Monday, December 30, 2013

hindu organization complaint on seemann for defamation hindu lord கடவுள்களை அவமதித்ததாக சீமான் மீது இந்து அமைப்பினர் புகார்

hindu organization complaint on seemann for defamation hindu lord கடவுள்களை அவமதித்ததாக டி.ஜி.பி. அலுவலகத்தில் டைரக்டர் சீமான் மீது இந்து அமைப்பினர் புகார் hindu organization complaint on seemann for defamation hindu lord

சென்னை, டிச.30–

சினிமா டைரக்டரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் பேசிய பேச்சுக்கள் அடங்கிய தொகுப்பு யூ டியூப்பில் வெளியாகி இருக்கிறது.

அதில் இந்து கடவுள்களான சிவன், விநாயகர் ஆகியோரை பற்றி அவதூறாக சீமான் பேசி இருப்பதாக கூறி இந்து அமைப்பினர் இன்று டி.ஜி.பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:–

சீமான் பேச்சில் இந்துக்கள் கல்லை கடவுளாக வழிபட்டு பின்னர் அந்த கல்தான் நம்மை படைத்ததாக கூறுகின்றனர். இந்து கடவுள் எதைத்தான் படைத்தார்.

அவருக்கு படைக்கப்படுகின்ற கொழுக்கட்டையையாவது படைத்தாரா என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே இந்திய தண்டனை சட்டம் 153ஏ, 295ஏ மற்றும் 298 ஆகிய பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

...

Sunday, December 29, 2013

விலைவாசியை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: நரேந்திர மோடி குற்றச்சாட்டு Modi says federal government has not taken any action to reduce the prices

Img விலைவாசியை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: நரேந்திர மோடி குற்றச்சாட்டு Modi says federal government has not taken any action to reduce the prices

ராஞ்சி, டிச.30-

4 மாநில சட்டசபை தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகளின் கூட்டத்தை சமீபத்தில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூட்டினார். அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், காங்கிரஸ் முதல்-மந்திரிகள் தங்கள் மாநிலங்களில் ஊழலை தடுக்கும் வகையில் லோக் அயுக்தாக்களை அமைக்க உத்தரவிட்டார். ஆதர்ஷ் ஊழல் தொடர்பான நீதி விசாரணை அறிக்கையை மராட்டிய மாநில அரசு நிராகரித்ததை குறை கூறினார்.

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று கலந்துகொண்டு பேசினார். ராகுல் காந்தியின் குரல் அசரீரியாக வந்து கொண்டிருப்பதாக அவர் சாடினார். ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக தாக்கினார்.

அப்போது நரேந்திர மோடி கூறியதாவது:-

பழங்காலத்தில் தங்களைச் சுற்றிலும் நடப்பதை மக்கள் கண்டுகொள்ளாமல், இருந்தபோது அசரீரி குரல் கேட்டது. இப்போதும் அப்படி அசரீரி ஒலிக்கிறது. முதல்-மந்திரிகள் இதைச் செய்யுங்கள். முதல்-மந்திரிகள் அதைச் செய்யுங்கள் என்று அசரீரி வருகிறது. ஆனால் ஊழலில் தொடர்பு உடையவர்கள் இதைச் சொல்கிறார்கள். அசரீரி குரலை ஒலிக்கிறவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் எப்படி வளர்ந்தது என்பதை சொல்லட்டும்.

மத்தியில் பதவியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, நாட்டுக்கு சுமையாகி விட்டது. மக்களுடனான தொடர்பை அது இழந்து விட்டதால், நாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி, அதன் அரசுகள், தலைவர்கள் மக்களின் குரல்களுக்கு செவி சாய்ப்பது கிடையாது. இன்று மக்கள் விரும்புவது வளர்ச்சியைத்தானே தவிர பிரிவினையை அல்ல. அவர்கள் நாடுவது வாய்ப்புகளைத்தான். வகுப்புவாத விஷத்தை அல்ல.

3 வருடங்களுக்கு முன்பு விலைவாசி உயர்வை தடுப்பது பற்றி பிரதமர் ஒரு கூட்டத்தை கூட்டினார். விலைவாசி உயர்வை தடுப்பது தொடர்பான சிபாரிசுகளை செய்யும் ஒரு குழுவுக்கு என்னை தலைவராக நியமித்தார். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி முதல்-மந்திரிகள் 2 பேர் அதில் இடம் பெற்றிருந்தனர். நாங்கள் நடவடிக்கை எடுக்கத்தக்க விதத்தில் 62 அம்சங்களை தெரிவித்திருந்தோம். 20 சிபாரிசுகளை செய்திருந்தோம். நாங்கள் நல்லதொரு பணியாற்றியதாக பிரதமர் பாராட்டு தெரிவித்தார். ஆனால் இரண்டரை ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசு முடங்கிப்போய்விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கும் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், ஒரு இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக மோடிக்கு எதிராக மத்திய அரசு விசாரணை கமிஷன் அமைப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வந்த உடனேயே மோடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே மாநில அரசு ஒரு விசாரணை கமிஷன் அமைத்தால், மத்திய அரசு விசாரணை கமிஷன் அமைப்பதில்லை. இதுதான் பாரம்பரியமாக பின்பற்றப்படுகிற நடைமுறை. அது இப்போது மீறப்பட்டுள்ளது என கூறினார்.
...

Wednesday, December 25, 2013

புத்தாண்டு தின வானவேடிக்கை மூலம் புதிய கின்னஸ் சாதனை படைக்க துடிக்கும் துபாய் Dubai attempts Guinness World Record fireworks display on New Year Eve

Img புத்தாண்டு தின வானவேடிக்கை மூலம் புதிய கின்னஸ் சாதனை படைக்க துடிக்கும் துபாய் Dubai attempts Guinness World Record fireworks display on New Year Eve

துபாய், டிச. 26-

வினோதமான சாதனைகள் முதல் பிரம்மிக்கவைக்கும் சாதனைகள் என ஐக்கிய அரபு குடியரசு நாடு இதுவரை கிட்டத்தட்ட 150 உலக சாதனைகளை படைத்துள்ளது. இந்த நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் துபாய் பிரதேசம் கின்னஸ் சாதனைகளை குவிக்க துடிக்கும் பகுதியாகும்.

எண்ணெய் வளம் கொழிக்கும் இந்த துபாய் நகரம் வரும் புத்தாண்டு தினத்தன்று மிகப்பெரிய அளவிலான வான வேடிக்கை ஒன்றை நடத்தி பழைய வான வேடிக்கை சாதனையை முறியடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக
பாம் ஜுமெரியா பகுதிக்கும் உலகத்தீவுப்பகுதிக்கும் இடைப்பட்ட 100 கிலோ மீட்டர் பரப்புடைய கடல் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்கவர் வானவேடிக்கைக்காக 200 வானவெடிக்கை வீரர்கள் 100 கம்யூட்டர்கள் துணையுடன் 400 இடங்களில் 4 லட்சம் வானவேடிக்கைகளை நிகழ்த்தவுள்ளனர். இதில், பறக்கும் பறாந்து, 10 கிலோ மீட்டர் அகலமுள்ள சூரிய உதயம், தேசியக்கொடி, வானில் 6 நிமிட வானவேடிக்கை நடன நிகழ்ச்சி என கண்கொள்ளாக் காட்சிகளை கண்டு ரசிக்கமுடியும்.

வேடிக்கை பார்க்க வரும் மக்களுக்கும், சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கும் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும் என்று துபாய் நிர்வாகம் கூறியுள்ளது. 
...

Saturday, December 14, 2013

There is no risk from cell phone towers radiation செல்போன் கோபுரங்களால் கதிர்வீச்சு அபாயம் இல்லை: இந்திய மருத்துவக்கழக டாக்டர்கள் தகவல்

There is no risk from cell phone towers radiation
There is no risk from cell phone towers radiation செல்போன் கோபுரங்களால் கதிர்வீச்சு அபாயம் இல்லை: இந்திய மருத்துவக்கழக டாக்டர்கள் தகவல்
நாட்டின் தகவல் தொடர்பு துறையில் முக்கிய பங்குவகிப்பது செல்போன்கள். அத்தகைய செல்போன்கள் இயங்குவதற்கு அடிப்படையாக செயல்படுவது செல்போன் கோபுரங்கள். இந்த நிலையில் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால் புற்றுநோய், தோல்நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகின்றன.

இந்த கருத்தை இந்திய மருத்துவ கழக டாக்டர்கள் மறுத்தனர். இது தொடர்பாக, மருத்துவ கழக மும்பை மேற்கு தலைவர் டாக்டர் எஸ்.கே. ஜோஷி, செயலாளர் டாக்டர் பார்திவ் சங்வி ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களின் தாக்கம் ஏற்படுவதாக பொதுமக்கள் கருதுகின்றனர். ஆனால் அதற்கு மருத்துவ ரீதியான ஆதாரங்கள் இல்லை. ரேடியோ மற்றும் தொலைக்காட்சி போன்றவை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால் பாதிப்பு ஏற்படும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை.

இவற்றுடன் தொடர்புபடுத்தும்போது, செல்போன் கோபுரங்கள் உமிழும் கதிர்வீச்சுகளால் எந்த வித ஆபத்தும் இல்லை. செல்போன் கோபுரங்களின் இயக்கத்தை உலக சுகாதார அமைப்பும் கண்காணித்து வருகிறது. அவர்கள் சேகரித்த விவரங்களை சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் உள்ளிட்ட அமைப்புகளிடம் உலக சுகாதார அமைப்பு ஆலோசித்து வருகிறது. மேலும் குறிப்பிட்ட இடைவெளியில் தான் சேகரித்த விவரங்களை அறிக்கையாகவும் வெளியிடுகிறது.

செல்போன் கோபுரங்களை விட ரேடியோ, தொலைக்காட்சி ஆகியவற்றில் இருந்து நாம் 5 மடங்குக்கும் மேற்பட்ட கதிர்வீச்சுகளை சுவாசிக்கிறோம். சூரியனில் இருந்து வெளியாகும் கதிர்களை ஓசோன் மண்டலம் தடுக்கிறது. இந்தநிலையில் ஓசோன் மண்டலங்களால் தடுக்கப்படாத கதிர்வீச்சுகள் பூமியை நோக்கி வருகின்றன. அவை பொதுமக்கள் மீது படிவதால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நடுத்தர குடும்பங்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோவேவ் ஓவன்கள், மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் எக்ஸ்-ரே கருவிகள், எம்.ஆர்.டி.ஐ. ஸ்கேன் கருவிகள் போன்றவையும் கதிர்வீச்சுகளை அதிக அளவில் உமிழ்கின்றன. மைக்ரோவேவ் ஓவன்களை பயன்படுத்தும் பெண்கள், செல்போன் கோபுர கதிர்வீச்சுகளை கண்டு அச்சம்கொள்ள தேவையில்லை. மேலும் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளை காட்டிலும் சூரியனில் இருந்து உமிழப்படும் கதிர்வீச்சுகள் ஆயிரம் மடங்கு உறுதியானவை.

