மாத ராசிபலன் – 2013, அக்டோபர் 1 முதல் 31 வரை
by admin
மாத ராசிபலன் – 2013, அக்டோபர் 1 முதல் 31 வரை
மேஷம்:
- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
6-ல் சூரியன் உலவுவது சிறப்பாகும். குரு 3-ல் அமர்ந்து 7, 9, 11-ஆம் இடங்களைப் பார்ப்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். வாழ்க்கைத்துணைவரால் அளவோடு நலம் உண்டாகும். தந்தையால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். தொலைதூரப் பயணம் பயன்படும். உங்களைக் காட்டிலும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.
2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். பண நடமாட்டம் சற்று அதிகரிக்கும். கலைத்துறையினருக்குப் பிரச்னைகள் விலகும். முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கை நிகழும். பேச்சில் இனிமை கூடும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பெண்களால் அனுகூலம் உண்டாகும். 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. என்றாலும் ராசிநாதன் என்பதால் பணவரவு சற்று கூடும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
17-ஆம் தேதி முதல் சூரியன் 7-ஆமிடம் மாறி, சனி, ராகு ஆகியோருடன் இணைவது குறை. மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் சங்கடங்களும், மன அமைதிக்குறைவும் ஏற்படும். தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். அரசாங்கத்தாரால் பிரச்னைகள் சூழும். ஸ்பெகுலேஷன் துறைகளால் அதிகம் பயனிராது. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். கெட்டவர்களின் தொடர்பை விட்டு விலகுவது நல்லது. 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறுவது விசேடமாகும். சுக்கிரனும் குருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். செல்வநிலை உயரும். மன மகிழ்ச்சி கூடும்.
பரணி நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் அதிகமாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 11, 14, 18, 22, 23, 29.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.
எண்கள்: 1, 6.
ரிஷபம்:
- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
செவ்வாய், புதன், குரு, சனி, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் பேச்சாற்றலும், செயல்திறமையும் வெளிப்படும். குடும்ப நலம் சிறக்கும். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் கூடிவரும். பண நடமாட்டம் அதிகமாகும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உருவாகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிட்டும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவுவார்கள். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மதபோதகர்கள், மேடைப் பேச்சாளர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.
வியாபாரிகளுக்கு லாபம் கூடும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். பொது நலப்பணியாளர்களுக்குவரவேற்பு கூடும். செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், கச்சாப் பொருட்கள் ஆகியவை லாபம் தரும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களால் ஆதாயம் பெருகும். சுக்கிர பலம் மாதம் முழுவதும் சிறப்பாக இல்லாததால் கலைத்துறையினருக்குச் சோதனைகள் சூழும். மாதர்களுக்கு அனுகூலமிராது. கேளிக்கை, உல்லாசங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது.
5-ஆம் தேதி முதல் செவ்வாய் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. அலைச்சல் அதிகமாகும். செலவுகள் கூடும். சுகம் குறையும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும்.
தந்தையால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். மறைந்த, தொலைந்த பொருள் கிடைக்கும். ஆராய்ச்சியாளர்கள் புகழ் பெறுவார்கள்.
ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலமான மாதமிது.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 9, 11, 14, 18, 22, 23, 29.
திசைகள்: மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்மேற்கு.
எண்கள்: 3, 4, 5, 8, 9.
மிதுனம்:
- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். குரு ஜன்ம ராசியில் உலவினாலும் அவரது பார்வை 5, 7, 9-ஆம் இடங்களுக்கும், சனி, ராகு ஆகியோருக்கும் பதிவதால் நலம் உண்டாகும். சுக்கிரனுடன் புதன், சனி ஆகியோர் கூடியிருப்பது ஒருவகையில் சிறப்பாகும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உங்களைத் தேடிவரும் நேரமிது. மக்களால் நலம் பல பெறுவீர்கள். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். எதிரிகள் அடங்கிப் போவார்கள்.
மந்திர, தந்திர, யந்திர வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். சிலருக்கு மந்திர சித்தியும் கிடைக்கும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்னைகள் தலைதூக்கும். 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ஆமிடம் மாறி வலுப்பெறுவதால் மனத்துணிச்சல் அதிகமாகும். செயலில் வேகம் பிறக்கும். சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.
