தமிழ்நாட்டில் பவர் போயாச்சி, பவர்ஸ்டார் ரிட்டன் வந்தாச்சி.
தமிழகத்தில் சில மாதங்களாக இல்லாமல் இருந்த பவர் கட் பிரச்சினை தற்போது மீண்டும் வந்துள்ளது, கடந்த சில நாட்களாக மின் வெட்டு மீண்டும் மக்களை மிரட்டுகிறது. இதை சமன் செய்யும் விதமாக புழல், பாளையங்கோட்டை என்று தமிழ்நாட்டு ஜெயில்களை விசிட் அடித்த பவர் ஸ்டார் சீனிவாசன் டில்லி தொழில் அதிபர் அளித்த மோசடி புகாரால் திஹார் ஜெயில் ரொட்டி தின்று கொண்டு இருந்தவர் நேற்று விடுதலையாகி தமிழகம் திரும்பினார்.
இன்று பேட்டியளித்த பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியபோது
“சிறை எனக்கு ஆசிரமம் போல தெரிந்தது. அங்கு பணிபுரியும் தமிழக போலீசார் என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தற்போது அவர்கள் எல்லாம் என் ரசிகர்கள்.
நான் சிறை சென்ற காலத்தில் தமிழ்சினிமா உலகல் என்னை மிஸ் பண்ணி இருக்கும். என்னுடைய சொந்தத் தயாரிப்பான ஆனந்த தொல்லை படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்றும் கூறினார்.
# 11பேர் கொண்ட குழுவும் உங்களோடு இருந்தார்களா பவர்?
No comments:
Post a Comment