எனவே உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளை, அரசாங்கம் பொதுமக்கள் மத்தியில் பரப்பி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவற்றை அந்ததந்த பிராந்திய மொழிகளில் பரப்புவது நல்லது. இதன் மூலம் செல்போன் கோபுரங்கள் குறித்து பொதுமக்களிடம் நிலவும் தவறான கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Thursday, December 12, 2013

RollerMouse - new model mouse for computers

RollerMouse
News from Tamil computer
Multi purpose mouse
Latest mouse news
Computer news

கணனிப் பாவனையின் போது மவுஸின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

தற்போது ஒரே நேரத்தில் பல செய்கைகளை செய்யக்கூடிய மவுஸ் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. RollerMouse எனப்படும்

இப்புதிய மவுஸ் ஆனது பல்வேறுபட்ட டிசைனிங் வேலைகளை இலகுவாகவும் விரைவாகவும் செய்வதற்கு உதவக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் இதன் விலையானது 240 dollars என்பது குறிப்பிடத்தக்கது

                 
RollerMouse

Thursday, November 28, 2013

Malala declared Britain most influential Asian

பிரிட்டனின் செல்வாக்கு மிக்க ஆசியர் மலாலா: லண்டன் பத்திரிகை தகவல்      Malala declared Britain most influential Asian

Is Power Star there in Ai or not?

Is Power Star there in Ai or not? Is Power Star there in Ai or not? November 27th, 2013 | Power Star Dr Srinivasan has been to Andaman Islands for a police enquiry. We do not
understand how much stress he would have undergone in this trip. After completing the police enquiry, Power Star who crossed many hurdles has once again been to Andaman Islands for a film shooting. The title of this film is Naalu Perum Romba Nallavanga. The film is being directed by Joe who is the son of Pavalar Varadarajan. Pavalar Varadarajan is the eldest brother of Ilayaraja. As per the story Power Star dons the role of a bad guy who does not return the money which he has taken from a family and because of this he is put behind the bars in Andaman prison. Power Star acted some sequences at the Cellular Prison there. There was a news that Power Star has been removed from the film Ai directed by Shankar. But sources say that Shankar is not a person who will resort to such things keeping in mind of a person’s personal things. We have to wait and see that whether Power Star is there in Ai or not only after the release of this film.

Arya M Rajesh Joining Hands Again

Arya and M Rajesh are in need for a hit after their respective projects Irandam Ulagam and All in All Azhagu Raja failed to impress audience. *
* They are now set to join hands to erase the sad memories of their last movies. *
* The duo, who had tasted success with their earlier movie Boss Engiran Bhaskaran, will be coming together for a comedy movie again. *
* Interestingly, the movie is produced by Arya himself on his home banner The Show People. *
* An official press release read, Arya, who has been in the purple patch of his career both in terms of critical acclaim and Box Office collections, is all set to rejoin director Rajesh under his home production The Show People . *
* The movie will take off in June 2014 and M Rajesh s favourite actor Santhanam will be part of the movie. *
* M Rajesh is yet to finalise the heroine for the untitled flick. *
* It is reported that he is considering a top actress for the female lead role. *
* But he has not revealed yet. *
* M Rajesh is writing the script and it takes some of time to finalise his cast and crew, say reports. *

Friday, November 1, 2013

தெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடிப்பார் கவாஸ்கர் Virat Kohli can break Sachin ODI century record Gavaskar

தெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடிப்பார் கவாஸ்கர் Virat Kohli can break Sachin ODI century record Gavaskar

புதுடெல்லி, நவ. 1-

இந்திய கிரிக்கெட் அணியில் ரன் குவிக்கும் எந்திரமாக ஜொலித்து வரும் துணை கேப்டன் விராட் கோலி, நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 6-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 66 பந்துகளில் 115 ரன்கள் விளாசி, பிரமாதப்படுத்தினார்.

ஒரு நாள் போட்டியில் அவரது 17-வது சதம் இதுவாகும். இதன் மூலம் அதிவேகமாக 17 சதங்களை (112 இன்னிங்ஸ்) எடுத்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (170-வது இன்னிங்சில் 17-வது சதம்) இந்த பெருமையை தக்க வைத்திருந்தார். மேலும் இலக்கை துரத்திப்பிடிப்பதற்கான (சேசிங்) ஆட்டத்தில் (2-வது பேட்டிங்) கோலியின் 11-வது சதமாக அமைந்தது. இவை அனைத்தும் வெற்றியிலேயே முடிந்திருக்கிறது. இந்த வகையில் சச்சின் தெண்டுல்கர் (14 சதம்) மட்டுமே அவரை விட முன்னிலையில் இருக்கிறார்.

இந்த நிலையில் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை 24 வயதான விராட் கோலியால் முறியடிக்க முடியும் என்று இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆரூடம் கூறியுள்ளார். இதுவரை 118 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி அதில் 112 இன்னிங்சில் களம் இறங்கி 17 சதங்களுடன் 4919 ரன்கள் எடுத்துள்ளார். இதே எண்ணிக்கையிலான ஆட்டத்தில் தெண்டுல்கர் 8 சதத்துடன் 4001 ரன்களே எடுத்திருந்தார்.

இது பற்றி கவாஸ்கர் கூறுகையில், 'சாதனைகள் என்பதே முறியடிக்கப்படக்கூடியது தான். ஆனால் தெண்டுல்கரின் சில சாதனைகளை அதாவது 200 டெஸ்டில் பங்கேற்றவர், 51 டெஸ்ட் சதம் ஆகியவற்றை யாராலும் முறியடிக்க முடியாது என்பதை நாம் அறிவோம். ஆனால் விராட் கோலி விளையாடி வரும் விதத்தை பார்க்கும் போது, ஒரு நாள் போட்டியில் தெண்டுல்கரின் அதிக சதங்கள் (49 சதம்) சாதனையை முறியடிக்க 'வாய்ப்புள்ளது. அதற்கு இன்னும் 32 சதங்கள் தான் கோலிக்கு தேவைப்படுகிறது. நிறைய ஒரு நாள் போட்டிகளில் இந்தியா விளையாடும் போது, கோலியால் இந்த சாதனையை செய்ய முடியும். இந்த கிரிக்கெட் சீசனில் கோலி 20 அல்லது 22 சதங்களை எட்டி விடுவார்' என்றார்.

...

shared via

Wednesday, October 30, 2013

How to Satisfy Your wife? மனைவியை மயக்குவது எப்படி?

மனைவியை மயக்குவது எப்படி?
How to Satisfy Your wife?

கவலையே வேண்டாம்! சின்னச் சின்ன டகல்பாச்சி வேலைகளை செய்தாலே போதும்!! பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ஆயிடலாம்!!
ஏன்னா மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும்!!
இது ஆண்களுக்கு மட்டும்.

மகளிர் வண்டியில் நாங்க மறந்தும் ஏறினா பிண்ணிட்ரீங்க இல்ல. அதுபோல இது அப்பாவி அப்பாக்களுக்கு மட்டும்!


10 ways to control anger!- கோபத்தை அடக்க 10 வழி...!!

10 ways to control anger!- கோபத்தை அடக்க 10 வழி...!!

கோபம் என்னும் வார்த்தையின் மீதே சில வேளைகளில் நமக்குக் கோபம் வருவதுண்டு. அந்த அளவுக்கு கோபத்தை எப்படியெல்லாமோ, எங்கெங்கெல்லாமோ காட்டி வாழ்க்கையின் அர்த்தத்தையும், இனிமையையும் தொலைத்து விடுகிறோம் பல வேளைகளில்.

கோபம் உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்குகிறது. கோபத்தின் வருகை அதிகரிக்க அதிகரிக்க உறவு வேர்கள் அறுபடத் துவங்குகின்றன. பின் அர்த்தமற்ற ஒரு வாழ்க்கையை சிலுவையைப் போல தோளில் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம்.கோபம் நமது உறவுகளுடன் சேர்த்து சமூகத்தில் நமக்கு இருக்கும் தொடர்புகளையும், நற்பெயரையும் கூட சிதைத்து எறிகிறது. இன்றைய நாகரீக வாழ்வில் அதிகரித்து வரும் மண முறிவுகளுக்கு கோபத்தின் பங்கு பெரும்பாலானது.

கோபம் நமது உயர்வுகளையும், உறவுகளையும் பாதிப்பதுடன்,உடலளவிலும் மன அளவிலும் நம்மை பல சிக்கல்களுக்கு ஆட்படுத்தி விடுகிறது. பல நோய்கள் கோபத்தின் குழந்தைகளாய் இன்று பலருடன் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

கோபத்தின் விளைவுகளை இரண்டு விதமாக ஆராய்ச்சியாளர்கள் பிரிக்கிறார்கள். ஒன்று நாம் பிறர் மீது கோபப்படுவதும் அதன் மூலம் ஏற்படும் சிக்கல்களும். இன்னொன்று பிறர் மீது கோபப்பட முடியாத சூழலில் நமக்குள்ளேயே வெடித்துச் சிதறும் கோபம். மேலதிகாரியின் மீதான கோபம் வெளிக்காட்ட முடியாமல் உள்ளுக்குள்ளேயே வெடிக்கும் வகையைச் சார்ந்தது.

எப்படியெனினும், கோபம் வாழ்வின் முன்னேற்றத்துக்கும்,இனிமைக்கும், அமைதிக்கும், அர்த்தத்துக்கும் தடையாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் இருக்கிறது மனிதனுடைய வாழ்வின் அர்த்தமும் அவனுடைய பக்குவத்தின் வெளிப்பாடும். பலர் கோபத்தைக் கட்டுப்படுத்தும் விதம் பற்றி பல விதமாகப் பேசியிருக்கிறார்கள்.

அவற்றில் என்னைக் கவர்ந்த பத்து தகவல்களை இங்கே தருகிறேன்.

1. கோபம் வரும்போது நன்றாக மூச்சை இழுத்து விடவேண்டும். நுரையீரலின் தரை தொடும் பிராணவாயு உடலுக்கு சற்று இறுக்கம் தளர்க்கும். பத்து எண்கள் வரை மிகவும் மெதுவாக எண்ணிக் கொண்டே ஆழமாக மூச்சை இழுத்து விடுவது மிகவும் பயனளிக்கும்.

2. நம் இடத்தில் அடுத்த நபர் இருந்தாலோ, அல்லது அந்த நபரின் இடத்தில் நாம் இருந்தாலோ இதே நிலமை வந்திருக்குமா ?வருதல் நியாயம் தானா என கண்களை மூடி சிறிது நேரம் யோசிக்கலாம்.

3. இந்த கோபத்தைத் தூண்டிய செயல் பத்து ஆண்டுகள் கழிந்த பின்னும் கவனத்தில் கொள்ளத் தக்கதா என சிந்தியுங்கள். நாம் வேகமாய் வாகனம் ஓட்டும்போது ஒருவர் குறுக்கே ஓடுவது நமது கோபத்தைக் கிளறியிருந்தால் அது கோபத்துக்குத் தகுதியானதில்லை என்பதை விளங்கிக் கொள்ள இது பயன்படும்.

4. இந்த கோபத்துக்கான காரணி நமக்கு ஏற்படுத்தும் பாதகங்களைச் சிந்தியுங்கள். வரிசையில் ஒருவர் இடையே புகுந்து விட்டால் ஏற்படும் ஐந்து நிமிட இழப்பு வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பையும் பெரும்பாலும் ஏற்படுத்துவதில்லை என்பதை உணர இது வழி செய்யும்.

5. இதே போன்ற ஒரு பிழையை நீங்கள் செய்திருக்கவும் வாய்ப்பு உண்டு அப்படியெனில் அந்த நிகழ்வுக்காக நீங்கள் உங்கள் மீதே கோபப்பட்டீர்களா என சிந்தியுங்கள்.

