Wednesday, August 7, 2013

வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்

தமிழ் - Tamil:
நமக்கு முறையாக சேரவேண்டிய நிலத்தை தான் நாம் போராடாமல் #இந்திய மாயையில் சிக்கி இழந்து விட்டோம். இலசவசமாக கிடைக்கும் மழை நீரைக் கூடவா சேமிக்க ஒரு திட்டமில்லை. #தமிழர் நாட்டை அணு உலைகளால் நிரப்பி, நிலங்களையும் வளங்களையும் இழந்து , #காற்று , மண் , #நீர் மாசடைவதை தடுக்கவும் முடியாமல், இந்திய அரசை எதிர்த்து பேசவும் முடியாமல் வேடிக்கை பார்க்கும் ஒரு கங்காணி அரசு #தமிழக அரசு. மழைநீரை சேமிக்க இந்நேரம் ஒரு பெரும் திட்டம் தீட்டி இருக்க வேண்டாமா ? அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டு விட்டு செல்லப் போகிறோம் ?
--------------------------------------------------------------------
#தமிழக அரசின் முறையான திட்டமிடாததால் கொள்ளிடத்தில் நேற்று ஒரே நாளில் #சென்னை நகரின் ஆறு மாத குடிநீர் தேவைக்கான தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. நீரை தக்க வைப்பதற்கான திட்டங்களில், #பொதுப்பணித்துறை ஈடுபட்டிருந்தால், கடலில் வீணாக கலப்பது தடுக்கப்பட்டிருக்கும்.கடந்த ஓராண்டுக்கு மேல் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தபோது தூர் வார வேண்டும் என்ற #ஞானம் அரசுக்கு இல்லை .

கடலில் கலக்கும் ஆற்று உபரி நீரை அரசு சேமிக்க எதுவும் செய்வதில்லை. இனி வரும் காலங்களில் காவிரியில் தடுப்பணைகள் அமைப்பது, புதிய கதவணைகள் அமைப்பது,சிறு #அணைகள் கட்ட,கரையை உயர்த்தி தொடர்ந்து பராமரிக்க,#கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்த நடவடிக்கை தேவை...

ஒவ்வொரு #பருவ மழையின் போதும், #காவிரியில் இருந்து, கடலில் வீணாக கலக்கும் நூற்றுக்கணக்கான, டி.எம்.சி., மழை நீரை, முறையாக, சேமிப்பதற்கு, கடந்த ஆண்டு, #காவிரி தொழில் நுட்ப குழுவின் தலைவர், #சுப்பிரமணியன் தலைமையில், தனிக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, காவிரியில், தடுப்பணைகள் அமைப்பது, புதிய கதவணைகள் அமைப்பது என, பல்வேறு விதமான பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியது. மேலும், காவிரி கரைகளில், எவ்வளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன, அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பது குறித்தும், பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. பரிந்துரைகள் வழங்கி, ஆறு மாதத்துக்கு மேல் ஆகிறது. அந்த பரிந்துரைகள் வந்த போதே, திட்டம் தீட்டி இருந்தால், தற்போது தென்மேற்கு பருவமழையின் போது, வீணாகும் #மழைநீர், சேமிக்கப்பட்டிருக்கும். எனவே, இனிமேலாவது, இப்பிரச்னையில் அரசு, "தூங்காமல்' உடனடி நடவடிக்கை எடுத்தால், குடிநீருக்கு மட்டுமின்றி, பாசனத்துக்கும் பிரச்னை ஏற்படாமல் போகும்.

No comments:

Post a Comment

Labels

Popular Posts