17-ஆம் தேதி முதல் சூரியன் 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. பெற்றோருக்கும் மக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். செய்து வரும் தொழிலில் முழு அக்கறை தேவை. 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 7-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. வாழ்க்கைத்துணை நலனில் அக்கறை தேவை. ஆடவர்களுக்குப் பெண்டிரால் பிரச்னைகள் ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கேளிக்கை, உல்லாசங்களைக் குறைத்துக் கொள்ளவும். வயிறு, மார்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும்.
திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் கூடும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 9, 11, 14 (இரவு), 18, 22, 23, 29.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
எண்கள்: 6, 7.
கடகம்:
- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும், 4-ல் புதனும் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். அரசியல்வாதிகளுக்கும், அரசுப்பணியாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். மாணவர்களது திறமை வெளிப்படும். விற்பனைப் பிரதிநிதிகள், கமிஷன் ஏஜண்டுகள் ஆகியோர் அதிக லாபம் பெறுவார்கள்.
கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது நிலை உயரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு உண்டாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். சொத்துக்கள் சேரும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும்.
5-ஆம் தேதி முதல் செவ்வாய் 2-ஆமிடம் மாறுவதால் பண வரவு கூடும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. உடல்நலனில் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். வீண்வம்பு வேண்டாம்.
அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. குரு 12-ல் இருப்பதால் சுப காரியச் செலவுகள் கூடும். தர்மப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்வீர்கள். 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. பெண்களாலும், உற்றார், உறவினர்களாலும் சங்கடங்கள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.
பூசம், ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 9, 11, 14 (பகல்), 18, 22, 23, 29.
திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
எண்கள்: 1, 5, 6, 7.
சிம்மம்:
- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
உங்கள் ஜன்ம ராசிக்கு 3-ல் சுக்கிரன், சனி, ராகு ஆகியோரும், 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். முயற்சி வீண்போகாது. திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைத்துவரும். தகவல்தொடர்பு துறைகள் ஆக்கம் தரும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் நலம் பல உண்டாகும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நற்பெயர் கிட்டும். தொழிலாளர்களது கோரிக்கைகளில் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும்.
விவசாயிகளுக்கு மகசூல் அதிகமாகும். லாபம் பெருகும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் அதிக லாபம் தரும். பயணத்தின் மூலம் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மதபோதகர்கள், ஆகியோர் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். பொன் நிறப் பொருட்கள் லாபம் தரும். தெய்வப் பணிகள் நிறைவேறும். குருவருளும் திருவருளும் உண்டாகும். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவதால் புதிய பொருட்சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சுகானுபவம் உண்டாகும்.
5-ஆம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் புதிய சொத்துக்கள் சேரும். மனதில் துணிவு பிறக்கும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 3-ஆமிடம் மாறுவதால் அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புத பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். பேச்சில் நிதானம் தேவை. 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் மேலும் கூடும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும்.
பூர நட்சத்திரக்காரர்களுக்கு சுபிட்சம் கூடும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 9, 11, 14, 22, 23, 29.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, மேற்கு.
எண்கள்: 3, 4, 6, 8.
கன்னி:
- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
உங்கள் ஜன்ம ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும், 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். பணவரவு அதிகமாகும்.
முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். பேச்சாற்றல் வெளிப்படும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருமானம் கிடைத்துவரும். கொடுக்கல்-வாங்கல் சீராகும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தரகர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், கலைஞர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.
பெண்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும்.
இயந்திரப்பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வீண் செலவுகளும் இழப்புகளும் உண்டாகும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.
17-ஆம் தேதி முதல் சூரியன் 2-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. கண், வாய், முகம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவதால் சுகம் கூடும். புதிய பொருட்கள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் காண வழிபிறக்கும்.
ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் அதிகமாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 9, 11, 14, 18, 22, 23, 29.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.
எண்கள்: 5, 6, 9.
துலாம்:
- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் வலுத்திருக்கிறார். செவ்வாய், குரு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் தோற்றப்பொலிவு கூடும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். கலைஞானம் பளிச்சிடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். உடன்பிறந்தவர்களால் நலம் கூடும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும்.
கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் கணவன் மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பேச்சில் இனிமை கூடும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். முக வசீகரம் கூடும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 11-ஆமிடம் மாறுவதும் விசேடமாகும். செல்வ நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காண்பீர்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
17-ஆம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதும் சிறப்பாகாது. உடல்நலனில் கவனம் தேவைப்படும். பிறரால் அவமதிக்கப்பட நேரலாம். என்றாலும் குரு ஜன்ம ராசியைப் பார்ப்பதால் மோசமான நிலை என்று ஏதும் ஏற்பட்டுவிடாது. புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். போட்டிப் பந்தயங்களிலும், விளையாட்டு விநோதங்களில் வெற்றி கிட்டும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும்.
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் கூடும் மாதமிது.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 11, 14, 18, 22, 23 (இரவு), 29.
திசைகள்: வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
எண்கள்: 3, 6, 9.
விருச்சிகம்:
- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
உங்கள் ராசிக்கு 11-ஆமிடத்தில் சூரியன் உலவுவது விசேடமாகும். சுக்கிரனும் கேதுவும் அனுகூலமாக உலவுகிறார்கள்.
இதனால் உங்கள் மதிப்பு உயரும். நிர்வாகத்திறமை வெளிப்படும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்த காரியங்கள் இப்போது நிறைவேறும். அரசியல்வாதிகளுக்குச் செல்வாக்கு உயரும். அரசுப்பணியாளர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.
கலைஞர்கள் புகழோடு பொருளும் பெறுவார்கள். ஆன்மிகவாதிகளின் நோக்கம் நிறைவேறும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்குறையும்.
2-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் மன உற்சாகம் பெருகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு உண்டாகும். 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ஆமிடம் மாறி, வலுப்பெறுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். இயந்திரப்பணியாளர்களுக்கும் இஞ்சினீயர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை உருவாகும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.
17-ஆம் தேதி முதல் சூரியன் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. புதன், சனி, ராகு ஆகியோரும் 12-ல் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. தொழிலில் இட மாற்றம் உண்டாகும். வியாபாரிகள், தொழிலாளர்கள், போக்குவரத்துத் துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் உண்டாகும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் பண வரவு சற்று அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். குடும்ப நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். வாழ்க்கை வசதிகள் பெருகும்.
அனுஷம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகமாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 9, 11, 14, 18, 22, 23 (பகல்), 29.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
எண்கள்: 1, 6, 7.
தனுசு:
- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
உங்கள் ராசிநாதன் குரு 7-ல் உலவுவது விசேடமாகும். சூரியன், புதன், சுக்கிரன், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் விசேடமான நன்மைகளைப் பெறுவீர்கள். நல்லவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புக்கள் விலகும். வழக்கில் வெற்றி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். நிறுவன, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும்.
கணவன் மனைவியிடையே கருத்து ஒற்றுமை உண்டாகும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் பெருகும். கூட்டாகத் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு இல்லறம் நல்லறமாகத் திகழும். பயணத்தால் நலம் பல உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். நீண்ட நாளைய எண்ணங்கள் ஒன்றிரண்டு இப்போது இனிது நிறைவேறும்.
2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறுவது நல்லதே. சுப காரியச் செலவுகள் கூடும். வாழ்க்கை வசதிகள் பெருகும். நல்ல கனவு காண்பீர்கள். 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 9-ஆமிடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டோன் 9-ல் உலவும் நிலை அமைவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 11-ஆமிடம் மாறுவதால் அரசுப் பணிகள் நிறைவேறும். தந்தையால் அனுகூலம் ஏற்படும். 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு மாறுவதால் புதிய பொருள் சேரும். ஆதாயம் கூடும். மன உற்சாகம் பெருகும்.
பூராட நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 11, 14, 18, 22, 23, 29.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, வடகிழக்கு. .