6. இந்த செயல் உங்களுக்கு எதிராக வேண்டுமென்றே செய்யப்பட்டதா என யோசியுங்கள். பெரும்பாலும் இல்லை என்றே பதில் வரும். இல்லை என பதில் வந்தால் அதை விட்டு விடுங்கள். அதுகுறித்து கோபமடைந்து உங்கள் பொன்னான நேரத்தையும், உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

7. நல்ல ஒரு உன்னதமான சூழலை கண்களை மூடி கற்பனை செய்யுங்கள். உங்கள் அருமை மகள் உங்களை ஓடி வந்து கட்டியணைக்கலாம், உங்களுக்கு உயரிய விருது ஒன்று வழங்கப்படலாம், காதலியுடன் காலார நடக்கலாம் இப்படி ஏதாவது. அல்லது கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. இது சூழலின் இறுக்கத்தை பெருமளவு தளர்த்தும்.

8. அந்த இடத்தை விட்டு நாகரீகமாக கடந்து சென்று விடுங்கள். சூழல் மாறும் போது சிந்தனைகள் மாறும். நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு வினாடியும் நமது கோபத்தை மட்டுப்படுத்தும். நாம் கோபமாய் செய்யும் செயல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க நமக்கு இந்த இடைவெளி கற்றுத் தரும்.

9. பேசுங்கள். உறவுகளுக்கு இடையேயான தவறான புரிதல்களை வெளிப்படையான உரையாடல் சரிசெய்யும்.

10. மன்னியுங்கள்! இந்த பண்பு இருந்தால் கோபமற்ற சூழலை உங்களால் எளிதில் உருவாக்க முடியும். புன்னகையுடன் கூடிய மன்னிப்பை வழங்கவும், மன்னிப்பு கேட்கும் துணிச்சலை வளர்த்துக் கொள்ளவும் பழகுங்கள்.

இந்த பத்து தகவல்களும் கோபத்தை அடக்க, அல்லது கோபத்தை மிதப்படுத்த உதவும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்க்கை நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் விலையுயர்ந்த மாணிக்கக் கல் போன்றது. அதை கோபமென்னும் சேற்றில் மூழ்கடித்துச் சிதைத்து விடாமல், மனித நேயம் எனும் உயரிய பண்பை மணிமுடியாகச் சூடி அழகுபார்ப்போம்.

வானம் பக்கம் வரும், வாழ்க்கை அர்த்தப்படும்.

shared via

Friday, October 25, 2013

சித்தர்கள் போற்றும் இயற்கை வயாக்ரா வெந்தையம்! Natural viagara

சித்தர்கள் போற்றும் இயற்கை வயாக்ரா வெந்தையம்!

இன்றைக்கு நாம் சமையலில் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாமே மருத்துவகுணம் கொண்டவைதான். உடல் சக்தியோடு உணர்வுகளோடும் தொடர்புடைய பொருட்களைத்தான் தினசரி நாம் உண்கின்றோம்.

அந்தவகையில் அன்றாடம் உபயோகிக்கும் வெந்தையம் இரும்பு சக்தி அதிகரிப்பதோடு மனிதர்களின் பாலுணர்வை தூண்டும் பொருளாக உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

"போகக்கு மனந்தளிக்கும் நித்த முறை விந்துவையுண்டாக்கும் மனமே யறி" என தேரயர் சித்தர் அன்றே வெந்தையத்தைப் பற்றி கூறியுள்ளார். தற்போதைய ஆய்வுகளும் இதனை நிரூபித்துள்ளன.

வெந்தையம் என்பதை வெந்த அயம் என்று பிரிக்கின்றனர் சித்தர்கள். அயம் என்பது அயச்சத்தான இரும்புச்சத்து ஆகும். உணவை சொரிக்கச் செய்து சக்தியைப் பெற்று உடலில் சீரான இயக்கத்துக்கு உதவுவது இரும்புச் சத்தாகும். தினசரி வெந்தையம் சாப்பிட மனித உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த மருந்து வெந்தையம். வெந்தையத்தை இரவு முழுவதும் ஊறவைத்து அந்த தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் உடலில் இன்சுலின் சுரப்பு சரியான அளவில் நடைபெறும்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் தங்களின் ஆய்விற்காக 25 வயது முதல் 52 வயதுடைய 60 ஆரோக்கியமான மனிதர்களை தேர்ந்தெடுந்து தினசரி இரண்டு வேளை 6 வாரங்களுக்கு வெந்தயம் சாப்பிடக் கொடுத்தனர்.

வெந்தையம் சாப்பிடும் முன்பு இருந்த அவர்களிடம் குறைவாக இருந்த பாலுணர்ச்சி வெந்தையம் சாப்பிட்ட பின்னர் மூன்று முதல் 6 வாரங்களில் அதிகமாக இருந்தது தெரியவந்தது. வெந்தயம் சாப்பிட்டவர்களுக்கு சராசரியாக 16 சதவிகிதம் முதல் 28 சதவிகிதம் வரை பாலுணர்ச்சி அதிகரித்திருந்தது.

மேலும் வெந்தயமானது ஆண்களின் டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹார்மோன்களின் உற்பத்தியும் அதிகரித்திருந்ததாம். எனவே பாலுணர்வு தூண்டப்படுவதில் பிரச்சினை உள்ளவர்கள் கண்ட மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதை விட வெந்தயம் சாப்பிடலாம் என்று ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தினமும் உடல் உறவு கொண்டாலும் அதனால் உண்டான விந்திழப்பை அன்றே சரி செய்து மீண்டும் குறைந்ததை ஈடுசெய்து விடும் வல்லமை வெந்தயத்துக்கு உண்டு. இதை இயற்கை வயாக்ரா என்று மேல் நாட்டு ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

"போகக்கு மனந்தளிக்கும் நித்த முறை விந்துவையுண்டாக்கும் மனமே யறி" என தேரயர் சித்தர் அன்றே வெந்தையம் பற்றி கூறியுள்ளார். வெந்தயத்தில் "புரோட்டோ டயசின்" என்ற வேதியல் மூலக்கூறு இருக்கின்றது. இது இயற்கை வயாக்ரா என்று அழைக்கப்படுகின்றது.

shared via

Thursday, October 24, 2013

Children Book 3 Steps Up Book Launch Pictures

Children Book 3 Steps Up Book Launch Pictures

Click Here to Download all Images

Children Book 3 Steps Up Book Launch Photos ,Children Book 3 Steps Up Book Launch Stills ,Hindi Events Children Book 3 Steps Up Book Launch Images,Bollywood Children Book 3 Steps Up Book Launch Pictures, Children Book 3 Steps Up Book Launch . Children Book 3 Steps Up Book Launch Event Was Held In Mumbai, Children Book 3 Steps Up Book Launch Launch Photos ,Children Book 3 Steps Up Book Launch Release Stills ,hindi Movie Children Book 3 Steps Up Book Launch Launch Images,Children Book 3 Steps Up Book Launch Pictures

shared via

Monday, October 21, 2013

manja kaattu maina lyrics-manathai thirudi vittaai tamil song lyrics - மஞ்ச காட்டு மைனா

manja kaattu maina lyrics-manathai thirudi vittaai tamil song lyrics / மஞ்ச காட்டு மைனா

Movie Name:Manadhai thirudi vittaai
Song Name:Manja kaattu maina
Singers:Karthik,Sadhana Sargam
Music Director:Yuvan Shankar Raja
Cast:Prabhu deva,Kousalya,Gayathri
Year of release:2001

Lyrics:-

Manja kaattu maina ennak konji konji pona
Manja kaattukulle ava kaadhal sollip pona
Kaadhal kalavaram pookkum
Adhai iravinil melum thaakkum
Pookkal podhuk kuzhu koottum
Nee thalaimai thaanga ketkum

Manja kaattu maina unnak konji konji pona
Manja kaattukulle iva kaadhal sollip pona
Kanniye kaadhail muthangal mudhaleedu
Iravellaam laabame izhappugal kidaiyaathu
Maayane maayane idhu manmatha kanakkeedu
En swaasam ennidam illai
Idhu kaadhal dhesathin ellai

Manja kaattu maina ....

Aadai irunthathu paarvai n uzhainthathu kangalin vetriyadi
Iravinil adikkadi unnaal nerukkadi
Irulukku vetriyada
Kattukkadangavillai nilaimai thaan
Kattil muzhukka ini vanmurai thaan
Oh vittuk koduthu vidu oru murai thaan
Kalyaanam enbathu vendum

Manja kaattu oh ye ye ye
Manja kaattu oh ye ye
Manja kaattu maina ennak konji konji pona

Idhayam thudikkuthu padaiyum edukkuthu
Sadangai thuvangidava
Selaiyum paranthathu padhaviyai izhanthathu
Idaiyil therthal thaan
Kazhuthu varaikkum vantha kangalukku
Vegath thadaiyum ondru ingirukku
Thaduthu niruthu enna viruviruppu
Pen naanam kolluthu paaru

Manja kaattu oh ye ye
Manja kaattu maina ennak konji konji pona
Manja kaattukulle ava kaadhal sollip pona
Kaadhal kalavaram pookkum
Adhai iravinil melum thaakkum
Pookkal podhuk kuzhu koottum
Nee thalaimai thaanga ketkum

Manja kaattu ....

மஞ்ச காட்டு மைனா
என்னக் கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே
அவ காதல் சொல்லிப் போனா
காதல் கலவரம் பூக்கும்
அதை இரவினில் மேலும் தாக்கும்
பூக்கள் பொதுக்குழு கூட்டும்
நீ தலைமை தாங்க கேட்கும்

மஞ்ச காட்டு மைனா
உன்னக் கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே
இவ காதல் சொல்லிப் போனா
கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு
இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது
மாயனே மாயனே இது மன்மதக் கணக்கீடு
என் சுவாசம் என்னிடம் இல்லை
இது காதல் தேசத்தின் எல்லை

மஞ்ச காட்டு மைனா ....

ஆடை இருந்தது பார்வை நுழைந்தது
கண்களின் வெற்றியடி
இரவினில் அடிக்கடி உன்னால் நெருக்கடி
இருளுக்கு வெற்றியடா
கட்டுக்கடங்கவில்லை நிலைமை தான்
கட்டில் முழுக்க இனி வன்முறை தான்
ஓ விட்டுகொடுத்து விடு ஒரு முறை தான்
கல்யாணம் என்பது வேண்டும்

மஞ்ச காட்டு  ஓ ஏ ஏ ஏ
மஞ்ச காட்டு  ஓ ஏ ஏ
மஞ்ச காட்டு மைனா
என்னக் கொஞ்சி கொஞ்சிப் போனா

இதயம் துடிக்குது படையும் எடுக்குது
சடங்கை துவங்கிடவா
சேலையும் பறந்தது பதவியை இழந்தது
இடையில் தேர்தல் தான்
கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு
வேகத் தடையும் ஒன்று இங்கிருக்கு
தடுத்து நிறுத்து என்ன விறுவிறுப்பு
பெண் நாணம் கொள்ளுது பாரு

மஞ்ச காட்டு  ஓ ஏ ஏ
மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே
அவ காதல் சொல்லி போனா
காதல் கலவரம் பூக்கும்
அதை இரவினில் மேலும் தாக்கும்
பூக்கள் பொதுக்குழு கூட்டும்
நீ தலைமை தாங்க கேட்கும்

மஞ்ச காட்டு மைனா .....

 http://www.youtube.com/watch?v=ba-sEgJ0j5Y

shared via

Sunday, October 20, 2013

all day jolly day lyrics-manathai thirudi vittaai tamil song lyrics / ஆல் டே ஜாலி டே

all day jolly day lyrics-manathai thirudi vittaai tamil song lyrics / ஆல் டே ஜாலி டே

Movie Name:Manadhai thirudi vittai
Song Name:All day jolly day
Singer:Shankar Mahadevan
Music Director:Yuvan Shankar Raja
Cast:Prabhu deva,Kousalya,Gayathri
Lyricist:Pa.Vijay,Kalai kumar

Year of release:2001

Lyrics:-

All day jolly day kavalaikkellaam holiday
College vaazhkaiyil endrum holiday
Isai ennum everestil yerum
Koottani seekiran kidaikkum symphony
Idhu oru azhagiya ilamai colony ye
Pudhumai so many ye

Life is a life is a game show
Music enbathu thrill show(2)

Chinna heartil latcham narambu
Adhai mella sundi paarkkum
Adhan paer enna ? isai
Ullangaiyil aayul regai
Adhai innum neelam akkum
Power enna ?adhu isai
Oru chemical maatrathai
Tharum medicine thaan isai
Oru physical yetrathai
Tharum medicine thaan isai
Uyirodu vanthu vazhiyuthu isai
Isai thaan intha ulagathin thisai
Intha music seiyum magic-ai paar

All day ...

