Saturday, August 10, 2013

காதல் வந்தால் சொல்லிவிடு !

காதல் என்றாலும்
வாழட்டும்....
காதலித்தேன் நீ
காதலிக்கவில்லை
காதலித்தாய் நீ
காதலிருக்கவில்லை....!
துன்பப்பட்டாய் நீ
துவண்டேன் நான்...!
துவண்டதும் நீ
துடித்துவிட்டாய்
கண்ணே..!
துடித்த இதயத்தை நீ
தூய்மையாக்கினாய்
தூய்மையான நீ
காதலை
ஏற்கவில்லையே...?
காலம் கடந்த ஞானம்
காதலை கற்குழிக்குள்
தள்ளி
விடும் - காதல் வந்தால்
உடனே சொல்லிவிடு...
!
காதலர்
வாழாவிட்டாலும்
காதல் என்றாலும்
வாழட்டும்....!

No comments:

Post a Comment

Labels

Popular Posts