Wednesday, July 31, 2013

2015-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்

2015-ம்
ஆண்டு நடைபெறவுள்ள
உலகக்
கோப்பை கிரிக்கெட்
போட்டிக்கான
அட்டவணையை சர்வதேச
கிரிக்கெட் கவுன்சில்
(ஐசிசி) செவ்வாய்க்கிழமை
அறிவித்துள்ளது.

நடப்புச் சாம்பியனான
இந்தியா தனது முதல்
ஆட்டத்தில்
பாகிஸ்தானை பிப்ரவரி 15-
ல் எதிர்கொள்கிறது.

2015-ம் ஆண்டுக்கான
உலகக்
கோப்பை போட்டிகள்
ஆஸ்திரேலியா மற்றும்
நியூஸிலாந்து நாடுகளி
நடைபெற உள்ளன.
அதனால், போட்டி குறித்த
அட்டவணைகள்
ஆஸ்திரேலியா மற்றும்
நியூஸிலாந்தில்
அறிவிக்கப்பட்டன.

இந்தப் போட்டியில்
மொத்தம் 14 நாடுகளைச்
சேர்ந்த அணிகள்
கலந்து கொள்கின்றன.
இந்த அணிகள்
இரு பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளன. "ஏ'
பிரிவில் 7 அணிகளும், "பி'
பிரிவில் 7 அணிகளும்
இடம் பிடித்துள்ளன.

இந்திய அணி பி பிரிவில்
இடம் பிடித்துள்ளது.
இப்போட்டியில் பங்கேற்க
10 அணிகள் நேரடியாக
தகுதி பெற்றன.
தகுதிச்சுற்றுப்
போட்டிகளின்
அடிப்படையில் 4 அணிகள்
பங்கேற்க உள்ளன.

கிரிக்கெட் ரசிகர்கள்
மத்தியில் திருவிழாவாகக்
கருதப்படும் இப்போட்டி,
பிப்ரவரி 14-ம்
தேதி தொடங்கி மார்ச் 29-ம்
தேதி வரை நடைபெற
உள்ளது.

49 ஆட்டங்கள்: 14 அணிகள்
பங்கேற்கும்
இப்போட்டியில் மொத்தம்
49 ஆட்டங்கள்
விளையாடப்பட உள்ளன.
14 இடங்களில் நடைபெறும்
இந்த ஆட்டங்கள் மொத்தம் 44
நாள்கள்
நடைபெறுகின்றன.

ஆஸ்திரேலியாவில் 26
ஆட்டங்களும்,
நியூஸிலாந்தில் 23
ஆட்டங்களும்
நடைபெறுகின்றன.

இம்முறை உலகக்
கோப்பை போட்டியானது லீக் சுற்று, காலிறுதி,
அரையிறுதி மற்றும்
இறுதிச்சுற்று என
நான்கு கட்டங்களாக
நடைபெற உள்ளன.

லீக்
சுற்றில் அணிகள் பெறும்
புள்ளிகளின்
அடிப்படையில்,இரு பிரிவுகளிலும்
தலா 4 அணிகள் என
மொத்தம் 8 அணிகள்
காலிறுதிக்குத்
தகுதி பெறும்.
காலிறுதியில்
வாகை சூடும்
அணி அரையிறுதிக்கும்,
அரையிறுதியைத்
தொடர்ந்து இறுதி ஆட்டமும்
நடைபெறுகிறது.

இறுதி ஆட்டம்
ஆஸ்திரேலியாவின்
மெல்போர்ன்
மைதானத்தில் மார்ச் 29-ம்
தேதி நடைபெறுகிறது.

உலகக்
கோப்பை போட்டியை நடத்தும்
நாடே முதல் ஆட்டத்தில்
ஆடுவது வழக்கம். அந்த
வகையில், இந்த
முறை பிப்ரவரி 14-ம்
தேதி இரு ஆட்டங்கள்
நடைபெற உள்ளன.
நியூஸிலாந்தில்
நடைபெறும் ஆட்டத்தில்
நியூஸிலாந்து அணியுடன்
இலங்கை அணியும்,
ஆஸ்திரேலியாவில்
நடைபெறும் ஆட்டத்தில்
ஆஸ்திரேலியாவுடன்
இங்கிலாந்தும்
மோதவுள்ளன.