Flower show-ve intha vaazhkai
Adhil varum narumaname
Ilamaiyin oru gunam
Mottu pottu kattip poda
Idhayathin fracture illai
Anubavi dhinam dhinam
Antha love birds paattukku
Nam mkey board isaikkalaam
Antha kuyilgal kuralaith thaan
Vaa digitalil padhiyalaam
Ini yethu inge ilamaikku narai
Kidaiyaathu oru vidhi varai murai
Noottraandu ini nam thisai vasame
Ye ye ye ye

All day ....

ஆல் டே ஜாலி டே
கவலைக்கெல்லாம் ஹாலிடே
காலேஜ் வாழ்க்கையில் என்றும் ஹாலிடே

இசையென்னும் எவெரெஸ்டில் ஏறும்
கூட்டனி சீக்கிரம் கிடைக்கும் சிம்பனி
இது ஒரு அழகிய இளமை காலனியே
புதுமை so many-யே

Life is a life is a game show
Music என்பது thrill show
Life is a life is a game show
Music என்பது thrill show

சின்ன heart-டில் லட்சம் நரம்பு
அதை மெல்ல சுண்டி பார்க்கும்
அதன் பேரென்ன? இசை
உள்ளங்கையில் ஆயுள் ரேகை
அதை இன்னும் நீளம் ஆக்கும்
பவர் என்ன? அது இசை
ஒரு கெமிக்கல் மாற்றத்தை
தரும் medicine தான் இசை
ஒரு physical ஏற்றதைத்
தரும் இசை தான் மெல்லிசை
உயிரோடு வந்து வலியிது இசை
இசைதான் இந்த உலகத்தின் திசை
இந்த மியூசிக் செய்யும் மேஜிகை பார்

Flower ஷோவே இந்த வாழ்க்கை
அதில் வரும் நருமனமே
இளமையின் ஓரு குணம்
மொட்டு போட்டு கட்டி போட
இதயத்தின் fracture இல்லை
அனுபவி தினம் தினம்
அந்த love birds பாட்டுக்கு
நாம் key board இசைக்கலாம்
அந்த குயில்கள் குரலைத்தான்
வா digital-லில் பதியலாம்
இனி ஏது இங்க இளமைக்கு நரை
கிடையாது ஒரு விதி வரை முறை
நூற்றாண்டு இனி நம் திசை வசமே
யே யே யே யே

ஆல் டே ...

 

http://www.youtube.com/watch?v=Gw63atzHGyw

shared via

Friday, October 18, 2013

மாட்டுப்பெண் tamil facebook kavithai

மாட்டுப்பெண்
Tamil kavithai

காலை எழுந்ததில் இருந்து 
துடைப்பது துவைப்பதில் ஆரம்பித்து  
பல வேலை செய்கிறேன்... 

வயிற்றில் குழந்தையுடன்
வந்திருக்கும் நாத்தனாருக்கு 
வாய்க்கு ருசியாக...

மாமன் மாமிக்கோ 
உப்பு புளிப்பு இல்லாமல்... 

கொழுந்தனுக்கோ 
வறுவலும் பொரியலும்...

பிள்ளைகளுக்கோ 
இனிப்பும் காரமும்...  

அத்தனையும் முடித்து 
பாதம் வலிப்பது கூட தெரியாமல்
உறங்கித்தான் போகிறேன்... 

நாளை காலை என்ன செய்வது
என்ற கேள்வியுடன்...

ஆனாலும் தன் மகள் 
செய்வது அனைத்தும் சரி
மரு மகள் செய்வது அனைத்தும்
தவறு என்பது மட்டும் ஏனோ...

shared via

Laxman bats for quality education


V.V.S. Laxman's heart is full, having played his part with finesse for the country. But the stylish Hyderabadi batsman, who hung his boots last year, wants to play the second innings of his career with equal measure. For education.

Laxman shared his plans of starting a school and a sports academy with the students during the Face-to-Face at the GRD School of Commerce and International Business here on Thursday.

"It is my dream. I want to set up a school with sound infrastructure and, with it, promote lots of activities. The Academy will feature various disciplines but my primary focus will be on cricket. I believe sports will help build character."

Why a school? "Because, I am passionate about education. I am lucky because I learnt a lot through cricket. I learnt from both the good and bad experiences on and off the field. And, I am very proud that my cricketing life helped me progress as a person," said Laxman, who gave up pursuing a career in medicine for cricket.

"My parents are doctors. Obviously, they wanted me to become one. And, I almost got enrolled in a medical college but then I made the toughest decision in my life - to become a cricketer. It was a big gamble but it paid off," he added.

Laxman did not wish to chase anybody's dream except his own. "Knowing what you want to be is important and I did that pretty early. I grabbed all the opportunities that came my way and, by 17, started playing for Hyderabad. I am not from a wealthy family. So coming up from there and playing the game for my country for almost 16 years was a great achievement. If I can do it from a background which had no evidence for cricket then all of you can achieve likewise," he said.

He played the role of a smooth operator right through.

He showed terrific temperament when required and cut, flicked and glided with grace much to the delight of the crowd.

Later, Laxman spoke about the three D's and the one 'P' that he followed religiously in life.

"They are decision-making, dedication and determination. These are the qualities that separate the ordinary from the extraordinary. 'P' is the pride in the every move you make. We had it in us - the pride of doing something for our country and that is what took Indian cricket forward as well."

A good timer of the ball, the 'Very, Very Special' Laxman said he always wanted to be a leader. "My role model was my dad but my favourite leader was the Mahatma [Gandhi]. He preached non violence but had the power in him and quite easily earned the support of his countrymen. From the cricketing point of view, Sachin is right up there. Both share the same quality. They had no egos and did not look for post or position."

In terms of competitive cricket, "who was the toughest bowler you had faced," a student asked. Pat came the reply: "Wasim Akram" (the former left-arm fast bowler from Pakistan).

Laxman urged the students to become good leaders. "Because, I believe good leaders can change the world."

Thursday, October 17, 2013

Windows 7 Tips

Windows 7 Tips
by silentsounds
New
Windows 7 Tips

போஸ்டர்கள் எடுத்துக்கொள்ளும் ஹார்ட் டிரைவ்
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பல போல்டர்கள் எடுத்துக் கொள்ளும் ஹார்ட் டிஸ்க் இடம் எவ்வளவு என எளிதாகக் கண்டறியலாம். போல்டர் ஒன்றின் ஐகான் மீதாக, மவுஸின் கர்சரை சிறுது நேரம் வைத்திருந்தால், உடன் ஒரு பாப் அப் விண்டோ கிடைக்கும். அதில் போல்டரில் உள்ள அனைத்து பைல்களும் ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக் கொண்டுள்ள இடம் எவ்வளவு என்று காட்டப்படும். இதன் மூலம் குறிப்பிட்ட போல்டரை எப்படிக் கையாளலாம், ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை எப்படி மற்ற வற்றுடன் பங்கிட்டுக் கொள்ளலாம் என நமக்கு ஒரு மதிப்பீடு கிடைக்கும்.

ஆனால், சிலருக்கு ஹார்ட் டிஸ்க் இடம் கிட்டத்தட்ட காலியான நிலைக்குச் சில வேளைகளில் வந்துவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலை களில் எந்த பைல்களைக் காலி செய்தால், இடம் கிடைக்கும் என நாம் முயற்சி செய்வோம். இதற்கு, டிஸ்க்கில் உள்ள, ஒன்றுக்கு மேற்பட்ட குறிப்பிட்ட போல்டர்கள் எடுத்துக் கொண்டுள்ள இடம் எவ்வளவு என அறிய வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக, பல பயனற்ற புரோகிராம்களை அல்லது அதிகம் பயன்படுத்தாத புரோகிராம்களை பதிந்து வைத்திருப்பீர்கள். உங்களுடைய விண்டோஸ் 7, 64 பிட் பதிப்பாக இருந்தால், புரோகிராம்கள் "Program Files" மற்றும் "Program Files (x86) folders" ஆகிய போல்டர்களில் இருக்கும். இந்த போல்டர்கள் பயன்படுத்தும் மொத்த ஹார்ட் டிஸ்க்கின் இடத்தினை எளிய வழி மூலம் அறியலாம்.

1. முதலில் எக்ஸ்புளோரர் விண்டோவில், ஒன்றுக்கு மேற்பட்ட போல்டர்களைத் தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே, தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய போல்டர்களை அடுத்தடுத்து கிளிக் செய்திடவும்.

2. பின்னர், அவற்றின் மீது, ரைட் கிளிக் செய்து "Properties" தேர்ந்தெடுக்கவும். அல்லது, கீ போர்டில் ரைட் கிளிக் கீ மற்றும் "R" கீகளை அழுத்தவும். இப்போது ஒரு பாப் அப் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

3. விண்டோஸ் 7, தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த போல்டர்கள் ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக் கொள்ளும் இடத்தினைக் கணக்கிடும் வரை பொறுத்திருக்கவும். இந்த தகவல்கள் கிடைத்தவுடன், அவற்றின் அடிப்படையில், ஹார்ட் டிஸ்க்கில் பைல்களை நீக்கி, இடத்தை உருவாக்கலாம்.

புரோகிராம்களை மூட இரண்டு கிளிக்
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், விண்டோக்களையும், அப்ளிகேஷன் புரோகிராம்களையும் இரண்டு மவுஸ் கிளிக் மூலம், விரைவாக மூடிவிடலாம். எந்த ஒரு அப்ளிகேஷன் புரோகிராம் விண்டோவின், இடதுபுறம் மேலாக அதன் ஐகான் தெரியும். அதன் மீது கிளிக் செய்து, கிடைக்கும் பாப் அப் மெனுவில், "Close" என்பதனைத் தேர்ந்தெடுத்தால், விண்டோ மூடப்படும். இன்னும் விரைவாக மூட வேண்டும் எனில், அதே ஐகானில், இரண்டு முறை கிளிக் செய்திடவும். எக்ஸ்புளோரர் விண்டோவில், புரோகிராம் ஐகான் காட்டப்படாமல் இருந்தால் என்ன செய்வது? என்ற கேள்வி எழலாம். மற்றவற்றில் எங்கு இடம் பெற்றுள்ளதோ, அதே இடத்தில் மவுஸால் கிளிக் செய்திடவும். பாப் அப் மெனு கிடைக்கும். அல்லது, மேலே கூறியபடி, இருமுறை கிளிக் செய்தால், விண்டோ மூடப்படும்.
டாஸ்க்பாரை நகர்த்த
அனைத்து விண்டோஸ் சிஸ்டங்கள் இயங்குவது போல, விண்டோஸ் 7 சிஸ்டமும், டாஸ்க் பாரினை திரையின் கீழாக அமைக்கும். இது போல அமைவதனையே, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். இயக்க வசதியாக இருப்பதாக உணர்கின்றனர். ஆனால், இப்போது விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கியுள்ள பலர், குறிப்பாக மேக் போன்ற வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள், டாஸ்க்பாரினை, மேல், இடது அல்லது வலது புறமாக வைத்து செயல்பட விரும்புகின்றனர். இதனை எப்படி நகர்த்தி அமைக்கலாம் என்று பார்க்கலாம். இதற்கு விண்டோஸ் 7 இரண்டு வழிகள் தருகிறது.

1. டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பாப் அப் மெனுவில், "Lock the taskbar" என்பதில் உள்ள டிக் அடையாளத்தின் மீது மவுஸ் கிளிக் செய்வதன் மூலம், அதனை நீக்கவும். டிக் அடையாளம் இல்லாமல் இருந்தால், அப்படியே விட்டுவிடவும்.

2. இனி, டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில், மவுஸின் இடது பட்டனைக் கிளிக் செய்து, அப்படியே அழுத்தியவாறு வைக்கவும். பட்டன் கீழாக அழுத்தியபடியே இருக்க வேண்டும். பின்னர், டாஸ்க் பாரினை அப்படியே எந்த பக்கம் வேண்டுமானாலும் நகர்த்தி விட்டுவிடலாம்.

3. நீங்கள் விட்டுவிட்ட இடத்திலேயே டாஸ்க் பார் இருக்க வேண்டும் எனில், மீண்டும் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் "Lock the taskbar" தேர்ந்தெடுத்து அதில் டிக் அடையாளம் அமைக்கவும்.

இன்னொரு வழியும் உள்ளது.

டாஸ்க் பார் லாக் எடுத்து, பின்னர், டாஸ்க்பாரினை இழுத்து அமைக்கும் வேலைக்குப் பதிலாக, காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் பாப் அப் விண்டோவில், "Properties" தேர்ந்தெடுக்கவும்.

2. "Taskbar and Start Menu Properties" டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் "Taskbar location on screen" என்பதனை அடுத்து கிளிக் செய்து, கீழ்விரி பட்டியலைப் பெறவும். இங்கு "Bottom", "Left", "Right", மற்றும் "Top" என நான்கு ஆப்ஷன் கிடைக்கும். உங்களுக்கு எங்கு டாஸ்க் பார் இருக்க வேண்டுமோ, அங்கு நிலை நிறுத்தலாம். தேர்ந்தெடுத்து அமைத்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
விண்டோஸ் மாற்ற மவுஸால் தொடு
ஒரு விண்டோவில் செயல் பட்டுக் கொண்டிருக்கையில், இன்னொரு விண்டோவின் இயக்கத்திற்குச் செல்ல வேண்டும் எனில், அந்த விண்டோவில், மவுஸால் கிளிக் செய்வோம்; டாஸ்க்பாரில் அதன் ஐகானில் கிளிக் செய்து தேர்ந்தெடுப்போம். அல்லது ஆல்ட் மற்றும் டேப் கீகளை அழுத்தி, குறிப்பிட்ட விண்டோவிற்குச் சென்று மவுஸால் அழுத்துவோம்.

இந்த வேலைகள் இல்லாமல், எளிதாக, அடுத்த விண்டோவிற்கு மாறும் வழி ஒன்றினை விண்டோஸ் 7 தருகிறது. அந்த விண்டோ மீது, அல்லது ஐகான் மீது, மவுஸின் கர்சரைச் சற்று நேரம் வைத்திருந்தாலே, குறிப்பிட்ட விண்டோ செயல்பாட்டுக்கு வரும். இதற்கு, கர்சர் நகர்த்தலை எளிதாக இருக்குமாறு அமைக்க வேண்டும். இதற்கு,

1. "Start" மெனு கிளிக் செய்து, "All Programs", "Accessories", "Ease of Access", "Ease of Access Center" தேர்ந்தெடுக்கவும்.

2. "Ease of Access Center" விண்டோ திறந்தவுடன், கீழாகச் சென்று, "Make the mouse easier to use" என்பதில் கிளிக் செய்திடவும்.

3. கிடைக்கும் திரைக் காட்சியில், "Make it easier to manage windows", என்பதற்குக் கீழாக "Activate a window by hovering over it with the mouse" என்பதில் கிளிக் செய்திடவும்.

4. பின்னர், நீங்கள் அமைத்ததனை சேவ் செய்திட, ஓகே கிளிக் செய்து, அடுத்து "Ease of Access Center" விண்டோவினை மூடவும்.

Show commentsOpen link

pallanguzhiyin vattam parthen lyrics - பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்


Movie Name:Aanandham
Song Name:Pallanguzhiyin vattam
Singers:Unni krishnan,Harini
Music Director:S.A.Rajkumar
Lyricist:Na.Muthukumar
Cast:Mammootty,Murali,Abbas,Devayani,Rambha,Sneha
Year of release:2001

Lyrics:-

Pallanguzhiyin vattam paarthen otrai naanayam
Pullaanguzhalin thulaigal paarthen otrai naanayam
Thudikkum kangalil kanmani paarthen
Kadikaarathil neram paarthen
Sevvanthi poovil naduvil paarthen
Dhesiya kodiyil sakkaram paarthen
Iravil oru naal pournami paarthen
Otrai naanayam

Pallaanguzhiyin vattam ....

Adi kaalam muzhuvathum kaathiruppen
Nee kaanum idathinil poothiruppen
Adi otrai roobaai pakkam irandum
Endhan anbu sernthirukkum nenjil vaithu kaathiru

Thanga aabaranam ondrum thevai illai
Indha naanayam podhadha
Thazhuvum manathai kunguma simizhil
Padhukka mudiyatha
Selava seethaname nee sirikkaiyile
Pala sillarai sidhari vidum
Selavu seiya ninaithaal kooda idhayam padhari vidum

Pallaanguzhiyin vattam ....

Ada netru nadanthathu naadagama
Nee kaasu koduthathu soosagama
Ada otrai roobaai pakkam irandu
Enna solla kaasu thanthaai enni enni paarkiren

Adi perazhage unnaich sernthidave
Indha naanayam oar saatchi
Irukkum uyire unakku ubayam edharku aaraaichi
Intha naanayathil unnai paarthiruppen
Pirar paarkkavum vida maatten
Kadavul vanthu kettaal kooda kaanikkai ida maatten

Pallaanguzhiyin vattam ....

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்
நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்
அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்
எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்து காத்திரு

தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை
இந்த நாணயம் போதாதா
தழுவும் மனதை குங்கும சிமிழில் பதுக்க முடியாதா
செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே
பல சில்லரை சிதறிவிடும்
செலவு செய்ய நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

அட நேற்று நடந்தது நாடகமா
நீ காசு கொடுதது சூசகமா
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு
என்ன சொல்ல காசு தந்தாய் எண்ணி எண்ணி பார்கிறேன்

அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி
இருக்கும் உயிரே உனக்கு உபயம் எதற்கு ஆராய்சி
இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன்
பிறர் பார்க்கவும் விட மாட்டேன்
கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்

பல்லாங்குழியின் வட்டம் ....


http://www.youtube.com/watch?v=HIbgQ79bA7U

Wednesday, October 16, 2013

Ajith's requests no heroism and punches in Arrambam to SuBha

Ajith's requests no heroism and punches in Arrambam to SuBha

by 1

Writers SuBa has created the space for themselves in the Tamil film industry. The Kollywood had rediscovered the art of 'script writing' through this twin writers Suresh and Bala.

default-disqus
Show commentsOpen link

Tuesday, October 15, 2013

பவர் ஸ்டாரை கழற்றிவிட்ட சந்தானம், கூட்டணி power star and santhanam

பவர் ஸ்டாரை கழற்றிவிட்ட சந்தானம், கூட்டணி

by admin
TamilSpyToday,

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்திற்கு பிறகு அந்த படத்தில் நடித்த சந்தானம், சேது, விஷாகா ஆகிய மூவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு 'வாலிப ராஜா' என்று பெயர் வைத்திருக்கின்றனர். இப்படத்தில் சந்தானம் மனநல மருத்துவராகவும், சேது டிசைனராகவும், விஷாகா மனநல மருத்துவம் படிக்கும் மாணவியாகவும் வருகிறார்.

மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகை நுஸ்ரத் என்பவரும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாய் கோகுல் ராம்நாத். இவர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்தவர்.

சென்னை, பாண்டிச்சேரியில் இதுவரை 26 நாட்கள் படமாக்கியுள்ளனர்.

இன்னும் மதுரை, குற்றாலம் ஆகிய இடங்களுக்கும் சென்று மீதி படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' பட கூட்டணி என்று சொன்னாலும், அந்த படத்தில் நடித்த பவர் ஸ்டார் சீனிவாசன் இந்த படத்தில் நடிக்கவில்லை.

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் வெற்றிக்கு பவர் ஸ்டார் சீனிவாசனும் ஒரு காரணமாக இருந்தவர். அதன்பிறகு, பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறை சென்றதால், இந்த படத்தில் இருந்து அவர் கழற்றி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Show commentsOpen link

Santhanam is Vaaliba Raja!

Santhanam is Vaaliba Raja!

Galatta : Today,

After the super hit success of Kanna Laddu Thinna Aasaiya, many people have been waiting to see Santhanam playing the lead again. Now, we have information that Santhanam and his KLTA team will be coming together again in a new movie titled Vaaliba Raja, under debutant director Sai Gokul Ramnath, a former assistant of KV Anand. Santhanam playing the titular role will be joined by Sethu and Vishaka Singh and another female lead will be B-town's Nushrath.

The movie will have Santhanam as a psychiatrist, Sethu as a designer and Vishaka as a Psychiatry student. Touted to be a full-on family entertainer, over 50% of the movie has been shot in 26 days. The remaining portions of the movie are to be shot in Madurai and Kuttralam. Rathan is in charge of music. Vaaliba Raja is being made under the Wangs Vision One banner.

Show commentsOpen link

Monday, October 14, 2013

மைக்கல் ஜாக்சன் சாதனையை முறியடித்த அக்*ஷ michel jackson record broken

மைக்கல் ஜாக்சன் சாதனையை முறியடித்த

மைக்கல் ஜாக்சன் சாதனையை முறியடித்த அக்*ஷய் குமார்

மைக்கேல் ஜாக்சனின் சாதனையை முறியடித்திருக்கிறார் பாலிவுட்டின் சூப்பர் நாயகன் அக்*ஷய் குமார்.

பாலிவுட்டில் அக்*ஷய் குமார் நாயகனாக நடித்துள்ள படம் பாஸ்.
மலையாள மெகாஸ்டார் மம்முட்டி நடித்த போக்கிரி ராஜா என்ற படம்தான் இந்தியில் பாஸ் என்ற பெயரில் ரீமேக் ஆகி விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர் உலகிலேயே பெரிய போஸ்டர் என்று கின்னஸ்ஸில் இடம் பிடித்திருக்கிறது.

இதுவரை இந்த சாதனையை தக்க வைத்துக் கொண்டிருந்தது மைக்கேல் ஜாக்சனின் திஸ் ஈஸ் இட் என்ற டாகுமென்டரி படத்தின் போஸ்டர் தான்.

பாஸ் படத்தின் விளம்பரத்துக்காக அக்*ஷய் குமாரின் ரசிகர்கள் உருவாக்கியிருக்கும் போஸ்டர் 58.87 மீற்றர் அகலமும், 59.94 மீற்றர் உயரமும் கொண்டதாகும்.

