போதனை

தமிழால் இணைவோம்:
புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகச் சென்றுகொண்டிருந்தார்.

ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்திலோ வசைமொழிகளுடன் அவமானப்படுத்தல்களும் அரங்கேறின.

புத்தரோ அமைதியாய் கடந்து செல்ல முற்பட்டார்.

அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.

“யோவ்.. இவ்ளோ திட்டறோமே, சூடு சொரணை ஏதும் உனக்கு இல்லையா?” என்று கடைசியில் கேட்டேவிட்டார்கள்.

புத்தர் சிரித்துக்கொண்டே..

“இதுக்கு முன் நான் சென்ற கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்து, புகழாரம் சூட்டினார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என அத்தனையும் திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு செல்லப் போவதில்லை. இங்கே தான் தந்துவிட்டுச் செல்லப்போகிறேன். எனவே எதுவும் என்னை பாதிக்கச் செய்யாது” என்றாராம்.

காயப்படுவதும், காயப்படுத்துவதும் நம் மனதின் பக்குவத்தை பொறுத்தே அமையும்.

Labels

Popular Posts