Friday, August 2, 2013

சரஸ்வதி மூலிகை - வல்லாரை

இதுவரை தெரிந்திராத ‘சரஸ்வதி மூலிகை’
அதாவது வல்லாரையின் மருத்துவக் குணங்கள்

மூலிகைகள் என்ற இயற்கைக்
கொடையை ஏராளமாகப் பெற்றிருக்கிறோம்.

நம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும்
தாவரங்கள், அசாதாரண மருத்துவ குணங்களைக்
கொண்டவை. அந்த வரிசையில் வரும்
வல்லாரை வழங்கும் நன்மைகள் அனேகம்.

அவை பற்றி…

* வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப்
பொடித்து, பாலில் கலந்து தினமும்
இரவு படுக்கைக்குச் செல்லும்முன்
அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள்
அழிந்துபோகும்.

* வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து,
அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு,
மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ,
மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச்
சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும்.
ஆனால் வல்லாரைச் சட்னியில்
புளியை அறவே தவிர்க்க வேண்டும்.
உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

* வல்லாரை இலையுடன் சம
அளவு கீழா நெல்லி இலை சேர்த்து அரைத்து கா
வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர்
எரிச்சல் தீரும்.

* குழந்தைகளுக்குத் தினமும் 10
வல்லாரை இலைகளை பச்சையாக
மென்று சாப்பிடக் கொடுத்தால்
மூளை நரம்புகள் வலுப்பெறும்.
தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள்
குறையும்.

* ஞாபக சக்தியைத் தூண்டும்
வல்லாரையை ‘சரஸ்வதி மூலிகை’ என்றும்
அழைக்கின்றனர்.

* வல்லாரை, ரத்த சோகையைப்
போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின்
எண்ணிக்கையை அதிகரிக்கும்.

* வல்லாரைப் பொடியைக் கொண்டு பல்
துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப்
போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும்.

* இளைப்பு, இருமல்,
தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போ
காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த
மருந்தாகும்.

* வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர்
வடிதல் போன்றவற்றைப் போக்கி கண்
நரம்புகளுக்கு நன்மை அளிக்கும்.

* நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக்
கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்
சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண்,
குடல்புண்ணை ஆற்றுகிறது.

* யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர
்கள் வல்லாரை இலையை அரைத்துக் கட்டினால்
நோயின் தாக்கம் குறையும். அதுபோல
விரை வீக்கம், வாயு வீக்கம், கட்டிகளின்
மீது பூசி வந்தால் குணம் கிட்டும்.

*
வல்லாரை இலையை முறைப்படி எண்ணையாக்க
தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல்
சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும

No comments:

Post a Comment

Labels

Popular Posts