இது ஜாக்சன் உருவாக்கிய போஸ்டரை விட பெரியது.
இதில் வேடிக்கை என்னவென்றால் மைக்கேல் ஜாக்சனுக்காக போஸ்டரை டிசைன் செய்து உருவாக்கிய அமெரிக்காவிலுள்ள மாக்ரோ ஆர்ட்ஸ் நிறுவனம் தான் பாஸ் படத்திற்கான இந்த பிரம்மாண்ட போஸ்டரையும் வடிவமைத்துள்ளது.

shared via

Saturday, October 12, 2013

கொலைகாரர்களாக மாறும் மாணவர்கள்: தடம் மாறும் தலைமுறையை திருத்துவது எப்படி? Students will become killers How to edit track generation

கொலைகாரர்களாக மாறும் மாணவர்கள்: தடம் மாறும் தலைமுறையை திருத்துவது எப்படி? Students will become killers How to edit track generation

Tamil News

வகுப்பறையில் துப்பாக்கியால் சுட்டு ஆசிரியர் கொலை மாணவன் வெறிச்செயல்...

இப்படிப்பட்ட சம்பவங்கள் வெளிநாடுகளில் எங்காவது நடப்பது உண்டு. அவை ஒரு சிறு செய்தியாக நம்மூர் பத்திரிகைகளில் இடம் பிடிக்கும். எங்கோ கண்ணுக்கு தெரியாத தேசத்தில் நடைபெற்ற இந்த சம்பவங்களை கேட்டாலே நம் நெஞ்சும் பதறியது.

நம் கண்முன்னால் பாதை மாறி செல்லும் மாணவர் சமுதாயத்தை பார்த்து பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் ரத்த கண்ணீர் வடிக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கீழவல்ல நாட்டில் உள்ள குழந்தை ஏசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் சுரேஷ் மாணவர்களாலேயே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது தமிழகதத்தையே அதிர்ச்சியல் உறைய வைத்துள்ளது.

மாணவிகளை கிண்டல் செய்தது, கல்லூரியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது போன்ற காரணங்களுக்காக டேனிஸ், பிரபாகரன் ஆகிய இரு மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நண்பர் பிச்சைக்கண்ணுவுடன் சேர்ந்து கல்லூரி வளாகத்திலேயே போட்டு தள்ளிவிட்டார்கள்.

அடுத்த ஆண்டில் சிவில் என்ஜினீயர், ஏரோநாட்டிகல் என்ஜினீயர் என்ற பட்டங்களோடு கல்லூரியை விட்டு வெளியே வரவேண்டியவர்கள் 'கொலைகாரன்' என்ற பட்டத்தோடு ஜெயிலுக்குள் சென்று இருக்கிறார்கள்.

சென்னை பாரிமுனையில் 9–ம் வகுப்பு மாணவன் பள்ளி வகுப்பறையிலேயே உமா மகேசுவரி என்ற ஆசிரியையை குத்தி கொலை செய்தான்.

சென்னை கல்லூரி செல்லும் மாணவர்களில் சிலர் நோட்டு புத்தகங்களை எடுத்து செல்ல மறந்தாலும் கத்தி எடுத்து செல்ல மறப்பதில்லை. மோதல்கள் தொடக்க நிலையாகவே உள்ளது.

அடிக்கடி கத்தியுடன் மோதி கொள்ளும் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. பல கல்லூரிகள் போலீஸ் பாதுகாப்புடனேயே செயல்படுகிறது.

வல்ல நாட்டில் கல்லூரி முதல்வர் சுரேஷ் சிந்திய ரத்தம் காய்வதற்குள் புதுக்கோட்டை தனியார் கல்லூரி முதல்வர் சிபி செல்லையாவுக்கு சந்தன மாரியப்பன், விக்னேஷ் என்ற இரு மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்.

அவர்கள் இருவரும் மாணவிகளை கேலி செய்ததால் பெற்றோரை அழைத்து வரும்படி சிபி செல்லையா கூறி இருக்கிறார். காசு கொடுத்து இவர்தான் என் மாமா என்று ஒருவரை 'செட்டப்'செய்து அழைத்து சென்று இருக்கிறார்கள். அதை முதல்வர் கண்டுபிடித்து கண்டித்துள்ளார். இது தான் அந்த மாணவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம்.

வாழ்க்கையில் எந்த உயரத்தில் இருந்தாலும் கற்று தந்த ஆசிரியரை பார்த்தால் கைகூப்பி வணங்கி மரியாதை செலுத்தும் பண்பாடு நிறைந்தது தமிழ்நாடு...

ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமே தனது ஆசிரியர்களை இன்றளவும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தி வருவதே அதற்கு ஒரு உதாரணம்.

அந்த பண்பு கொஞ்சம் கொஞ்சமாய் சிதைகிறதே...!

புத்தக பைகளுக்குள் அரிவாளும், கத்தியும் குடிபுகுந்து விட்டதே...!

புத்தியை தீட்ட வேண்டியவர்கள் கத்தியை தீட்ட துணிந்துவிட்டார்களே...! எங்கே செல்லும் இந்த பாதை?

எத்தனையோ கனவுகள்... ஆசைளுடன்... ஒவ்வொரு பிள்ளையையும் பெற்றோர்கள் பள்ளி, கல்லூரிக்கு அனுப்புகிறார்கள்...

ஆனால் மாணவர்கள் தங்கள் லட்சியத்தை மறந்து போகிறார்கள். குடிபழக்கம், ஆடம்பர வாழ்க்கையில் சிக்கி சீரழிகிறார்கள்

குடிப்பதே பேஷன்... தாதா போல் காட்டிக் கொள்வதே கவுரவம்... என்ற மனோபாவம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் படிப்பின் மீது மோகம் குறைகிறது.

இதை தவறு என்று யார் தடுத்தாலும் அவர்களை ஒரு கை பார்த்து விடுவது... என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.

ஓய்வு நேரத்தில் மாணவர்கள் நல்ல புத்தகங்களை படிக்கும் எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைந்து விட்டது.

சினிமா, கோளிக்கை என்று பொழுதை கழிக்கிறார்கள். இவை எல்லாமே அவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனையை மழுங்கடிக்கிறது.

உளவியலாளர்கள் பல்வேறு குறைகளை சுட்டி காட்டுகிறார்கள். குழந்தைகளை வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். சிறு வயதிலேயே நல்ல பழக்க வழக்கங்களை கற்று தர வேண்டும். இப்போதைய சூழ்நிலையில் மாணவர்களின் மனகட்டுப்பாட்டுக்கு தியானம் அவசியம். பள்ளி பருவத்தில் இருந்தே இதை கட்டாயமாக்க வேண்டும் என்கிறார்கள்.

பள்ளி, கல்லூரிகளில் சாதி, மதம் என்ற நச்சு விதைகளும் விதைக்கப்படுகிறது. இதுவும் மாணவர்களை தவறான பாதைக்கு இழுக்கிறது.

சச்சின் டெண்டுல்கர் எத்தனையோ சாதனைகள் படைத்துவிட்டு கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறார். அவருக்காக கண்ணீர் வடிக்கிறான். தன் மானசீக நடிகரின் படம் தோல்வியை தழுவினால் அழுகிறான். வெற்றி பெற்றால் பாலாபிசேம் செய்கிறான்.

கட்சி தலைவர்களுக்காக உயிரையும் பணயம் வைத்து ரோட்டுக்கு வந்து போராடுகிறான். தன் வாழ்ககை பற்றி மட்டும் சிந்திக்க மறந்துவிடுகிறானே...

மாணவர்களை திருத்துவதற்காக ஆசிரியர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அவர்களின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றால் மாணவர்கள் 'எக்கேடும் கெட்டு போகட்டும்' என்ற மனநிலைக்கு அவர்கள் சென்று விடுவார்கள். இது நாட்டுக்கே பேராபத்து.

உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தனியார் கல்லூரி ஆசிரியர்களும் போராட்ட களத்தில் இறங்கி இருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் 21–ந் தேதி வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

பசுமையான நெல்வயலில் ஒரு சில பதர்களும் முளைக்கத்தான் செய்யும். அவற்றை பிடுங்கி வீசிவிட்டு பயிரை காக்கும் கடமையை செய்ய அனைவரும் முன்வர வேண்டும்.

சில கல்லூரிகளில் அபராதம், கெடுபிடிகள், பெற்றோரை அழைத்து அவமானப்படுத்துதல் போன்ற சம்பவங்களும் நடைபெறுகிறது. இதுவும் மாணவர்களை எல்லை மீற செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாறி வரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களை நல்வழிப்படுத்தும் புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

இந்த நாடே இருக்குது தம்பி'

...
Show commentsOpen link

Monday, October 7, 2013

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்… tips for blood

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…

by பாட்டு ரசிகன்

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? 

இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். 

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது. 

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. 

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. 

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. 


இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். 

இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். 

மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். 

இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும். 

இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். 

விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்

Show commentsOpen link

Tuesday, October 1, 2013

மாத ராசிபலன் – 2013, அக்டோபர் 1 முதல் 31 வரை rasipalan october

மாத ராசிபலன் – 2013, அக்டோபர் 1 முதல் 31 வரை

by admin

மாத ராசிபலன் – 2013, அக்டோபர் 1 முதல் 31 வரை
மேஷம்:

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

6-ல் சூரியன் உலவுவது சிறப்பாகும். குரு 3-ல் அமர்ந்து 7, 9, 11-ஆம் இடங்களைப் பார்ப்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். வாழ்க்கைத்துணைவரால் அளவோடு நலம் உண்டாகும். தந்தையால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். தொலைதூரப் பயணம் பயன்படும். உங்களைக் காட்டிலும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.
2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். பண நடமாட்டம் சற்று அதிகரிக்கும். கலைத்துறையினருக்குப் பிரச்னைகள் விலகும். முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கை நிகழும். பேச்சில் இனிமை கூடும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பெண்களால் அனுகூலம் உண்டாகும். 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. என்றாலும் ராசிநாதன் என்பதால் பணவரவு சற்று கூடும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

17-ஆம் தேதி முதல் சூரியன் 7-ஆமிடம் மாறி, சனி, ராகு ஆகியோருடன் இணைவது குறை. மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் சங்கடங்களும், மன அமைதிக்குறைவும் ஏற்படும். தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். அரசாங்கத்தாரால் பிரச்னைகள் சூழும். ஸ்பெகுலேஷன் துறைகளால் அதிகம் பயனிராது. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். கெட்டவர்களின் தொடர்பை விட்டு விலகுவது நல்லது. 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறுவது விசேடமாகும். சுக்கிரனும் குருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். செல்வநிலை உயரும். மன மகிழ்ச்சி கூடும்.
பரணி நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் அதிகமாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 11, 14, 18, 22, 23, 29.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.
எண்கள்: 1, 6.

ரிஷபம்:

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

செவ்வாய், புதன், குரு, சனி, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் பேச்சாற்றலும், செயல்திறமையும் வெளிப்படும். குடும்ப நலம் சிறக்கும். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் கூடிவரும். பண நடமாட்டம் அதிகமாகும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உருவாகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிட்டும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவுவார்கள். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மதபோதகர்கள், மேடைப் பேச்சாளர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

வியாபாரிகளுக்கு லாபம் கூடும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். பொது நலப்பணியாளர்களுக்குவரவேற்பு கூடும். செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், கச்சாப் பொருட்கள் ஆகியவை லாபம் தரும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களால் ஆதாயம் பெருகும். சுக்கிர பலம் மாதம் முழுவதும் சிறப்பாக இல்லாததால் கலைத்துறையினருக்குச் சோதனைகள் சூழும். மாதர்களுக்கு அனுகூலமிராது. கேளிக்கை, உல்லாசங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது.