எண்கள்: 1, 3, 4, 5, 6, 8
மகரம்:
- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
புதன், சுக்கிரன், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். தோற்றப்பொலிவு கூடும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மாதர்களது எண்ணம் ஈடேறும். மாணவர்களது நோக்கம் நிறைவேறும். வெளிநாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்பு சிலருக்கு கிட்டும். வெளிநாட்டு வேலைக்குக் காத்திருப்பவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவதால் மக்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். ஆடவர்களுக்குப் பெண்டிரால் அனுகூலம் உண்டாகும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். வாழ்வில் சுபிட்சம் கூடும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும்.
5-ஆம் தேதி முதல் செவ்வாய் 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. எரிபொருள், மின்சாரம், கூரிய ஆயுதம், இயந்திரம் ஆகியவற்றின்பக்கம் நெருங்கும்போது பாதுகாப்பு தேவை. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். 17-ஆம் தேதி முதல் சூரியன் 10-ஆமிடம் மாறுவது நல்லது. அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். தந்தையால் ஓரளவு நலம் ஏற்படும். 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறுவதால் சுபச் செலவுகள் கூடும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் சேரும்.
திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் கூடும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 9, 11, 14, 18, 22, 23.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, மேற்கு, தென்கிழக்கு.
எண்கள்: 4, 5, 6, 8.
கும்பம்:
- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
உங்கள் ராசிக்கு 5-ல் குரு உலவுவது சிறப்பாகும். செவ்வாய், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் புத்திசாலித்தனம் பளிச்சிடும். மன உற்சாகம் பெருகும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்கள் ஆக்கம் தரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். ஆன்மிகவாதிகளுக்கு வரவேற்பு கூடும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்களுக்கும் இஞ்சினீயர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும்.
சாதுக்கள், மகான்கள், சித்தர்கள் ஆகியோரது தரிசனம் கிட்டும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும்.
கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். ஆசிரியர்களது நிலை உயரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 10-ஆமிடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் செய்தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 7-ஆமிடம் மாறுவதால் வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவைப்படும். கூட்டாளிகளால் பிரச்னைகள் சூழும்.
17-ஆம் தேதி முதல் சூரியன் 9-ஆமிடம் மாறுவதால் தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். எதிர்ப்புக்கள் இருக்கும். என்றாலும் 9-ஆமிடத்தையும், 9-ல் உள்ள கிரகங்களையும் குரு பார்ப்பதால் மோசமான நிலை என்று ஏதும் ஏற்படாது. 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவதால் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். சுகம் கூடும். பெற்றோர் நலம் சீராகும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனத்தில் தெளிவு பிறக்கும்.
சதய நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகமாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 6, 7, 9, 11, 14, 18, 22, 23, 29.
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
எண்கள்: 3, 6, 7, 9.
மீனம்:
- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். தோற்றப்பொலிவு கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். நடுநிலையாளர்கள், தரகர்கள், கமிஷன் ஏஜண்டுகள் ஆகியோர் வளர்ச்சி காண்பார்கள்.
4-ல் உள்ள குரு 8, 10, 12-ஆம் இடங்களைப் பார்ப்பதால் பிரச்னைகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். மாமூலான காரியங்கள் சீராக நடந்துவரும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடன்பிறந்த சகோதரியால் நலம் ஏற்படும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ஆமிடம் மாறுவதால் மனத்துணிவு அதிகமாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். எரிபொருட்கள், மின்சாதனங்கள், வெடிப்பொருட்கள், தளவாடங்கள் ஆகியவற்றின்மூலம் ஆதாயம் பெற வாய்ப்பு உண்டாகும்.
17-ஆம் தேதி முதல் சூரியன் 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. மறைமுக நோய்நொடி உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கம் கூடும். தந்தையாலும், அரசாங்கத்தாராலும் பிரச்னைகள் சூழும். மறைமுக எதிரிகள் இருப்பார்கள். என்றாலும் சமாளிப்பீர்கள். புதியவர்களை நம்பி எக்காரியத்திலும் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. தொலைதூரத் தொடர்பின்போது விழிப்புத் தேவை. 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. தொழில் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.
உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகமாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 9, 11, 14, 18, 22, 23, 29.
திசைகள்:தென்கிழக்கு, வடக்கு.
எண்கள்: 5, 6.
Show commentsOpen link
No comments:
Post a Comment