23 ஆண்டுகளுக்குப் பிறகு,
ஆஸ்திரேலியா மற்றும்
நியூஸிலாந்தில் உலகக்
கோப்பை போட்டி நடத்தப்
உள்ளதால்,
அந்நாட்டு கிரிக்கெட்
ரசிகர்கள் மிகுந்த
ஆவலுடன்
இப்போட்டியை எதிர்நோக்கி உள்ளனர்.

பாகிஸ்தானுடன் முதல்
ஆட்டம்: உலகக்
கோப்பை என்றாலே இந்தியா
பாகிஸ்தான் அணிகள்
விளையாடும் ஆட்டம்
மிகுந்த
எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
இதுவரை நடைபெற்ற
உலகக்
கோப்பை போட்டிகளில்
பாகிஸ்தானிடம்
இந்தியா தோற்கவில்லை என்பதும்
காரணம்.
பொதுவாக
இரு அணிகளும், சூப்பர்
சிக்ஸ்
அல்லது அரையிறுதி போன்ற
சுற்றுகளிலேயே சந்திக்கும்
ஆனால்
இம்முறை இரு அணிகளும்
முதல்
சுற்றிலேயே சந்திக்கின்றன.
இது இரு நாட்டு ரசிகர்களுக்கு
மேலும்
உற்சாகத்தை ஏற்படுத்திய
து.

தோனி ஆவல்:

2015 உலகக்
கோப்பை போட்டி குறித்த
கேப்டன் மகேந்திர சிங்
தோனி கூறுகையில்,
"2011 உலகக்
கோப்பையை சொந்த
நாட்டு ரசிகர்கள்
முன்னிலையில்
நேற்றுதான்
வென்றதுபோல் உள்ளது.

4
ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்
இப்போட்டி மிகவும்
சிறப்பு வாய்ந்தது. 2011-ல்
வெற்றியை ருசித்த
நாங்கள், அதனைத் தக்க
வைக்க கடினமாகப்
போராடுவோம்.
போட்டியை எதிர்நோக்கி
உள்ளோம்.
ஐசிசி சாம்பியன்ஷிப்
டிராபியை வென்றது எங்களது உற்சாகத்தை
அதிகப்படுத்தியுள்ளது.
இந்த அனுபவம், எதிர்வரும்
உலகக்
கோப்பை போட்டிக்கு உதவும்
என்று அவர் தெரிவித்தார்.

லீக் சுற்றில் இந்திய
அணி பங்கேற்கும்
ஆட்டங்கள்

நாள் எதிரணி இடம்

பிப் 15 பாகிஸ்தான்
அடிலெய்டு

பிப் 22 தென்
ஆப்பிரிக்கா மெல்போர்ன்

பிப் 28 தகுதிச்சுற்றில்
வெற்றி
பெறும் 4-
வது அணி பெர்த்

மார்ச் 6 மேற்கிந்தியத்தீ
வுகள் பெர்த்

மார்ச் 10
அயர்லாந்து ஹாமில்டன்

மார்ச் 14
ஜிம்பாப்வே ஆக்லாந்து

"ஏ'
பிரிவு ஆஸ்திரேலியா,
இங்கிலாந்து, இலங்கை,
வங்கதேசம்,
நியூஸிலாந்து,
தகுதிச்சுற்றில்
வெற்றி பெறும் 2 மற்றும்
3-வது அணிகள்.

"பி' பிரிவு இந்தியா,
தென் ஆப்பிரிக்கா,
பாகிஸ்தான், மேற்கிந்தியத்
தீவுகள், ஜிம்பாப்வே,
அயர்லாந்து மற்றும்
தகுதிச்சுற்றில்
வெற்றி பெறும் 4-
வது அணி.

No comments:

Post a Comment

Labels

Popular Posts