இதை படிங்க முதல்ல...
நேற்று - மதியம் பஸ் பயணத்தின்போது..
சபரி மலையில் இருந்து வேலூர் திரும்பும்
ஒரு அய்யப்ப பக்தர் அருகில்
நின்று கொண்டிருந்த ஒரு முஸ்லிம்
பெரியவருக்கு இருக்க
இடமளித்து எழும்பி நின்றார்...
அந்த பெரியவர் நீங்க இருங்க தம்பி மலையில்
இருந்த இறங்கி களைப்பாக வந்திருப்பீங்க என
கூறி இருக்க மறுத்தார்...
நான் ரெயிலில் வரும்போதே நல்லா ரெஸ்ட்
எடுத்துட்டேன் நீங்க நோன்பு பிடிசிருப்பீங்க
காலைல இருந்தே எதுவும் சாப்பிடாம
களைப்பா இருப்பீங்க...
நீங்க உக்காருங்க
என்று சொல்லி உக்கார வைத்தார்...
மக்கள் தெளிவாகத் தான் இருக்காங்க.
இடையில்
புகுந்து ஆட்டையைக்
கொழப்புறது ஓட்டு வாங்கிகள் தான்.
No comments:
Post a Comment