Saturday, August 24, 2013

ராஜேந்திர சோழனின் தரைப் படை

தமிழால் இணைவோம்:
கடந்த மாதம் சென்றிருந்த போது கருமேகங்கள் சூழ அழகாக காட்சியளித்தது.

ராஜேந்திர சோழனின் தரைப் படையில் மட்டும் பத்து லட்சம் வீரர்கள் இருந்ததாக நம்பப்படுகின்றது.கிழக்கிலும் மேற்கிலும் இருந்த வலுவான சாளுக்கிய படையை வெற்றி கொண்ட பின் சோழர்களின் படை நேராக கலிங்கம் (ஒரிசா) வழியாக கங்கை நோக்கி செல்கிறது.

ராஜேந்திர சோழன் அவர்களே எதிரிகளின் படையை தடுக்க கோதாவரி கரையில் முன் நின்றுருக்கிறார். அப்படியே முன்னேறிய சோழர்களின் படை வங்காளத்தில் ஆண்டுகொண்டிருந்த பால அரசாங்கத்தை நோக்கி சென்றது அங்கே "மகிபலா" என்கிற அரசனை எதிர் கொண்டு வெற்றி கொண்டது.

ராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேட்டில் கங்கை வரை சென்று போர் புரிந்தது இரண்டு வருடங்களுக்கு குறைந்ததாக இருந்ததாகவும், வடக்கே ஆண்டுகொண்டிருந்த பல அரசாங்கங்கள் சோழர் படைக்கு வீழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த செப்பேட்டில் ரணசுரனின் படைகளை வென்று தர்மபாலா என்ற இடத்தை கைப்பற்றி, அங்கிருந்து கங்கை சென்று தோற்ற அரசர்களை வைத்தே கங்கை நீரை சோழ தேசம் வரை கொண்டு வர செய்திருக்கிறார்கள். அப்படி வெற்றி கொண்டதன் அடையாளமாய் உருவானது தான் இந்த "கங்கை கொண்ட சோழபுரம்". ஒரு வேல இந்த பாவம் எல்லாம் தான் இப்போ சுத்தி சுத்தி அடிக்கிதோ!

-Sasi Dharan

No comments:

Post a Comment

Labels

Popular Posts