தமிழ் - Tamil:
இந்திய அரசு பெயருக்கு தான் மதசார்பற்ற, #மொழி சார்பற்ற #குடியரசு நாடு என்று மக்களை ஏமாற்றி வருகிறது . உண்மையில் இந்திய அரசானது சமஸ்க்ரித்த மொழிக்கும் சமஸ்க்ரித்த வழி இந்தி மொழிக்குமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. வேத மதமாகிய ஆரிய இந்து மதத்திற்கு மட்டுமே தனது கொள்கைகளில் இடமளிக்கிறது.
அதற்கு நல்லதொரு சான்று இந்தியாவில் உள்ள பாதுகாப்பு கருவிகளுக்கு சமஸ்க்ரித்த பெயர்களை சூட்டுதல் . அதிலும் ஆரிய இந்துப் புராணப் பெயர்களையே தேர்ந்தெடுத்தல் ஆகும். அது செயற்கைக்கோள் , ஏவுகணை, விமானங்கள், ஆயுதங்கள் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் என எதுவாகவும் இருக்கலாம். அவை அனைத்திற்கும் இந்திய அரசு சூட்டும் பெயர்கள் சமஸ்க்ரிதமாகத் தான் இருக்கும் இருக்க வேண்டும் என நினைக்கிறது ஆளும் இந்திய அதிகார வர்க்கம்.
இந்தியாவில் ஆரிய இந்துக்கள் மட்டுமே வரி செலுத்துகிறார்களா ? ஏன் தேசிய இனங்களான #தமிழர்கள் , #கன்னடர்கள் , #தெலுங்கர்கள் , பிற மாநில கிறிஸ்துவர்கள் , முகமதியர்கள் , சீக்கியர்கள் வரி கட்டவில்லையா ? இவர்கள் மொழி சார்ந்த , இவர்கள் வரலாற்று சார்ந்த பெயர்களை ஏன் #இந்திய அரசு சூட்ட முன்வருவதில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
#தமிழர் வரலாற்றில் எத்தனையோ தலைவர்கள், மன்னர்கள் , வீரர்கள் , வள்ளல்கள். இலக்கியவாதிகள், நீதிமான்கள் வாழ்ந்து வந்துள்ளனர் . ஏன் இவர்கள் பெயர்களை விண்வெளி, தொடர்வண்டி , கப்பல்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளுக்கு இந்திய அரசு வைப்பதில்லை?
தமிழில் கடல் கன்னி, கடல் அரண், கடல் அரசி , கடல் கொண்டான் , முகிலவன், மின்னல், நிலவு மொழி, விண்ணவன் , தென்னவன், வெற்றி வேந்தன் , வாகை வேந்தன் போன்ற பெயர்களை ஏன் இந்திய அரசு வைக்கக் கூடாது ?
வைக்கலாம் ஆனால் இந்தியாவை பொறுத்தவரை , இந்தியா என்பது ஆரிய இந்து மதப் பண்பாட்டை மட்டுமே தழுவிய நாடு என்பதை இந்தியா உறுதி செய்துள்ளது . அதனால் தமிழர் பண்பாடு உட்பட பிற பண்பாடுகளை இந்திய அரசும் அதிகார வர்க்கமும் ஏற்க மறுக்கிறது. பிற தேசிய இனங்களையும் இந்தியா தனது பண்பாட்டை ஏற்க வற்புறுத்துகிறது.
என்று இந்தியா எல்லா மொழிகளையும் , இனங்களையும் , மதங்களையும் சமமாக பாவிகிறதோ அன்று தான் இந்தியா என்பது உண்மையான குடியரசாக மலரும் . அதுவரை இந்தியா என்பது பல தேசங்களை அடக்கி ஆளும் சர்வாதிகார நாடே ஆடும் .
No comments:
Post a Comment