Img டெல்லி மெட்ரோ ரெயிலில் கேட்பாரற்று கிடந்த ரூ. 1 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த பாதுகாப்பு படை வீரர் CISF jawan returns Rs one lakh lost in Delhi Metro
புதுடெல்லி, ஜன. 5-
டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த நபர் தவற விட்ட 1 லட்சம் ரூபாயை கண்டெடுத்த மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸ்காரர் அதனை உரியவரிடம் சேர்ப்பிக்க உதவி செய்துள்ளார்.
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஒன்றான சவ்ரி பஜார் நிலையத்தில் நேற்று மாலை பயணிகளின் உடைமைகளை சோதனையிடும் பணியில் சுதிர் குமார் என்ற மத்திய தொழில் பாத்காப்பு படையை (சி.ஐ.எஸ்.எஃப்.) சேர்ந்த போலீஸ்காரர் ஈடுபட்டிருதார்.
அப்போது சோதனை இயந்திரத்தின் அருகே வெகு நேரமாக கேட்பாரற்று ஒரு கைப்பை அனாதையாக கிடந்தது. இதை கவனித்த சுதிர் குமார் அந்த பையை எடுத்து திறந்து பார்த்தார். அதன் உள்ளே கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுக்கள் இருந்ததை கண்ட அவர் சவ்ரி பஜார் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் பணப்பையை ஒப்படைத்தார்.
சிறிது நேரத்துக்கு பின்னர் பணப்பையை தவற விட்டவர் அங்கு பதற்றத்துடன் வந்து சேர்ந்தார். ரெயில் நிலைய அதிகாரிகளிடம் பணப்பை ஒப்படைக்கப்பட்ட தகவலை சுதிர் குமார் அவரிடம் தெரிவித்தார். ஓடோடி சென்ற அந்த நபர் கேட்பாரற்று கிடந்த பணப்பை தன்னுடையதுதான் என்பதற்கான ஆதாரங்களை அதிகாரிகளிடம் சமர்பித்து பணத்தை பெற்று சென்றார்.
...
No comments:
Post a Comment