5-ஆம் தேதி முதல் செவ்வாய் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. அலைச்சல் அதிகமாகும். செலவுகள் கூடும். சுகம் குறையும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும்.
தந்தையால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். மறைந்த, தொலைந்த பொருள் கிடைக்கும். ஆராய்ச்சியாளர்கள் புகழ் பெறுவார்கள்.
ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலமான மாதமிது.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 9, 11, 14, 18, 22, 23, 29.
திசைகள்: மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்மேற்கு.
எண்கள்: 3, 4, 5, 8, 9.

மிதுனம்:

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். குரு ஜன்ம ராசியில் உலவினாலும் அவரது பார்வை 5, 7, 9-ஆம் இடங்களுக்கும், சனி, ராகு ஆகியோருக்கும் பதிவதால் நலம் உண்டாகும். சுக்கிரனுடன் புதன், சனி ஆகியோர் கூடியிருப்பது ஒருவகையில் சிறப்பாகும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உங்களைத் தேடிவரும் நேரமிது. மக்களால் நலம் பல பெறுவீர்கள். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். எதிரிகள் அடங்கிப் போவார்கள்.

மந்திர, தந்திர, யந்திர வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். சிலருக்கு மந்திர சித்தியும் கிடைக்கும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்னைகள் தலைதூக்கும். 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ஆமிடம் மாறி வலுப்பெறுவதால் மனத்துணிச்சல் அதிகமாகும். செயலில் வேகம் பிறக்கும். சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.

17-ஆம் தேதி முதல் சூரியன் 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. பெற்றோருக்கும் மக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். செய்து வரும் தொழிலில் முழு அக்கறை தேவை. 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 7-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. வாழ்க்கைத்துணை நலனில் அக்கறை தேவை. ஆடவர்களுக்குப் பெண்டிரால் பிரச்னைகள் ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கேளிக்கை, உல்லாசங்களைக் குறைத்துக் கொள்ளவும். வயிறு, மார்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும்.
திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் கூடும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 9, 11, 14 (இரவு), 18, 22, 23, 29.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
எண்கள்: 6, 7.

கடகம்:

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும், 4-ல் புதனும் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். அரசியல்வாதிகளுக்கும், அரசுப்பணியாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். மாணவர்களது திறமை வெளிப்படும். விற்பனைப் பிரதிநிதிகள், கமிஷன் ஏஜண்டுகள் ஆகியோர் அதிக லாபம் பெறுவார்கள்.

கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது நிலை உயரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு உண்டாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். சொத்துக்கள் சேரும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும்.
5-ஆம் தேதி முதல் செவ்வாய் 2-ஆமிடம் மாறுவதால் பண வரவு கூடும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. உடல்நலனில் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். வீண்வம்பு வேண்டாம்.
அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. குரு 12-ல் இருப்பதால் சுப காரியச் செலவுகள் கூடும். தர்மப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்வீர்கள். 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. பெண்களாலும், உற்றார், உறவினர்களாலும் சங்கடங்கள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

பூசம், ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 9, 11, 14 (பகல்), 18, 22, 23, 29.
திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
எண்கள்: 1, 5, 6, 7.
சிம்மம்:

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

உங்கள் ஜன்ம ராசிக்கு 3-ல் சுக்கிரன், சனி, ராகு ஆகியோரும், 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். முயற்சி வீண்போகாது. திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைத்துவரும். தகவல்தொடர்பு துறைகள் ஆக்கம் தரும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் நலம் பல உண்டாகும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நற்பெயர் கிட்டும். தொழிலாளர்களது கோரிக்கைகளில் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும்.
விவசாயிகளுக்கு மகசூல் அதிகமாகும். லாபம் பெருகும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் அதிக லாபம் தரும். பயணத்தின் மூலம் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மதபோதகர்கள், ஆகியோர் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். பொன் நிறப் பொருட்கள் லாபம் தரும். தெய்வப் பணிகள் நிறைவேறும். குருவருளும் திருவருளும் உண்டாகும். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவதால் புதிய பொருட்சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சுகானுபவம் உண்டாகும்.

5-ஆம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் புதிய சொத்துக்கள் சேரும். மனதில் துணிவு பிறக்கும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 3-ஆமிடம் மாறுவதால் அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புத பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். பேச்சில் நிதானம் தேவை. 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் மேலும் கூடும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும்.

பூர நட்சத்திரக்காரர்களுக்கு சுபிட்சம் கூடும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 9, 11, 14, 22, 23, 29.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, மேற்கு.
எண்கள்: 3, 4, 6, 8.

கன்னி:

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

உங்கள் ஜன்ம ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும், 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். பணவரவு அதிகமாகும்.

முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். பேச்சாற்றல் வெளிப்படும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருமானம் கிடைத்துவரும். கொடுக்கல்-வாங்கல் சீராகும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தரகர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், கலைஞர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

பெண்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும்.

இயந்திரப்பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வீண் செலவுகளும் இழப்புகளும் உண்டாகும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.

17-ஆம் தேதி முதல் சூரியன் 2-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. கண், வாய், முகம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவதால் சுகம் கூடும். புதிய பொருட்கள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் காண வழிபிறக்கும்.

ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் அதிகமாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 9, 11, 14, 18, 22, 23, 29.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.
எண்கள்: 5, 6, 9.

துலாம்:

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் வலுத்திருக்கிறார். செவ்வாய், குரு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் தோற்றப்பொலிவு கூடும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். கலைஞானம் பளிச்சிடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். உடன்பிறந்தவர்களால் நலம் கூடும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும்.

கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் கணவன் மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பேச்சில் இனிமை கூடும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். முக வசீகரம் கூடும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 11-ஆமிடம் மாறுவதும் விசேடமாகும். செல்வ நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காண்பீர்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

17-ஆம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதும் சிறப்பாகாது. உடல்நலனில் கவனம் தேவைப்படும். பிறரால் அவமதிக்கப்பட நேரலாம். என்றாலும் குரு ஜன்ம ராசியைப் பார்ப்பதால் மோசமான நிலை என்று ஏதும் ஏற்பட்டுவிடாது. புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். போட்டிப் பந்தயங்களிலும், விளையாட்டு விநோதங்களில் வெற்றி கிட்டும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் கூடும் மாதமிது.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 11, 14, 18, 22, 23 (இரவு), 29.
திசைகள்: வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
எண்கள்: 3, 6, 9.

விருச்சிகம்:

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
உங்கள் ராசிக்கு 11-ஆமிடத்தில் சூரியன் உலவுவது விசேடமாகும். சுக்கிரனும் கேதுவும் அனுகூலமாக உலவுகிறார்கள்.

இதனால் உங்கள் மதிப்பு உயரும். நிர்வாகத்திறமை வெளிப்படும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்த காரியங்கள் இப்போது நிறைவேறும். அரசியல்வாதிகளுக்குச் செல்வாக்கு உயரும். அரசுப்பணியாளர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.

கலைஞர்கள் புகழோடு பொருளும் பெறுவார்கள். ஆன்மிகவாதிகளின் நோக்கம் நிறைவேறும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்குறையும்.
2-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் மன உற்சாகம் பெருகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு உண்டாகும். 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ஆமிடம் மாறி, வலுப்பெறுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். இயந்திரப்பணியாளர்களுக்கும் இஞ்சினீயர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை உருவாகும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.

17-ஆம் தேதி முதல் சூரியன் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. புதன், சனி, ராகு ஆகியோரும் 12-ல் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. தொழிலில் இட மாற்றம் உண்டாகும். வியாபாரிகள், தொழிலாளர்கள், போக்குவரத்துத் துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் உண்டாகும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் பண வரவு சற்று அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். குடும்ப நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். வாழ்க்கை வசதிகள் பெருகும்.

அனுஷம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகமாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 9, 11, 14, 18, 22, 23 (பகல்), 29.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
எண்கள்: 1, 6, 7.

தனுசு:

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

உங்கள் ராசிநாதன் குரு 7-ல் உலவுவது விசேடமாகும். சூரியன், புதன், சுக்கிரன், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் விசேடமான நன்மைகளைப் பெறுவீர்கள். நல்லவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புக்கள் விலகும். வழக்கில் வெற்றி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். நிறுவன, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும்.

கணவன் மனைவியிடையே கருத்து ஒற்றுமை உண்டாகும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் பெருகும். கூட்டாகத் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு இல்லறம் நல்லறமாகத் திகழும். பயணத்தால் நலம் பல உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். நீண்ட நாளைய எண்ணங்கள் ஒன்றிரண்டு இப்போது இனிது நிறைவேறும்.
2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறுவது நல்லதே. சுப காரியச் செலவுகள் கூடும். வாழ்க்கை வசதிகள் பெருகும். நல்ல கனவு காண்பீர்கள். 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 9-ஆமிடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டோன் 9-ல் உலவும் நிலை அமைவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 11-ஆமிடம் மாறுவதால் அரசுப் பணிகள் நிறைவேறும். தந்தையால் அனுகூலம் ஏற்படும். 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு மாறுவதால் புதிய பொருள் சேரும். ஆதாயம் கூடும். மன உற்சாகம் பெருகும்.
பூராட நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 11, 14, 18, 22, 23, 29.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, வடகிழக்கு. .
எண்கள்: 1, 3, 4, 5, 6, 8

மகரம்:

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

புதன், சுக்கிரன், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். தோற்றப்பொலிவு கூடும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மாதர்களது எண்ணம் ஈடேறும். மாணவர்களது நோக்கம் நிறைவேறும். வெளிநாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்பு சிலருக்கு கிட்டும். வெளிநாட்டு வேலைக்குக் காத்திருப்பவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவதால் மக்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். ஆடவர்களுக்குப் பெண்டிரால் அனுகூலம் உண்டாகும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். வாழ்வில் சுபிட்சம் கூடும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும்.

5-ஆம் தேதி முதல் செவ்வாய் 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. எரிபொருள், மின்சாரம், கூரிய ஆயுதம், இயந்திரம் ஆகியவற்றின்பக்கம் நெருங்கும்போது பாதுகாப்பு தேவை. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். 17-ஆம் தேதி முதல் சூரியன் 10-ஆமிடம் மாறுவது நல்லது. அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். தந்தையால் ஓரளவு நலம் ஏற்படும். 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறுவதால் சுபச் செலவுகள் கூடும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் சேரும்.

திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் கூடும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 6, 7, 9, 11, 14, 18, 22, 23.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, மேற்கு, தென்கிழக்கு.
எண்கள்: 4, 5, 6, 8.

கும்பம்:

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
உங்கள் ராசிக்கு 5-ல் குரு உலவுவது சிறப்பாகும். செவ்வாய், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் புத்திசாலித்தனம் பளிச்சிடும். மன உற்சாகம் பெருகும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்கள் ஆக்கம் தரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். ஆன்மிகவாதிகளுக்கு வரவேற்பு கூடும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்களுக்கும் இஞ்சினீயர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும்.
சாதுக்கள், மகான்கள், சித்தர்கள் ஆகியோரது தரிசனம் கிட்டும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும்.
கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். ஆசிரியர்களது நிலை உயரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 10-ஆமிடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் செய்தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 7-ஆமிடம் மாறுவதால் வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவைப்படும். கூட்டாளிகளால் பிரச்னைகள் சூழும்.

17-ஆம் தேதி முதல் சூரியன் 9-ஆமிடம் மாறுவதால் தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். எதிர்ப்புக்கள் இருக்கும். என்றாலும் 9-ஆமிடத்தையும், 9-ல் உள்ள கிரகங்களையும் குரு பார்ப்பதால் மோசமான நிலை என்று ஏதும் ஏற்படாது. 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவதால் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். சுகம் கூடும். பெற்றோர் நலம் சீராகும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனத்தில் தெளிவு பிறக்கும்.

