Tuesday, August 6, 2013

காதலின் அன்பு தொல்லை 07-08-2013

சொல்லாமல்
கொள்ளாமல்
நினைத்ததை
செய்வேன்
செய்ததை திரும்பிப்
பார்ப்பதில்லை
சரியா தவறா என்று
எண்ணுவதில்லை
சரி என்றாலும்
சரி தான்
தவறு என்று
கணித்தாலும்
சரி தான்.
சிரிப்புடன் எடுத்துக்
கொள்வேன் எதையும்
பாராட்டை
எதிர்பார்ப்பதில்லை
கொஞ்சம் கூட
என் நோக்கில்
செல்கிறேன்
முழு விருப்பத்துடன்
எங்கு என்று
தெரியாமல்
நடக்கிறேன்
தெரிந்தால் பயணம்
நின்று விடும்
அஞ்சகிறேன்
அறியாமல் நெடுந்
தூரம் செல்ல
முயல்கிறேன்
முடிவில்லாத
இடத்தை அணுக
வேண்டும்
விரைவில் அடைவேன்
என்ற உறுதியுடன்
போகிறேன்
சொல்லாமல்
கொள்ளாமல்

No comments:

Post a Comment

Labels

Popular Posts