சதய நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகமாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 6, 7, 9, 11, 14, 18, 22, 23, 29.
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
எண்கள்: 3, 6, 7, 9.

மீனம்:
- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். தோற்றப்பொலிவு கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். நடுநிலையாளர்கள், தரகர்கள், கமிஷன் ஏஜண்டுகள் ஆகியோர் வளர்ச்சி காண்பார்கள்.

4-ல் உள்ள குரு 8, 10, 12-ஆம் இடங்களைப் பார்ப்பதால் பிரச்னைகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். மாமூலான காரியங்கள் சீராக நடந்துவரும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடன்பிறந்த சகோதரியால் நலம் ஏற்படும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ஆமிடம் மாறுவதால் மனத்துணிவு அதிகமாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். எரிபொருட்கள், மின்சாதனங்கள், வெடிப்பொருட்கள், தளவாடங்கள் ஆகியவற்றின்மூலம் ஆதாயம் பெற வாய்ப்பு உண்டாகும்.

17-ஆம் தேதி முதல் சூரியன் 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. மறைமுக நோய்நொடி உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கம் கூடும். தந்தையாலும், அரசாங்கத்தாராலும் பிரச்னைகள் சூழும். மறைமுக எதிரிகள் இருப்பார்கள். என்றாலும் சமாளிப்பீர்கள். புதியவர்களை நம்பி எக்காரியத்திலும் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. தொலைதூரத் தொடர்பின்போது விழிப்புத் தேவை. 30-ஆம் தேதி முதல் சுக்கிரன் 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. தொழில் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.
உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகமாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 2, 4, 9, 11, 14, 18, 22, 23, 29.
திசைகள்:தென்கிழக்கு, வடக்கு.
எண்கள்: 5, 6.

Show commentsOpen link

Sunday, September 29, 2013

கணவர் குடும்பத்தினரின் போட்டோவை ஆபாசமாக வெளியிட்ட பெண் tamil facebook sex news

கணவர் குடும்பத்தினரின் போட்டோவை ஆபாசமாக வெளியிட்ட பெண்

by abtamil
Tamil newsToday,

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், கணவரின் குடும்பத்தாரின் படங்களை ஆபாசமாக வெளியிட்ட மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த பொறியாளரின் மனைவி அவரது கணவரின் குடும்பத்தை அவமானப்படுத்தும் நோக்கில், அவர்களது புகைப்படங்களை பேஸ்புக்கில் ஆபாசமாக வெளியிட்டுள்ளார். இதற்கு அப்பெண்ணின் தந்தையும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இதனால் பாதிப்படைந்த அந்த பொறியாளர், அவரது மனைவி மீதும், மாமனார் மீதும் போலீசில் புகார் அளித்துள்ளார்.  இதனை தொடர்ந்து போலீசில் மன்னிப்பு கேட்ட அப்பெண்ணும் அவரது தந்தையும், இதுபோல் இனி நடந்துக்கொள்ளமாட்டோமென தெரிவித்துள்ளனர். ஆனால் சில நாட்களில் மீண்டும் இவர்கள் பொறியாளரின் குடும்பத்திற்கு தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பொறியாளர் காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்ததன் பேரில் போலீசார் அவரது மனைவியையும், மாமனாரையும் கைது செய்துள்ளதாக தெரிகிறது. 

Show commentsOpen link

Saturday, September 28, 2013

பிரவுசருக்கு ஒரு குளிர் கண்ணாடி.! Cooling browser

பிரவுசருக்கு ஒரு குளிர் கண்ணாடி.!

by Marikumar

பார்த்துக் கொண்டிருக்கும் டிவி நிகழ்ச்சிகளின் போது நடுவே ஒரு சின்ன பிரேக் என்று சொல்வது போல தொடர்ந்து கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது அடிக்கடி சின்ன பிரேக் எடுத்து கொள்வது அவசியம் என்கின்றனர்.இரண்டு வகைகளில் இந்த பிரேக் வலியுறுத்தப்படுகிறது.ஒன்று அமர்தல் தொடர்பா
க!.இன்னொன்று பார்த்த‌லுக்காக!

அதாவது கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போது ஒரே இடத்தில் ஒரே மாதிரி அமர்ந்திருக்க நேர்கிறது அல்லவா! உடலுக்கு இது கேடு என்று சொல்கின்றனர்.இல்லை எச்சரிக்கின்றனர்.இடுப்பு வலியில் துவங்கி பலவித பாதிப்புகள் இதனால் ஏற்படலாம்.இப்படி கம்ப்யூட்டர் முன் பழியாக கிடப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவர்த்து அளிக்க எர்கோனாமிக்ஸ் என்னும் தனிப்பிரிவே இருக்கிறது.எர்கோனாமிக்ஸ் என்றால் அமர்தல் கலை!

இதே போல கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மானிட்டரையே பார்த்து கொண்டிருப்பதால் கண்களுக்கு களைப்பு ஏற்படுகிறது.இதை தவிர்க்க இடையிடையே கண்களுக்கு ஓய்வு தேவை என வலியுறுத்துகின்றனர். இதை நாமாக செய்ய மாட்டோம் என்று சரியான இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொள்ள உதவுவதற்கு என்றே இணையதளங்களும் செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

அதோடு 20;20 என ஒரு விதியும் உருவாக்கியுள்ளனர்.

இவை தவிர கண்களை பாதுகாப்பதற்கான குளிர்கண்ணாடியும் கூட உருவாக்கப்பட்டுள்ளது.இந்த குளிர் கண்ணாடியை நாம் மாட்டிக்கொள்ள வேண்டியதில்லை .பிரவுசருக்கு மாட்டி விடலாம்.

நீண்ட நேரமாக கம்ப்யூட்டர் மானிட்டரை பார்த்து கொண்டிருக்கும் போது அதன் பிரகாசத்தன்மை கண்களுக்கு அயர்ச்சியை உண்டாக்கும்.குறிப்பாக மீக நீளமான கட்டுரையை படிக்கும் நிலை ஏற்பட்டால் கண்களில் பூச்சி பற‌ப்பது போல உணர்வு ஏற்படலாம்.

இதை தவிர்க்க கம்ப்யூட்டர் திரையின் பிரகாசத்தை கொஞ்சம் கொஞ்சம் குறைத்து கொண்டால் படிக்கும் போது கணகளுக்கு இதமாக இருக்கும் அல்லவா? கூகுல் கூரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக உருவாக்கப்பட்டுள்ள சன் கிளாசஸ் இதை தான் செய்கிறது.

இந்த பிரவுசர் நீட்டிப்பை டவுண்லோடு செய்து கொண்டால் ,கம்ப்யூட்டரில் படிக்கும் போது அயர்ச்சியாக உணர்ந்தால் உடனே இதை கிளிக் செய்து பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தின் பிரகாசத்தை குறைத்து கொள்ளலாம்.

குளிர்கண்ணாடி வழியே பார்க்கும் போது கண்கள் கூசாமல் காட்சிகள் இதமாக தெரிவது போல இப்போது இணையதளமும் பிரகாசம் குறைந்து மங்களாக ஆனால் தெளிவாக தெரியும்.எந்த அளவுக்கு பிரகாசம் குறைய வேண்டும் என்று கூட தீர்மானித்து கொள்ளலாம்.இதற்காக நீட்டிப்பில் உள்ள கட்டத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம். கட்டத்தின் நடுவே உள்ள கர்சரை அப்படியும் இப்படியும் நகர்த்தினால் பிரகாசம் கூடும் குறையும்.

கம்ப்யூட்டரிலேயே பிரகாசத்தை மாற்றி கொள்ளும் வசதி இருக்கிறது.ஆனால் இந்த பிரவுசர் சேவை கம்ப்யூட்டரில் எந்த மாற்றமும் செய்யாமல் பிரவுசரில் மாற்றம் செய்து பார்க்கும் இணையதளத்தின் பிரகாசத்தை மங்களாக்கி தருகிறது.

அதாவது பிரவுசருக்கு குளுர்கண்ணாடியை அணிவித்து நம் கணகளுக்கு இதம் தருகிறது.

குளிர்கண்னாடி டவுண்லோடு செய்ய:

cybersimman
Share |

Show commentsOpen link

மகப்பேறு தழும்புகளை எளிதில் குறைக்க சில வழிகள்! Tamil ladies special tips

மகப்பேறு தழும்புகளை எளிதில் குறைக்க சில வழிகள்!!!

by Marikumar

கர்ப்பத்தின் போது பெரிதான வயிறு, பிரசவத்திற்குப் பின்னர் படிப்படியாக குறையும். நார்மல் டெலிவரி ஆனாலும் சரி, சிசேரியன் ஆனாலும் சரி, வயிற்றில் தழும்பு ஏற்படுவது இயல்பு. இந்த தழும்புகள் பெண்களின் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். குழந்தை பெற்ற பின், பொதுவாக எல்லோருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னை தான் தழும்புகள் என்றாலும், இது மிகுந்த மன சங்கடத்தை அளிக்கும். இத்தழும்புகளை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், இயற்கை முறையில் இவற்றை குறைக்க முடியும்.

அதிலும் இத்தகைய மகப்பேறு தழும்புகளை இயற்கையாக குறைக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அப்படி அதிசயக்க வைக்கும் சில வீட்டு வைத்தியங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வைத்தியம் இயற்கையாகவே மகப்பேறு தழும்புகளை குறைத்து, தோலில் நிறமாற்றம் பெற உதவ முடியும். எனவே மகப்பேறு தழும்புகளை போக்க விரும்புபவர், கீழே கொடுக்கப்பட்ட குறிப்புகளை முயற்சித்து பார்க்கலாம்.

எலுமிச்சையில் இயற்கையாகவே வெளுக்கும் தன்மை உள்ளது. ஆகவே தழும்புகள் உள்ள இடத்தில் எலுமிச்சை சாறு கொண்டு மசாஜ் செய்தால் தழும்புகள் மறையும்.

தழும்புகளில் ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்வது, சரும துளைகளை இறுக்கி தோல் நிறமிகளை குறைக்கும். ஆகவே தழும்புகள் குறையும்.

தக்காளி சாற்றில் உள்ள ஆன்டி ஆக்சிஜனேற்ற பண்புகள் சரும நிறத்தை குறைத்து, சேதம் உண்டாவதை தடுக்கிறது.

ஆப்ரிகாட்டை ஊற வைத்து அரைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் வாரம் மூன்று முறை தடவி வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, சருமத்தை சரிப்படுத்தி சருமத்தில் உள்ள நிறமிகளை குறைக்கிறது.

ஆலிவ் எண்ணெய் கொண்டு சருமத்தை மசாஜ் செய்யவும். இது தழும்புகளை போக்குவது மட்டுமல்லாமல், சருமத்தை ஈரப்பதமாக்கி மிருதுவாக்கும்.

ஓட்ஸை பாலில் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில தேய்க்க வேண்டும். இது தழும்புகளை குறைக்க ஒரு சிறந்த வழி. ஏனெனில் ஓட்ஸ் கொண்டு தேய்ப்பது இறந்த செல்களை நீக்கிவிடும்.

மகப்பேறு தழும்புகளை உடனடியாக மறைக்க வேண்டும் என்றால் கன்சீலர் உபயோகிக்க வேண்டும். ஏனென்றால் கன்சீலர் சரும நிறத்தை விட ஒருபடி குறைவாக இருக்கும். ஆகவே தழும்புகள் உடனடியாக மறைக்கப்படும்.

Thatstamil
Share |

Show commentsOpen link

Labels

Popular Posts